நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, November 22, 2010

பா.ம.கவுக்கு வலை வீசும் அரசியல் கட்சிகள்....

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணியை பலப்படுத்தவும், கூடுதல் கட்சிகளை இழுக்கவும் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆயத்தமாகிவிட்டன.  பா.ம.க.,வுக்கு தி.மு.க.,அதிமுக,தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலைவீசிவருகின்றன

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் - பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்- புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் களத்தில் குதித்தது. அ.தி.மு.க.,- ம.தி.மு.க., - விடுதலைச் சிறுத்தைகள் - தேசிய லீக் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், தே.மு.தி.க., தனித்தும் போட்டியிட்டதால் மும்முனை போட்டி நிலவியது.தி.மு.க., வெற்றி பெற்று, பெரும்பாலும் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. அ.தி.மு.க., தனது கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் கட்சியின் தனித்துவத்தை இழக்காமல் 69 தொகுதிகளை கைப்பற்றியது. 13 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில், ஆளுங்கட்சி கூட்டணியிடம் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்பு இழந்தது.

சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறியது. அதேபோல், விடுதலைச் சிறுத்தைகளும் அ.தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறி தி.மு.க., கூட்டணியில் இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தது.அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., - பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டு 12 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றி, கூட்டணி செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது. லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் புகையிலை கம்பனிகளுடன் கூட்டு சேர்ந்து திமுக பா.ம.க வின் தொகுதிகளில் பல கோடிகளுக்கு மேல் பணத்தை இறைத்து தோற்கடிக்கபட்டது பா.ம.க

தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம் - மனித நேய மக்கள் கட்சி -அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்- இந்திய தேசிய லீக் -தேசியவாத காங்கிரஸ்- இந்திய குடியரசு கட்சி- வன்னியர் கூட்டமைப்பு - அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி - அம்பேத்கர் மக்கள் கட்சி - மதச்சார்பற்ற ஜனதா தளம்- இந்திய தேசிய குடியரசு கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும், கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்- கிறிஸ்தவ மக்கள் கட்சி - தலித் மக்கள் முன்னணி - மறுமலர்ச்சி மக்கள் தமிழகம்- இந்திய குடியரசு கட்சி (தமிழ்நாடு)- ராஜிவ் மக்கள் காங்கிரஸ் - முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம், வன்னிய குல ஷத்ரிய நல அமைப்புகளின் மத்திய மையம் ஆகிய கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. போதாதகுறைக்கு காங்கிரஸ், பா.ம.க., - தே.மு.தி.க, ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் இடம் பெறவைத்து, "மெகா' கூட்டணியை உருவாக்கி, தி.மு.க.,வை பொது எதிரியாக காட்டவும் அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

தற்போது தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் - புரட்சி பாரதம் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் - தேசிய லீக் - உழவர் உழைப்பாளர் கட்சி - விவசாய தொழிலாளர்கள் கட்சி - தமிழ் மாநில முஸ்லிம் லீக் - மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - அருந்ததியர் மக்கள் கட்சி - எம்.ஜி.ஆர்., கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் இடம் பெற்ற கூட்டணிக் கட்சிகளான பா.ம.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை கூட்டணியில் இல்லை என்பதால், அணியை பலப்படுத்த மீண்டும் பா.ம.க., - ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை இழுக்கவும் தி.மு.க., திட்டமிட்டுள்ளது.அதேபோல் காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை, எந்த அணியில் அதிக சீட்டுகளும், ஆட்சியில் பங்கும் தருகிற கட்சிகளோடு கூட்டணி வைக்கவும் தயாரான மனநிலையில் உள்ளது.

கட்சி ஆரம்பித்த நிலையில் இருந்து தனித்து தான் போட்டி என்ற லட்சியத்துடன் களமிறங்கிய தே.மு.தி.க.., பா.ம.க,காங்கிரசு, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது அணி அமைக்கவும் விரும்புகிறது. தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் முறிவு இல்லை என்றால் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறவும் தே.மு.தி.க., திட்டமிட்டுள்ளது.

கோட்டையில் முதல்வர் கருணாநிதியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்து பேசியது, அரசியல் களத்தில் கூட்டணி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அதிரடி பேச்சு, காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.கூட்டணி ஆட்சி அமைக்கும் பேரத்தை சட்டசபை தேர்தலில் முன்னிலைப்படுத்த காங்கிரஸ் தலைமை முன்வந்துள்ளதும் அக்கட்சி தொண்டர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் கேட்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதால், தேர்தல் பரபரப்பு இப்போதே துவங்கிவிட்டது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசின் நிலை ஏமாற்றம் அளிக்கிறது- ராமதா

நவம்பர் 23-11-201


ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணை எதையும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அனைத்து சமூக, பொருளாதார விவரங்களையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஓராண்டு காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, நான்கு மாதங்கள் முடிந்து விட்டன.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் நானும், நாற்பதுக்கும் மேற்பட்ட சமுதாயத் தலைவர்களும் முறையீடு செய்தோம். முதல்வர் எங்களிடம் உறுதியளித்தப்படி, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை நடைபெற்று ஒரு மாதமாகிறது.

எனினும், தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணை இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. இது, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த அனைத்து சமுதாயத் தலைவர்களுக்கும் ஏமாற்றமாக உள்ளது.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லை. முதல்வர் கருணாநிதிக்கும் இதில் உடன்பாடு உள்ளது. எனினும், அதற்கான ஆணையைப் பிறப்பிக்க எது தடையாக உள்ளது என்பது புரியவில்லை.

2011 ஜூன் மாதத்தில் மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மாநில அரசு ஏன் தனியாக இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்கலாம்.

மத்திய அரசின் கணக்கெடுப்பில் ஜாதிவாரியாக தலைகளின் கணக்கு மட்டும்தான் தெரியவரும். ஆனால், மாநிலத்தில் இடஒதுக்கீட்டு சலுகையைப் பெறும் வகுப்பினரை அளவிடும் வகையில், அனைத்து புள்ளி விவரங்களும் அடங்கிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவாகும்.

எனவே, இந்த இரண்டு கணக்கெடுப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள், உச்ச நீதிமன்றம் திருப்தியடையும் விதத்தில், தேவையான புள்ளி விவரங்களுடன் கூடிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இல்லையெனில், 69 சதவீத இடஒதுக்கீட்டுச் சட்டத்துக்கே ஆபத்து ஏற்படலாம்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றால், இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் நமது இடஒதுக்கீட்டிற்கே வேட்டு வைத்து விடுவார்கள். எனவே தாமதம் இன்றி, அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி, புதிய சட்டம் இயற்ற வழிவகுக்க வேண்டும் என்று அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கும்முடிபூண்டியில் 100 பேர் பாமகவில் இணைந்தனர்...



கும்மிடிப்பூண்டி, நவ. 21: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூர் அருகே உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியில் இருந்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் தேமுதிக கிளைச் செயலருமான கே.ரங்கநாதன் தலைமையில் 100 பேர் வெள்ளிக்கிழமை பாமகவில் இணைந்தனர்.

பாமக திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலர் க.ஏ.இரமேஷ், மாநில துணைத் தலைவர் துரை செயவேலு .கடலூர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் இவர்கள் பாமகவில் இணைந்தனர்.

மல்லியன்குப்பம் ஊராட்சி மன்ற தலைவரும் பாமக விவசாய அணி மாவட்டச் செயலருமான பா.ரவி, ஆரணி பேரூர் பாமக செயலரும், ஆரணி பேரூராட்சி துணைத் தலைவருமான சி.பாபு, மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் கோ.சிவா ஆகியோர் உடனிருந்தனர்