நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, November 22, 2011

DAM(n)999-திரைப்படத்தை தடை செய்ய மருத்துவர் இராமதசு அய்யா கோரிக்கை.


DAM(n)999-திரைப்படத்தை தடை செய்ய மருத்துவர் இராமதசு அய்யா கோரிக்கை. ..!


                        புதிய அரசியல்...புதிய பாதை.....புதிய நம்பிக்கை..











155 அடி உயரம் உள்ள முல்லை பெரியாறு அணையில் 142அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்ற உச்ச நீதி மன்ற ஆணையை காங்கிரசு களவாணிகள் ஆளும் மத்திய அரசுடன் இணைந்து குப்பையில் போட்ட மார்க்சிய சனநாயகவாதிகள் அணையை உடைக்க இந்த முறை கலைத்தாயின் சேவையை நாடி உள்ளனர். 


நிருபமா மேனன் ராவ்,சிவசங்கர மேனன், ஏ.கே.அந்தோணி, எம்.கே.நாராயணன் என்கிற தமிழர்களுக்கு எதிரான மலையாள துரோக கும்பல் வரிசையில் சோகன் ராய் என்கிற இன்னொரு கரையானின் முயற்சியால் வெளிவர இருக்கும் படம் தான் "டாம்999".  அணை உடைந்தால் தமிழகம் அழிந்து விடும் என்று இந்த விளக்கெண்ணெய் நம் மீது பரிதாபப்படுகிறதாம்;அச்சப்படுகிறதாம்.அதை விளக்க இந்த படமாம்.

இந்த படத்திற்காக அவர்கள் தூக்கி எறிந்த எலும்பு துண்டுகளை கவ்விய நமக்கு அறிமுகமான சில "___"கள் 
  1. தோட்டா தரணி-கலை இயக்குனர்
  2. வி.ஸ்ரீனிவாஸ் முரளி மோகன்-வரைகலை(எந்திரன்,சிவாஜி
  3. அனல் அரசு-சண்டைக் காட்சி
  4. பின்னணி குரல்
    ஹரிஹரன்
    ஜெயச்சந்திரன்
    கே.எஸ்.சித்ரா
  5. ஆஷிஸ் வித்யார்த்தி,விமலா ராமன் 

1895இல் ஆரம்பிக்கப்பட்டு கட்டப்பட்டு வந்த நிலையில் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பிறகு மேற்கொண்டு நிதி ஒதுக்க ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஆங்கில பொறியாளர் ஜான் பென்னி குக்  தனது சொத்து முழுவதையும் விற்று அவரது தியாகத்தால் உருவானது இந்த வரலாற்று சிறப்பு மிக்க அணை. ஆனால் இங்கு விளையும் காய்கறிகளையும், அரிசியையும், உற்பத்தியாகும் நெய்வேலி மின்சாரத்தையும் நம்பி வாழும் மலையாளிகள்அணையை உடைத்து தமிழர்களுக்கான தங்கள் நன்றிக்கடனை திருப்பி செலுத்த விழைகின்றனர். என்ன இருந்தாலும் அது ஊசிப் போன இந்திய ரத்தம் தானே?!அவர்களிடம் இருந்து இதற்கு மேலான நாகரிகத்தை எதிர்பார்ப்பது நமது அறிவீனம்.

 "இரு இனங்களுக்கு இடையில் பகை உணர்ச்சியை தூண்டும் இந்த படத்திற்கு மட்டும் எப்படி தரச் சான்றிதழ் தந்தார்கள்" தமிழனை தாக்க,அந்த இனத்தை அழிக்க யார் முயற்சி எடுத்தாலும் இந்தியா முன்னின்று சென்று ஆதரிக்கும் என்ற வாதத்தையே வலியுறுத்துகிறது. 

தமிழகத்தில் எந்த ஒரு திரை அரங்கிலும் இது திரை இடப்பட்டாலும் அது தமிழனுக்கு இழுக்கு.

இனி தமிழன் அறம் வழி சென்று எதையும் சாதிக்க இயலாது என்பதையே இந்திய யூனியன் நமக்கு திரும்ப திரும்ப கற்றுத் தரும் பாடம் ஆகும்.



Monday, November 21, 2011

குமுதம் வார இதழியில் மருத்துவர் சின்ன அய்யா...

22-11-2011 குமுதம் வார இதழியில் மருத்துவர் சின்ன அய்யா...

