நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, March 9, 2011

மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிளுக்கு ஜெயலலிதா ஆப்பு வைக்கிறாங்க


சட்டமன்ற தேர்தல் 2011-கலாட்டா...




அதிமுக அணியில் இருக்கும் கட்சிகளுக்கு மாரியாதை கொடுக்க தெரியாதவர் செல்லி ஜெயலலிதா என்பது நடே அறிந்த விசயம்
அதை மீண்டும் நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளது 2011 சட்டமன்ற தேர்தல்

அதிமுக அணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. கேட்ட தொகுதிகள் கிடைக்காத நிலையில், மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடுவது பற்றி மதிமுக தலைமை தீவிரமாக யோசித்து வருவதாகத் தெரிகிறது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாத நிலையில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் அதிமுக தலைமை மீது கடும் கோபத்தில் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களும் மதிமுகவின் முயற்சிக்கு தோள் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது.

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அணி - அதிமுக அணி என இரு முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்குத் தொகுதிகள் பங்கிடப்பட்டுள்ளன.


ஆனால், பேச்சுவார்த்தையை முதலில் நடத்தி சிறிய கட்சிகளான புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி போன்றவற்றுக்கு தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக அணியில் இன்னும் தொகுதிப்பங்கீடு முழுமையாக முடிவடையவில்லை.

மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அதிமுக தலைமையின் அழைப்புக்காக வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.


முன்னதாகவே இடதுசாரிக் கட்சிகள், மதிமுக ஆகியவற்றுடன் அதிமுக பேச்சு நடத்தியது. ஆனால், எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதற்கிடையில் அதிமுக தலைமை, விஜயகாந்தின் தேமுதிக கட்சியுடன் கடந்த வாரம் தொகுதி உடன்பாடு செய்து கொண்டது. காங்கிரஸýடன் தேமுதிக இணைந்து மூன்றாவது அணி அமைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தேமுதிகவுடன் அதிமுக தொகுதி உடன்பாட்டை உடனடியாகச் செய்து கொண்டது என்றும், இதையடுத்து தங்களுக்கும் திருப்தியான முறையில் தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் இடதுசாரிகளும், மதிமுகவும் நினைத்தன.


மூன்று கட்சிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவியது. ஆனால், எந்தக் கட்சியையும் அதிமுக தலைமை அழைக்கவில்லை. இதனால், இடதுசாரிக் கட்சிகளும் மதிமுக தலைவர்களும் எரிச்சலுக்கு உள்ளாயினர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு திங்கள்கிழமை அழைத்துப் பேசியது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாள்களில் சுமுக முடிவு எட்டப்படும் என மார்க்சிஸ்ட் தலைவர்கள் தெரிவித்தனர்.


அதேசமயம், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என்று காத்திருந்த இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதிமுக அணியில் மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் கேட்கும் தொகுதிகள் ஒதுக்கப்படாததே இழுபறிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதிமுக தலைமையின் நீண்ட கால நண்பராக இருக்கும் வைகோ, கூட்டணியில் தனது கட்சிக்கு "கௌரவமான அளவில்' இடங்களை ஒதுக்க வேண்டும் எனக் கருதுகிறார்.


முதலில் 25 தொகுதிகளை வலியுறுத்திய அவர், இப்போது அதிலிருந்து இறங்கி வந்து 21 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் எனக் கூறி வருகிறார். ஆனால், "அதிமுக தலைமையோ 10 தொகுதிகளுக்கு மேல் மதிமுகவுக்கு ஒதுக்குவதாக இல்லை' என்று கூறப்படுகிறது.


கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுகவுக்கு, அதிமுக அணியில் 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அந்தக் கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல கடந்த 2009 மக்களவைத் தேர்தலிலும் மதிமுக 4 தொகுதிகளைக் கேட்டுப்பெற்று ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெறமுடிந்தது.

