நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, December 7, 2010

பசுமையான தாயகத்தை உருவாக்குவோம்....

இயற்கையை மீறிய
சாமி இல்லை
இயற்கையை மீறினால்
பூமி இல்லை .
*
நரப்புகள் சில உருவியபின்
நடமாடும் மனிதனைப் போல்
இயற்கையை இழந்த பூமி
இதயம் வெடிக்கிறது !
இரத்தம் வடிக்கிறது.!
*
இயற்கையைச் சிதைத்தால் ,
நம்மைப் புதைக்கும் பூமியவே
நாமே புதைக்க நேரிடும்!
*
இயற்கையை மதித்தால் _அந்த
பசுமை ஒன்றே _இந்த
பாரினை காக்க போரிடும் !