சீனியர் மருத்துவ கல்லுாரி மாணவர் போல் படு இளமையாக தோற்றமளித்தார் டக்டர் அன்புமணி. இடம் சென்னை திலக் தெரு அவரது வீட்டில் “கட்சிக்கு புதிய வேகத்துடன் உழைக்க வேண்டுமென்றால் நம் உடம்பை பார்த்து கொள்ள வேண்டமா? என்று புன்னகைத்தார்..அரசியல் கட்சியின் தகவல்களை நம்முடன் பகிரிந்து கொண்டார்...என தொடங்கும் கட்டுரையுடன்



ஒரு சக்தியாக உருவான பா.ம.க இன்று தங்கள் சொந்த சமூக மக்களே நம்பிக்கை இழந்து விட்ட அளவிற்க்கு பலவீன மாகி விட்டதே...ஏன்?


உங்கள் செல்வாக்கு பெருமளவிற்கு சரிவிட்டது என்றால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது...?


சரி நீங்கள் பலமாக இருப்பதாக சொல்லபடும் மாவட்டங்களில் கூட அதிமுக
அமோக வெற்றி பெற்றுள்ளதே..?




ரொம்ப காலம் கடந்த ஞானோதயமாக இருக்கிறதே?


நீங்கள் அரசியல் ரீதியாக செய்த தவறுகளுக்கு ஊடங்களை ஏன் திட்டுகிறீர்கள்..?


ஒரு பக்கம் கட்சியை வளர்பதாக சொல்லிவிட்டு இன்னொருபுறம் வேல்முருகன் போன்ற புத்திசாலிகளை விரட்டுகிறீர்களே...?


போட்டி கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்கிறாரே...?


நில அபகரிப்பு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறீர்களா..?


கருணநிதிக்கு உங்கள் அறிவுரை..?


போன்ற கேள்விகளுக்கு  வி.சந்திரேசன் நிருபர் அவர்களுக்கு மருத்துவர் சின்ன அய்யா சுடச்சுட பதில் அளித்துள்ளார்..




குமுதம் வார இதழை வாங்கி படியுங்கள்...

உங்கள் கருத்துகளையும், மருத்துவர் சின்ன அய்யாவை பேட்டிகண்ட இதழையும் பாரட்டி குமுதம் இதழுக்கு கடிதம் எழுதுங்கள் ...இது போன்ற செயல்களால் நமது பாமக மேலும் வலு்பெறும்....


புதிய அரசியல் புதிய நம்பிக்கை....

Friday, November 18, 2011

சாக்கடிக்கும் பேருந்து,பால்,மின்சார உயர்வு ஒரு நாள் சாகடிக்கும் உயர்வுக்கு காரணமான அனைவரையும்....

பேருந்து கட்டண உயர்வுக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் காரணம்?





பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு?,என பலத்த இடியை தமிழக முதல்வர் உலகத்திலேயே நிர்வாக திறமை படைத்த அம்மா அவர்கள் மக்கள் தலையில் இறக்கியுள்ளார்.

பேருந்துகளில் 18-11-2011 அன்று ஓரே அலறல் சத்தம் சில தாய்மார்கள் கண்ணீர் மல்க பேருந்து நடத்துனர்களிடம் முறையிட்டதும்,அருகில் இருக்கும் அறிமுகமே இல்லதா நபர்களிடமும் நெஞ்சம் உருக வைக்கும் அளவுக்கு புலம்பியதும் வயதான முதியோர்,விவசாயிகள் ,இளைஞர்கள் என ஆவேசபட்டது நான் இதுவரை கண்டிராத சம்பவம்.பேருந்து விலை உயர்வல் மனம் நொந்து உள் மனதுக்குள் அழுது கொண்டிருந்த எனக்கு மேற்கண்ட சம்பவங்கள் என்னை கண்ணீர் சிந்த வைத்தது..

ஒரு நிமிடம் என்னை நானே வெறுக்கும் அளவுக்கும் எப்படியாவது இதை தட்டிகேட்க வேண்டும் என வெறியும் என் மனதுக்குள் தாண்டவமாடியது..

20.000 ரூபாய் ஊதியம் வாங்கும் எனக்கே இவ்வளவு வெறி...
எப்படியும் தன் உழைப்பால் இதனை சரிசெய்துவிட முடியும் என தன்னம்பிக்கை உள்ள எனக்கே இவ்வளவு பாதிப்பு மனதுக்குள்..