""வீம்புக்கு அதிகத் தொகுதிகளைக் கேட்டு வாங்கிவிட்டு பெருவாரியான தொகுதிகளில் தோல்வியைத் தழுவுவது மதிமுகவின் வாடிக்கையாகிவிட்டது. வைகோ-வைத் தவிர அந்தக் கட்சியில் பெயர் சொல்லக்கூட ஒரு முக்கியமான தலைவர் கிடையாது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் மதிமுகவிலிருந்து விலகிவிட்டனர். தொகுதிகளைக் கேட்டுப் பெற்றால் மட்டும் போதுமா? அதில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்கள் மதிமுகவில் இருக்கிறார்களா'' என்று கேள்வி எழுப்பும் அதிமுக தலைமை, வைகோவுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

உறுதியாக வெற்றி பெறக்கூடிய 20 தொகுதிகளின் பட்டியலை வைகோ தந்தால் அதில் 10 தொகுதிகளை ஒதுக்குவதாகவும் அந்த 10 தொகுதிகளிலும் மதிமுக முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றியடையலாம் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே நேரடியாக வைகோவிடம் தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதைப்பற்றிக் கேட்டால் மதிமுக தரப்பு கொதித்து விடுகிறது.


""184 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக மட்டும் அத்தனை தொகுதிகளிலுமா வெற்றி பெற்றுவிட்டது? வெறும் 61 தொகுதிகளில்தானே ஜெயிக்க முடிந்தது. அப்படியிருக்கும்போது எங்களை மட்டும் குறைகூறுவது என்ன நியாயம்?'' என்பது மதிமுக தரப்புவாதம்.

இடதுசாரிக் கட்சிகளிடையேயும் தொகுதிகளின் எண்ணிக்கையில் பிரச்னை இருந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி 15 தொகுதிகளைக் கேட்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ தங்களுக்குக் குறைந்தது 11 தொகுதிகளாவது வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால், மார்க்சிஸ்ட்டுக்கு 11, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 என்ற அளவில் மட்டுமே தொகுதிகளைத் தர முடியும் என அதிமுக தெரிவித்துள்ளது. தொகுதிகளை அளிப்பதில் தேமுதிகவுக்கு அடுத்தபடியாக தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என நினைத்திருந்த மதிமுகவுக்கு இப்போது அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது அதிமுக. இந்த அதிர்ச்சியால் மதிமுக தலைமை உறைந்து போயுள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகளும், முன்னணித் தலைவர்களும் அதிமுக அணியை விட்டு வெளியேறித் தனியாக களத்தைச் சந்திக்கலாம் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


இடதுசாரிக் கட்சிகளுக்கு காவிரி டெல்டா மாவட்டங்களிலும், மதிமுகவுக்கு தென் மாவட்டங்களிலும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. அதிமுகவின் அழைப்புக்காகக் காத்திருப்பதைவிட, செல்வாக்குள்ள தொகுதிகளில் தனியாக களமிறங்கினால் ஓரளவுக்கு வெற்றிபெற முடியாவிட்டாலும் ஆட்சியைப் பிடிக்கும் அதிமுகவின் கனவைத் தகர்த்துவிட முடியும் என்று மதிமுக கருதுகிறது.

மதிமுக, இடதுசாரிக் கட்சிகளைக் காத்திருக்க வைப்பது அவர்களது தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. "கடைசி வரை காத்திருக்க வைத்து, இருக்கின்ற தொகுதிகளை கொடுத்தாலே போதுமானது' என்ற நிலைக்கு தங்களைக் கொண்டு வர அதிமுக தலைமை திட்டமிடுகிறதோ என்று மதிமுக, இடதுசாரிக் கட்சித் தொண்டர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

என்ன "விலை' கொடுத்தாவது மதிமுகவையும் இடதுசாரிகளையும் அதிமுக அணியிலிருந்து பிரித்து மூன்றாவது அணி அமைக்க வைப்பதில் திமுக தலைமையும், காங்கிரஸ் மேலிடமும் சுறுசுறுப்பாகி இருப்பதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சி வாக்குகளில் ஏற்படும் பிளவு, ஆளும் திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்று வியூகம் வகுக்க முற்பட்டிருக்கிறது திமுக தலைமை.


