நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, February 17, 2011

காங்கிரசு கூட்டணியில் பாமகவை சேர்க்க திருமதி சோனிய, பிரதமர் மன்மோகன்சிங் தீவிர முயற்ச்சி..

சோனியகாந்தியை சந்தித்தார் மேனாள் நடுவண் அமைச்சர் திரு அன்புமணி இராமதாசு..

 


புது தில்லியில் 17-2-11 அன்று  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை,  முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தில்லியில் வியாழக்கிழமை சந்தித்தார்.
 
இதனால் தமிழக கட்சிகளுக்கிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்தும் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், . பிரதமர் மன்மோகன் சிங்கையும் திருமதி சோனியவையும் நேரில் சந்தித்தார் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள்
 
 மருத்துவர் அன்புமணியை நடுவண் நல்வாழ்வு துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தே நேரில் அழைத்துச் சென்றதற்கு 2 காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
ஒன்று, தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதை சோனியா விரும்பவில்லை என்ற கருத்தைப் திமுக வேண்டுமென்றே காங்கிரசு மீது பழிபோடுகிறது என்பதைதெளிவாக கூறியதாகவும் தெரிகிறது.
.
 மத்திய சுகாதார அமைச்சராக மீண்டும் அன்புமணியே நியமிக்கப்படலாம் என்பதால், இந்தக் கூட்டணிக்கு குலாம் நபி ஆசாத்தே தடையாக இருக்கிறார் என்ற கருத்தைப் போக்கவுமே அவர் அன்புமணியை நேரில் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
 இதன்மூலம், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. சேருவதை தான் ஊக்குவிப்பது போன்ற கருத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுக் கூட்டம் குலாம் நபி ஆசாத்தின் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்வதை காங்கிரஸ் வரவேற்பதாகக் கூறினார்.
 
 கூட்டணி தொடர்பாக தி.மு.க.வுடனான பேச்சுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தொடர்பான தெளிவின்மையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
 
பாமக உள்ள அணியே பல ஆண்டுகளாய் வெற்றிபெருவதையும்.கடந்த நாடளுமன்ற தோ்தலில் பாமக வை வீழ்த்த பல கோடி செலவு செய்து திமுக பாமகவை வீழ்த்தியது. நாம் தொடந்து வெற்றிபெற வேண்டுமானல்
பாமக தயவு நமக்கு தேவை என்பதை காங்கிரசார் அனைவரும் விருப்புவாதாக சோனியவிடம் தங்கபாலு கூறியுள்ளார்.
 
 
அதன்காரணமாகவே, இந்தக் கூட்டணியில் பா.ம.க.வைச் சேர்ப்பதற்குக் காங்கிரஸ் தரப்பில் ஆர்வம் காட்டப்படுவதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்
 
காலங்கள் மாறுகின்றன..
காட்சிகளும் மாறுகின்றன..