கூலி,5.000,10.000என சம்பளம் வாங்குபவருக்குள் எத்தனை வெறி இருக்கும்
எவ்வளவு வலி இருக்கும்

நாட்டு மக்களை பாதுகாக்க  வேண்டிய முதல்வரே..தனியார் பேருந்து முதலைகளிடம் 450 கோடிக்கு ஆசைபட்டு அவர்களின் வாழ்வில் ஒளி வீச ஏழைகளின் விளக்கில் திரியை பிடிங்கி இருப்பதாக தகவல்கள் பொது  மக்களிடம் ஆழமாக பதிந்துள்ளது..

மத்திய அரசு பணம் தரவில்லை அதனால் தமிழக மக்கள் உங்களிடம் வராமல் நான் யாரிடம் செல்வேன் என முதல்வர் நீலிக்கண்ணீர் வடித்ததை அவர்களுடைய கட்சிகாரா்களலே ஏற்று கொள்ள முடியவில்லை..

நிர்வாக திறமையற்ற ஒருவரை முதல்வராக்கி விட்டேமோ என மக்களை 6-மாதத்திற்க்குள் சிந்திக்க வைத்துவிட்டார் முதல்வர்...



கஜானா காலி என்பதை ஆட்சிக்கு வரும்பேதெல்லாம்  மீண்டும்  மீண்டும் வலியுறுத்தும் ஜெயலலிதா அப்போது தன் கவனத்தை திருப்பியது, அரசு ஊழியர்கள் மீது.   அரசு ஊழியர்களின் சலுகைகள் அத்தனையையும் பறித்தார்.    அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கிய உடன், ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார்.  அப்போது ஜெயலலிதா அடித்த அடி, அரசு ஊழியர்கள் மீது மட்டும் விழுந்தது.  இப்போது மக்கள் அத்தனை பேர் மீதும் விழுந்துள்ளது.


போக்குவரத்துக் கழகங்கள் குறித்து பேசிய ஜெயலலிதா, “அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் உள்ளன.  எரிபொருள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், சாலை விபத்துகளில் நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்களில் பிணையாக வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதரப் பலன்களை அளிக்கவும் இயலாத சூழ்நிலையை முந்தைய தி.மு.க. அரசு ஏற்படுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகங்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு மக்களின் சிரமத்தை கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காமல், டீசலின் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது.  2001 ஆம் ஆண்டு லிட்டருக்கு 18 ரூபாய் 26 காசுகள் என்று இருந்த டீசல் விலை தற்போது 43 ரூபாய் 95 காசுகள் என்ற அளவிற்கு மத்திய அரசால் உயர்த்தப்பட்டுவிட்டது. இது தவிர, டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர்களின் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டன. இதன் காரணமாக, 31 மார்ச், 2011 நிலவரப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திற்கும் 6,150 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளதால், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் ஊதியத்திற்காக எனது தலைமையிலான தமிழக அரசு  ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது.  அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுக்காமல் விட்டுவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்” என்று கூறினார்.

புதிய அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்யப் பட்ட இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், போக்குவரத்து என்ற தலைப்பில் நிதி அமைச்சர் ஆற்றிய உரை என்னவென்று பார்ப்போம்.

போக்குவரத்து
119. தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் நம்பகத்தன்மையுடைய போக்குவரத்து வசதிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன. தற்போது 21,169 மாநில  போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து நிறுவனங்களின் தற்போதைய நிதிநிலை மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குக்கூட மாநில அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. பணியாளர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வழிவகை செய்து தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், போக்குவரத்துக் கழகங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். போக்குவரத்துக் கழகங்களுக்குக் கூடுதல் வருவாயை ஏற்படுத்தும் வகையில் தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்தம் வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு 2011-2012 ஆம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் பங்கு மூலதன உதவிக்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு இழப்பீடாக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்க 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”

ஆகஸ்ட் 4 அன்று தாக்கல் செய்யப் பட்டுள்ள பட்ஜெட்டில் 3000 புதிய பேருந்துகள் வாங்கப் படும், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்கப் படும் என்று, ஆடம்பரமாக அறிவித்து விட்டு, நான்கு மாதங்களில் அப்படியென்ன நெருக்கடி முற்றி விட்டது ?