அதிமுக அணியில் தேமுதிகவுக்கு 41 இடங்களும் ஏனைய உதிரிக் கட்சிகளுக்கு 8 இடங்களையும் ஒதுக்கி இருக்கும் நிலையில், மீதமிருப்பது 185 இடங்கள் மட்டுமே. அதில் மதிமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு 30 இடங்களை ஒதுக்கிவிட்டு மீதியுள்ள 155 இடங்களில் போட்டியிட அதிமுக திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.


கடைசியில், மதிமுகவுக்கு 15 தொகுதிகளும் மார்க்சிஸ்ட்டுக்கு 13 தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும் தந்து அவர்களைத் தங்களது அணியில் அதிமுக தக்கவைத்துக் கொள்ளக்கூடும்.

கடைசிநேரத்தில் அணி மாறுவது அல்லது தனித்துப் போட்டியிடுவது என்கிற வழக்கத்தை மதிமுக 1996, 2001, 2006 தேர்தல்களைப் போலவே, இந்தத் தேர்தலிலும் கடைப்பிடிப்பது அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக எழுப்பப்படும் கேள்வி!

தமிழக அரசியலில் முதன்முறையாக-பா.ம.க அசத்தல்


2011 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பா.ம.க வுக்கு 31 தொகுதிகள் ஓதுக்கபட்டன.கூட்டணி நலன் கருதி பாமக 1 தொகுதியை தியாகம் செய்து 30 இடத்தில் போட்டியிடுகிறது

இது தமிழக அரசியலில் முதன்முறையாக பாமக செய்துள்ளது.எனவே இக்கூட்டணி அமோக வெற்றிபெறுவதற்க்கான முன்னோட்டமாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

சென்னை, மார்ச் 9ல் பொங்கு தமிழ் வளர்ச்சி அலுவலகத்தில் மருத்துவர் அய்யா அளித்த பேட்டியிலிருந்து

கூட்டணியின் நலன் கருதி நாங்கள் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தோம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
 

மருத்துவப் படிப்பில் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை நடத்துவது என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் முடிவு குறித்து விவாதிப்பதற்காக பா.ம.க.வின் மாணவர் அணிக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.


பொது நுழைவுத் தேர்வு முடிவை கண்டிக்கும் வகையில் பா.ம.க. மாணவர் அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


 தி.மு.க. கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கிடைத்த தொகுதியை எந்தக் கட்சியும் விட்டுக் கொடுத்தது என்பது இதுவரை நடந்ததில்லை.


எனினும், எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற யேவண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக பா.ம.க.வுக்கு தரப்பட்ட தொகுதிகளில் ஒன்றை விட்டுக் கொடுத்துள்ளோம்.


பா.ம.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும். எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார் ராமதாஸ்.




தொகுதி வாரியாக வாக்காளர்கள்!

மாவட்டவாரியாக தொகுதிகளின் வாக்காளர்கள் விவரம் இங்கே...

1. திருவள்ளூர் மாவட்டம்

1. கும்மிடிபூண்டி
ஆண் வாக்காளர்கள்: 1,05,145
பெண் வாக்காளர்கள்: 1,06,492
அரவாணிகள்: 9
மொத்த வாக்காளர்கள்: 2,11,646

2. பொன்னேரி (தனி)
ஆண் வாக்காளர்கள்: 98,000
பெண் வாக்காளர்கள்: 96,803
அரவாணிகள்: 25
மொத்த வாக்காளர்கள்: 1,94828

3. திருத்தணி
ஆண் வாக்காளர்கள்: 1,15,741
பெண் வாக்காளர்கள்: 1,16,486
அரவாணிகள்: 7
மொத்த வாக்காளர்கள்: 2,32,234

4. திருவள்ளூர்
ஆண் வாக்காளர்கள்: 1,02,197
பெண் வாக்காளர்கள்: 1,01,299
அரவாணிகள்: 10
மொத்த வாக்காளர்கள்: 2,03,506