நிதி நிலைமை மோசமாகி விட்டது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம்தான் என்றாலும், மன்னார்குடி மாபியா சார்பில், தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து, பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்காக 450 கோடி ரூபாய் வசூல் செய்யப் பட்டு கடந்த வாரம் கொடுக்கப் பட்டுள்ளது என்று நம்பகமாக வட்டாரங்களிடமிருந்து வரும் தகவல்களையும் நம்பாமல் இருக்க முடியவில்லை.  மே மாதமே பொறுப்பேற்ற அதிமுக அரசு, ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறை சார்பாக ஏராளமான அறிவிப்புகளைச் செய்து விட்டு, இன்று போக்குவரத்துக கழகங்களே திவாலாகி விட்டன என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை


------------------------------------------------------------------------------------------------------------பால் விலை கடைகளில் 50 ரூபாய் எத்தனை தாய்மார்களின் மடியில் சாவு மணி அடித்து விட்டர் முதல்வர்...

சாக்கடிக்கும் பேருந்து,பால்,மின்சார உயர்வு ஒரு நாள் சாகடிக்கும் உயர்வுக்கு காரணமான
அனைவரையும்....

கண்ணகி பிறந்த மண்.. எம் தாய்மார்களும் இம் மண்ணில் பிறந்தவர்கள்...

பல்லவ வீரா்கள் வாழ்ந்த மண் .... அவர்கள் வழியில் வளரும் இளைஞர்கள் நாங்கள்....

நிச்சயம் ஒரு நாள் விடியும் அப்பொழுது தமிழர்கள் யாரென்னு புரியும்...






வரும் 23ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,





உரவிலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியதாலும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் அனைத்து உரங்களையும் வழங்க மாநில அரசு தவறியதாலும் தமிழ்நாட்டில் உரவிலை 100 முதல் 150 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. 

அதுமட்டுமின்றி உரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரத் தட்டுப்பாட்டை போக்கவும், மானிய விலையில் உரம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி பா... சார்பில் வரும் 21ஆம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
அதற்குள்ளாகவே ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் வகையில் பேருந்து கட்டணம், பால் விலை ஆகியவற்றை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. மின்சாரக் கட்டணத்தையும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குறை முறை ஆணையத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பேருந்து கட்டண உயர்வு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக உள்ளது. நகரப் பேருந்துகளில் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சாதாரண  பேருந்துகளில்கூட குறைந்த அளவு கட்டணம் 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சில தடங்களில் பேருந்து கட்டணம் 200 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. வெளியூர் பேருந்துகளில் தனியார் ஆம்னி  பேருந்துகளைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் இனி நடைபயணம்தான் மேற்கொள்ள வேண்டுமோ என்று பொதுமக்கள் கவலைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பால் விலை உயர்வால் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால்விலையை ரே நேரத்தில் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கை ஆகும். மின்வெட்டை செய்ய முடியாத தமிழக அரசு, மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
நிதி நெருக்கடி ஏற்படும்போது அதை சரிசெய்ய கசப்பு மருந்து கொடுக்கப்படுவது இயல்பானதுதான். ஆனால், தமிழக அரசு கசப்பு மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்து விஷமாக்கியிருக்கிறது. இதனால் மக்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
உரவிலை உயர்வுக்கு எதிரான போராட்டத்துடன் மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வைக் கண்டித்தும் போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. எனவே வரும் 21ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உரவிலை உயர்வுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக மானிய விலையில் தட்டுப்பாடின்றி உரம் வழங்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வையும், பால்விலை உயர்வையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு ராமதாஸ்  அய்யா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Wednesday, November 16, 2011

அதிமுக ஆட்சியை அலசிப் பார்த்ததில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.


சவுக்கு---

அதிமுக அரசு பதவியேற்று ஆறு மாதங்கள் ஆகி விட்டன.   புதிதாக பொறுப்பேற்ற அரசை ஆறு மாதங்கள் கழித்தே விமர்சனம் செய்ய வேண்டும் என்று எடுத்திருந்த முடிவை, முதல் வாரத்திலேயே மாற்றியது ஜெயலலிதா அரசு சமச்சீர் கல்வி தொடர்பாக எடுத்த முடிவு.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஜெயலலிதா காட்டும் முனைப்பு பாராட்டத்தக்கது.    மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் சிறப்பான திட்டமாக இருந்தாலும், அடுத்த ஐந்தாண்டுகளில் 70 லட்சம் லேப்டாப்புகளை கொள்முதல் செய்யும் ஒரு அரசு, வைரஸ் தொந்தரவுகள் குறைவாக உள்ள இலவச மென்பாருளான லைனக்ஸ் மென்பொருளை பயன்படுத்தாமல், வின்டோஸ் மென்பொருள் உள்ள லேப்டாப்புகளை வாங்குவது, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி க்ளின்டனின் வருகையோடு தொடர்புள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசு நிறுவனமான எல்காட்டின் செர்வர்களே லைனக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் போது, மாணவர்களுக்கு மட்டும் எதற்காக விண்டோஸ். 

July---20-d
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களை தொடர்ந்து பல்வேறு பொருட்களை வாங்குவதற்கும், தொடர்ந்து ஆன்டி வைரஸ் மென்பொருட்களை நம்பி இருப்பதற்கும் நிர்பந்திக்கும் ஒரு நிறுவனம் என்பது கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும்.

லேப்டாப் கொள்முதல் செய்வதற்காக முதலில் விடப்பட்ட டெண்டரில் 320 ஜிபி ஹார்ட் டிஸ்க், வைஃபை, வெப் கேம் வசதிகள் இருந்தன.  மைக்ரோசாப்ட் மென்பொருட்களை வாங்குவதற்காக, இரண்டாவதாக வெளியிடப்பட்ட டெண்டரில், வைஃபை, வெப்கேம் வசதிகள் நீக்கப் பட்டன.  ஹார்ட் டிஸ்க் 320 ஜிபியிலிருந்து 160 ஜிபியாக குறைக்கப் பட்டது.   வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் என்று அறிவிக்கும் ஜெயலலிதா, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு பணிந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.  வைஃபை வசதி இல்லாத லேப்டாப் எதற்கு பயன்படும் ?  இணைய வசதியை மாணவர்களுக்கு எப்படிக் கொடுப்பார்கள் ? 
Microsoft_Sign_on_German_campus
மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதற்காக இந்தத் திட்டமா, அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதற்காக இந்தத் திட்டமா என்று சந்தேகமாக இருக்கிறது ?

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டை நீக்குவேன் என்று அறிவித்த அதிமுக அரசு, ஆறு மாதங்களைக் கடந்தும் இன்றும் மின்வெட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

சமச்சீர் கல்வியைத் தொடர்ந்து ஜெயலலிதா அரசு எடுத்த நடவடிக்கைகள் பல நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப் பட்டிருப்பது இந்த அரசுக்கு ஒரு கரும்புள்ளியாகவே இருக்கிறது.  அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்தை மாற்றும் திட்டம் ஒரு சிறந்த உதாரணம்.  சென்னையில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான குழந்தைகள் மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை செய்து தருவதை விட்டு விட்டு, ஒரு அழகான நூலகத்தை மாற்ற உத்தேசித்தது பொதுமக்களிடையே அதிமுக அரசின் மீது கடும் அதிருப்தியை உருவாக்கியது.
 May_16_a
சமச்சீர் கல்வியில் ஜெயலலிதா காட்டிய பிடிவாதமும் பொதுமக்களிடையே அதிருப்தி மட்டுமல்லாது கோபத்தை ஏற்படுத்தியது.   சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு விரிவான ஆழமான தீர்ப்பையும் சட்டை செய்யாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, இரண்டு மாத காலமாக குழந்தைகளை படிக்க விடாமல் தடுத்த செயலை யாரும் ரசிக்கவில்லை.

மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கமும் பரவலான எதிர்ப்பையே சந்தித்துள்ளது.  இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக ஜெயலலிதா திமுகவை வளர்ப்பதற்கே உதவி செய்கிறார்.  மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்திற்கு எதிராக இன்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினரை பார்க்கும் போது இந்தக் கருத்து வலுப்பெறுகிறது.   குடும்பச் சண்டையிலும், ஊழல் புகார்களிலும் உழன்று கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு இப்படி வாழ்வளிப்பது எப்படிப்பட்ட அரசியல் என்பது புரியவில்லை.