5. பூந்தமல்லி (தனி)
ஆண் வாக்காளர்கள்: 1,11,197
பெண் வாக்காளர்கள்: 1,09,535
அரவாணிகள்: 26
மொத்த வாக்காளர்கள்: 2,20,758

6. ஆவடி
ஆண் வாக்காளர்கள்: 1,35,661
பெண் வாக்காளர்கள்: 1,30,228
அரவாணிகள்: 25
மொத்த வாக்காளர்கள்: 2,65,914

7. மதுரவாயல்
ஆண் வாக்காளர்கள்: 1,32,161
பெண் வாக்காளர்கள்: 1,25,342
அரவாணிகள்: 25
மொத்த வாக்காளர்கள்: 2,57,528

8. அம்பத்தூர்
ஆண் வாக்காளர்கள்: 1,28,707
பெண் வாக்காளர்கள்: 1,22,269
அரவாணிகள்: 26
மொத்த வாக்காளர்கள்: 2,51,002

9. மாதவரம்
ஆண் வாக்காளர்கள்: 1,29,034
பெண் வாக்காளர்கள்: 1,25,594
அரவாணிகள்: 26
மொத்த வாக்காளர்கள்: 2,54,654

10. திருவொற்றியூர்
ஆண் வாக்காளர்கள்: 1,05,504
பெண் வாக்காளர்கள்: 1,02,660
அரவாணிகள்: 30
மொத்த வாக்காளர்கள்: 2,08,194

2. சென்னை மாவட்டம்

1. ஆர்.கே.நகர்
ஆண் வாக்காளர்கள்: 92,155
பெண் வாக்காளர்கள்: 92,927
அரவாணிகள்: 25
மொத்த வாக்காளர்கள்: 1,85,107

2. பெரம்பூர்
ஆண் வாக்காளர்கள்: 1,10,653
பெண் வாக்காளர்கள்: 1,09,993
அரவாணிகள்: 8
மொத்த வாக்காளர்கள்: 2,20,654

3. கொளத்தூர்
ஆண் வாக்காளர்கள்: 99,186
பெண் வாக்காளர்கள்: 98,710
அரவாணிகள்: 27
மொத்த வாக்காளர்கள்: 1,97,923

4. வில்லிவாக்கம்
ஆண் வாக்காளர்கள்: 91,269
பெண் வாக்காளர்கள்: 91,688
அரவாணிகள்: 12
மொத்த வாக்காளர்கள்: 1,82,969

5. திரு.வி.க.நகர் (தனி)
ஆண் வாக்காளர்கள்: 84,624
பெண் வாக்காளர்கள்: 85,901
அரவாணிகள்: 3
மொத்த வாக்காளர்கள்: 1,70,528

6. எழும்பூர் (தனி)
ஆண் வாக்காளர்கள்: 79,306
பெண் வாக்காளர்கள்: 79,631
அரவாணிகள்: 8
மொத்த வாக்காளர்கள்: 1,58,945

7. ராயபுரம்
ஆண் வாக்காளர்கள்: 75,413
பெண் வாக்காளர்கள்: 75,911
அரவாணிகள்: 9
மொத்த வாக்காளர்கள்: 1,51,333

8. துறைமுகம்
ஆண் வாக்காளர்கள்: 75,621
பெண் வாக்காளர்கள்: 69,531
அரவாணிகள்: 31
மொத்த வாக்காளர்கள்: 1,45,183

9. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
ஆண் வாக்காளர்கள்: 89.688
பெண் வாக்காளர்கள்: 89,815
அரவாணிகள்:  7
மொத்த வாக்காளர்கள்: 1,79,510

10. ஆயிரம்விளக்கு
ஆண் வாக்காளர்கள்: 95,640
பெண் வாக்காளர்கள்: 96,526
அரவாணிகள்: 40
மொத்த வாக்காளர்கள்: 1,92,206

11. அண்ணா நகர்
ஆண் வாக்காளர்கள்: 1,08,343
பெண் வாக்காளர்கள்: 1,08,082
அரவாணிகள்: 15
மொத்த வாக்காளர்கள்: 2,16,440