மேலும், ஜெயலலிதா திமுக அரசின் வழக்கறிஞர் பிரிவை குறைத்து மதிப்பிடுகிறார்.   திமுக வழக்கறிஞர் பிரிவு, அதிமுக வழக்கறிஞர் பிரிவைப் போல மங்குணிப் பிரிவு அல்ல.  கடந்த திமுக ஆட்சியில் நடந்த அத்தனை அட்டூழியங்களுக்கும் எதிராக ஒரு வழக்கைக் கூட அதிமுக அணி போடவில்லை என்பது ஊரறிந்த உண்மை.  ஆனால் நில அபகரிப்பு வழக்குகள் உட்பட, அத்தனை வழக்குகளிலும், திமுக வழக்கறிஞர்கள் எப்படித் துடிப்பாக செயல்படுகிறார்கள் என்பதை ஜெயலலிதா கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூன்று தமிழர்களை தூக்கிலிருந்து காப்பாற்றுவதற்கு மிகச் சிறப்பான ஒரு தீர்மானத்தை இயற்றி விட்டு, அவர்கள் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்கையில், சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்தைப் பற்றி ஒரு வரி கூட சொல்லாமல், அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடுத்திருக்கக் கூடிய நிலைபாடு, சட்டமன்றத் தீர்மானத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

அதிமுக ஆட்சியில் மிகப் பெரிய கரும்புள்ளியாக அமைந்த ஒரு விஷயம் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.  ஜெயலலிதா அரசு என்றாலே, காவல்துறையினருக்கு கொண்டாட்டம் தான்.  மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவதில் எப்போதுமே முன்னணியில் உள்ள காவல்துறை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அந்த மீறல்களை சற்றே துணிச்சலோடு செய்யும்.  இந்தக் கருத்து, பரமக்குடி சம்பவத்திலும் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 
43
கண்துடைப்புக்காக ஒரு விசாரணைக் கமிஷனை போட்டு விட்டு, அந்த அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகம் தொடர்ந்த வழக்கில் அவர்களைக் காப்பாற்றுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கிறது அதிமுக அரசு.   பரமக்குடி சம்பவத்தில் பாதிக்கப் பட்ட மக்களை சந்திக்க மு.க.ஸ்டாலின் சென்ற போது அவருக்கு கிடைத்த மிகச் சிறப்பான வரவேற்பு இதற்கு ஒரு முக்கியச் சான்று.

ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகள் சிறப்பாகவே இருக்கின்றன. குறிப்பாக டிஎன்பிஎஸ்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடத்தப் பட்ட சோதனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு எதிராக தொடரப்பட்டு வரும் சொத்துக் குவிப்பு வழக்குகளும் சிறப்பானவையே…..  ஆனால் இந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் அமைத்து நீதிமன்ற விசாரணையை துரிதப் படுத்தினால் மட்டுமே இந்தத் தொடக்கம் சிறப்பாக அமையும்.    இன்னும் ஏராளமாக சொத்துக்களை குவித்திருக்கும் மற்ற திமுக பிரமுகர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தால், அது  மக்களிடையே வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
 DSC_0106
டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து வீட்டில் நடந்த சோதனையின் போது
புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் நடைபெற்ற ஊழலை விசாரிப்பதற்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து விட்டு, அந்த ஆணையத்தின் தலைவராக ஒரு ஊழல் பெருச்சாளியை நீதிபதியாக நியமித்திருப்பது இந்த ஆணையத்தின் நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது.  விசாரணை தொடங்கி இந்நேரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்க வேண்டிய விசாரணை, தங்கராஜ் என்ற ஒரு ஊழல் பெருச்சாளியை நீதிபதியாக நியமித்ததால் இன்று உயர்நீதிமன்ற வழக்கில் உழன்று கொண்டிருக்கிறது.

நில அபகரிப்புக்கென்று தனிப் பிரிவை அமைத்து, அந்தப் பிரிவு பொதுமக்களிடமிருந்து புகார்களை வாங்கி நடவடிக்கை எடுப்பது ஜெயலலிதா அரசின் மற்றொரு சிறப்பான நடவடிக்கை.  பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக கூப்பாடு போட்டாலும், புகார் கொடுப்பவர்கள் யாரும் கட்சிக்காரர்கள் அல்லவே….. திமுக ரவுடிகளிடம் நிலத்தை இழந்து, காவல்துறையினரிடம் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காததால் செய்வதறியாது திகைத்த பொதுமக்களே ஆயிரக்கணக்கில் புகார் கொடுத்து வருகிறார்கள்.  வழக்கறிஞர் புகழேந்தியிடம் வந்த ஒரு புகாரே இதற்கு உதாரணம்.   சென்யை, ஷெனாய் நகரில் 50 ஆண்டுகளாக குடியிருந்த ஒரு குடும்பத்தை மதுரையைச் சேர்ந்த தளபதி என்பவர், அந்த இடம் தங்களுக்குச் சொந்தம் என்று வந்து மிரட்டினார்.  அவருக்கு ஆதரவாக தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் ப.ரங்கநாதனும், கவுரிசங்கரும் வந்து மிரட்டினார்கள்.   இவர்கள் கையாண்ட அடுத்த தந்திரம் என்ன தெரியுமா ?   அப்போது அண்ணா நகர் துணை ஆணையராக இருந்த பன்னீர் செல்வத்தை அணுகினார்.  பன்னீர் செல்வம், அந்த வீட்டில் குடியிருந்தவரை அழைத்து “வீட்டை விற்பனை செய் அல்லது அவர் கேட்கும் தொகையை கொடு.  இல்லையென்றால், வீட்டில் இருக்கும் பெண்களை அழைத்து வழக்கு போடுவேன்” என்று மிரட்டினார்.  இந்த நிலையில் நம்மிடம் வந்தார் அந்த வீட்டின் உரிமையாளர்.   அவர் வந்த அன்றே, சென்னை மாநகர ஆணையர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு, பன்னீர் செல்வத்தை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் பட்டது.  அதன் பிறகு பன்னீர் செல்வம் இருந்த இடம் தெரியாமல் பம்மி விட்டார்.  இந்த வீட்டு உரிமையாளரைப் போல பாதிக்கப் பட்டவர்களே இன்று நில அபகரிப்புப் புகார்கள் அளிக்கிறார்கள்.  ஆனால் இதிலும் ஒரு விசித்திரம் என்னவென்றால், இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மட்டுமே சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.  இவர்களுக்கு உதவி செய்த, காவல்துறை அதிகாரிகள், பத்திரப் பதிவு அதிகாரிகள் கவனமாக தப்பித்துக் கொள்கிறார்கள்.

இந்த வழக்குகளை மக்கள் திமுகவின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கவில்லை என்பதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டின.

உள்ளாட்சித் தேர்தல்களை அமைதியாக நடத்தியதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டியே ஆக வேண்டும்.   ஜெயலலிதா நினைத்திருந்தால், காவல்துறை உதவியோடு, அதிமுகவினரை அராஜகத்தில் இறங்க வைத்திருக்க முடியும்.  2006 உள்ளாட்சித் தேர்தலில், லத்திக்கா சரண் மற்றும் ஜாங்கிட் உதவியோடு, திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டங்களை மீண்டும் அரங்கேற்றியிருக்க முடியும்.  ஆனால், எந்த வித வன்முறையும் இல்லாமல் ஜெயலலிதா தேர்தலை நடத்தி முடித்தற்கு கிடைத்த பரிசுதான், உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி.
அடிக்கடி நடக்கும் மாற்றங்களால் அரசு நிர்வாகம் கிட்டத்தட்ட ஸ்தம்பித்த நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   அமைச்சர்கள் எப்போது மாறுவார்கள் என்ற நிலையற்ற தன்மையினால் தலைமைச் செயலகத்தில் உள்ள ப்யூன் கூட, அச்சமில்லாமல் இருப்பதாக சொல்கிறார்கள்.  ஐஏஎஸ் அதிகாரிகளும், எப்போது மாற்றம் வருமோ என்று, எந்த வேலையிலும் ஈடுபாடு காட்டுவதில்லை என்று சொல்கிறார்கள்.   அமைச்சர்களும் எந்த நேரத்தில் மாற்றம் வருமோ என்ற அச்சத்தோடே இருப்பதாக தெரிகிறது.    அவ்வப்போது வரும் மாற்றங்களால், எதைச் செய்தாலும் தப்பாகப் போய் விடுமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பதாகவே தகவல்கள் வருகின்றன.
Augu---24-zd
தவறு செய்யதால் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சம் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருப்பது நல்லதுதான் என்றாலும், தற்போது உள்ளது போன்ற நிலைமை நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்து விடும். அமைச்சர்களின் இந்த நிலையற்ற தன்மையால், காவல்துறை அதிகாரிகளின் கை ஓங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். முதல்வரின் செயலாளராக உள்ள ஷீலா ப்ரியாதான் அதிகபட்ச அதிகாரம் உள்ள அதிகாரியாக விளங்குவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
July---20-f