12. விருகம்பாக்கம்
ஆண் வாக்காளர்கள்: 1,03,167
பெண் வாக்காளர்கள்: 1,00,221
அரவாணிகள்: 20
மொத்த வாக்காளர்கள்: 2,03,458

13. சைதாப்பேட்டை
ஆண் வாக்காளர்கள்: 1,05,518
பெண் வாக்காளர்கள்: 1,05,337
அரவாணிகள்: 25
மொத்த வாக்காளர்கள்: 2,10,888

14. தியாகராயநகர்
ஆண் வாக்காளர்கள்: 93,403
பெண் வாக்காளர்கள்: 92,234
அரவாணிகள்: 23
மொத்த வாக்காளர்கள்: 1,85,660

15. மைலாப்பூர்
ஆண் வாக்காளர்கள்: 1,01,326
பெண் வாக்காளர்கள்: 1,04,739
அரவாணிகள்: 13
மொத்த வாக்காளர்கள்: 2,06,078

16. வேளச்சேரி
ஆண் வாக்காளர்கள்: 1,08,725
பெண் வாக்காளர்கள்: 1,08,725
அரவாணிகள்: 26
மொத்த வாக்காளர்கள்: 2,17,026

3. காஞ்சிபுரம் மாவட்டம்

1. சோழிங்கநல்லூர்
ஆண் வாக்காளர்கள்: 1,73,834
பெண் வாக்காளர்கள்: 1,66,781
அரவாணிகள்: 0
மொத்த வாக்காளர்கள்: 3,40,615

2. ஆலந்தூர்
ஆண் வாக்காளர்கள்: 1,16,214
பெண் வாக்காளர்கள்: 1,14,266
அரவாணிகள்:  0
மொத்த வாக்காளர்கள்: 2,30,480

3. ஸ்ரீபெரும்புதூர்(தனி)
ஆண் வாக்காளர்கள்: 1,01,831
பெண் வாக்காளர்கள்: 1,02,970
அரவாணிகள்: 0
மொத்த வாக்காளர்கள்: 2,04,801

4. பல்லாவரம்
ஆண் வாக்காளர்கள்: 1,34,385
பெண் வாக்காளர்கள்: 1,31,318
அரவாணிகள்: 0
மொத்த வாக்காளர்கள்: 2,65,703

5. தாம்பரம்
ஆண் வாக்காளர்கள்: 1,20,689
பெண் வாக்காளர்கள்: 1,17,606
அரவாணிகள்: 0
மொத்த வாக்காளர்கள்: 2,38,295

6. செங்கல்பட்டு
ஆண் வாக்காளர்கள்: 1,21,516
பெண் வாக்காளர்கள்: 1,18,980
அரவாணிகள்: 0
மொத்த வாக்காளர்கள்: 2,40,496

7. திருப்போரூர்
ஆண் வாக்காளர்கள்: 94,657
பெண் வாக்காளர்கள்: 91,895
அரவாணிகள்: 0
மொத்த வாக்காளர்கள்: 1,86,552

8. செய்ïர் (தனி)
ஆண் வாக்காளர்கள்:  87,317
பெண் வாக்காளர்கள்: 84,687
அரவாணிகள்: 0
மொத்த வாக்காளர்கள்: 1,72,004

9. மதுராந்தகம்(தனி)
ஆண் வாக்காளர்கள்: 89,093
பெண் வாக்காளர்கள்: 88,657
அரவாணிகள்: 0
மொத்த வாக்காளர்கள்: 1,77,750

10. உத்திரமேரூர்
ஆண் வாக்காளர்கள்: 95,372
பெண் வாக்காளர்கள்: 96,115
அரவாணிகள்: 0
மொத்த வாக்காளர்கள்: 1,91,487

11. காஞ்சிபுரம்
ஆண் வாக்காளர்கள்: 1,14,166
பெண் வாக்காளர்கள்: 1,16,872
அரவாணிகள்: 0
மொத்த வாக்காளர்கள்: 2,31,038