ஷீலா ப்ரியா
முதல்வர் கவனத்துக்கு செல்லும் எல்லா கோப்புகளும், ஷீலா ப்ரியாவைத் தாண்டியே செல்ல வேண்டும் என்பதால், ஷீலா ப்ரியா குறித்த புகார்கள் ஜெயலலிதா கவனத்துக்கு செல்வதில்லை என்றும் தெரிகிறது. ஏற்கனவே ஆளுனரின் செயலாளராக இருந்த ஷீலா ப்ரியா மீது அப்போதே ஏராளமான ஊழல் புகார்கள் இருந்தன.  ஆனால் இவற்றை கவனத்தில் கொள்ளாமல், ஷீலா ப்ரியாவை தனது செயலாளராக நியமித்து, ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பேசுவது நகைச்சுவையை வரவழைக்கிறது.

கடந்த ஆட்சியில் இருந்தது போல குடும்பத்தின் ஆக்டோபஸ் ஆதிக்கம் இல்லையென்றாலும், நடராஜன், ராவணன், வெங்கடேஷ், போன்ற பெயர்கள் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.   அரசு அலுவலகங்களில் விசாரித்தால், மணற்கொள்ளை தங்கு தடையின்றி நடைபெறுவதாகவும், அதிகாரிகள் நியமனத்தில், மன்னார்குடி ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பதாகவும் தெரிவிக்ககிறார்கள்.  இது போக பெசன்ட் நகரில் நடராஜன் தனியாக ஒரு தலைமைச் செயலகத்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
 DSC_4879
இவையெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்துக்கு வருகிறதா இல்லையா என்பது தெரியவில்லை.   ஆறுமாதங்களின் முடிவில், அதிமுக ஆட்சியை அலசிப் பார்த்ததில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

Tuesday, November 15, 2011

மருத்துவர் அய்யா பார்வை - கல்பாக்கம்


மருத்துவர் அய்யா பார்வை - கல்பாக்கம்
கல்பாக்க‍த்தில் அமைந்துள்ள‍ அணு உலைகள் போல் உலகில் எந்த பகுதிகளிலும் அமைக்க‍ப்ப‍ட்ட‍து இல்லை என்றும் செயல்படுவதும் இல்லை என்றும் பா... நிறுவனர் இராமதாஸ் அய்யா  கூறியுள்ளார்.


     மேலும், கல்பாக்க‍ம் அணு உலைகளை நிறுத்த வேண்டும், மூட வேண்டும் என்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரைவில் பா... சார்பில் மருத்துவக் குழு ஒன்றுசெல்ல உள்ளது என்றும்,  அக்குழு அணுக்கதிர் வீச்சு காரணமாக அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள தீமைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் கூறினார்.
     மேலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில், அணு உலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், உலகின் மிகப் பழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கல்பாக்கம் அணு உலையை வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் மூட வேண்டும் என்றும் அய்யா கூறினார்.

உலகில் 444 அணு உலைகள் 2002-ஆம் ஆண்டு இருந்தன.அவற்றில் 960 அணு விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.இதன் காரணமாக 444-ஆக  இருந்த அணு உலைகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் 437-ஆக குறைக்க்கபட்டுவிட்டது அணு உலையின் கதிர் வீச்சு காற்று வழியாகவும், நீர் வழியாகவும் கதிர் வீச்சு ஏற்படுகிறது... என்பது குறிப்பிடதக்கது..

கல்பாக்கம் ஒரு பார்வை

கடலோரம் அமைந்துள்ள இவ்வூரின் அமைவிடம் 12.56° N 80.16° E ஆகும் கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (285 அடி) உயரத்தில் இருக்கின்றது


கல்பாக்கத்தில் இரு அணுமின் நிலையங்களும், ஒரு அணு ஆராய்ச்சி மையமும். சென்னை அணு மின் நிலையம் 1960 களில் அமைக்கப்பட்டது.தற்பொழுது 200 மெகாவாட் தயாரிக்கும் இரு அணு மின் உலைகளை இது இயக்கி வருகிறது.