நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, August 19, 2011

அன்றே சொன்னர் மருத்துவர் சின்ன அய்யா....

மருத்துவர் அன்புமணியின் கோரிக்கையை ஏற்றார் முதல்வர் செயலலிதா....


                                               புதிய தலைமைச்செயலகம்

                      

                                                  அரசு மருத்துவமனை


06-01-2011 அன்றே சொன்னார் மருத்துவர் அன்புமணி அய்யா....

புதிய தலைமை செயலகத்தில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை அமைக்கலாம்: அன்புமணி ராமதாஸ் ஆலோசனை

சென்னை:6-01-2011

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கூறியது:-  

            தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பா.ம.க. உறவு சுமூகமாக உள்ளது. நாங்களும் விடுதலை சிறுத்தைகளும் முதன்முறையாக இணைந்த தேர்தல் விடுதலை சிறுத்தைகள் இணைந்த சமூக மக்கள் விரும்பவில்லை என்று கூறுவது தவறு. வருங்காலங்களிலும் இந்த கூட்டணி தொடரும்.

             பா.ம.க.வை பொறுத்தவரை நல்ல எதிர்க்கட்சியாக செயல்படும். எதிரிகட்சியாக இருக்க மாட்டோம். அரசாங்கம் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தால் வரவேற்போம். மக்களுக்கு எதிரான திட்டங்கள் கொண்டு வந்தால் எதிர்த்து போராடுவோம்.  

           கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைஞர் காப்பீடு திட்டம் முழுமையும் காப்பீடு செய்யப்பட்டது. அதில் தனியார்களும், தனியார் மருத்துவமனைகளும் தான் லாபம் அடைந்தன. எங்களுடைய கருத்து அரசு மருத்துவமனைகளில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். அதன் மூலம் மருத்துவமனைகள் தரத்தை உயர்ந்து நவீனபடுத்த வேண்டும். காப்பீடும் இருக்க வேண்டும்.

            மக்களை சோம்பேறிகளாக்கும் இலவச திட்டங்கள் வேண்டாம். இலவசங்களை நிறுத்தி விடுங்கள் என்று தொடர்ச்சியாக நாங்கள் சொல்லி வருகிறோம். தி.மு.க. அரசு புதிய சட்டமன்ற வளாகத்தை கட்டியது. கட்டியது சரி, ஆனால் கட்டிய இடம் சரியில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.  சென்னைக்கு வெளியே 1000 ஏக்கர் பரப்பளவில் ஒரு மினி டவுன்ஷிப் போல் கட்டியிருக்க வேண்டும். மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒரு நகரத்தை உருவாக்கியிருக்க வேண்டும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

            புதிய தலைமை செயலகத்தை வீணடித்து விடக்கூடாது. அதில் ஒரு குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனையை கொண்டு வரலாம். இதனால் லட்சக்கணக்கான குழந்தைகளும், பெண்களும் பயன் அடைவார்கள். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம்.  இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கிடையில் நேற்று(19-8-2011) சட்டசபையில் பேசிய முதல்வர் செயலலிதா புதிய தலைமைச்செயலகம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்றார்....

மருத்துவர் சின்ன அய்யாவல் துவக்கி வைக்கபட்ட ”சங்கையா” திரைப்படம்

              சங்கையா பட துவக்க விழா










திரைப்பட விழாக்களில் அரிதாகக் கலந்துகொள்ளும் அரசியல் தலைவர்களில் ஒருவர் நமது பாமகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ். அவர்கள்

அப்படி அவர் அரிதாகக் கலந்து கொண்ட சினிமா நிகழ்ச்சி 'சங்கையா' திரைப்படத் துவக்கவிழா.

ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று காலை நடந்த இந்தப் படத்தின் பூஜை மற்றும் துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினரே அவர்தான். ஜெகன், பரணி நடிக்கும் இந்தப் படத்தை கேந்திரன் முனியசாமி இயக்குகிறார். இவர் அய்யன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரமுத்து பாடல்களை எழுத, கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். மக்கள் தொடர்பை நிகில் கவனிக்கிறார்.

அருண்குமார் ஒளிப்பதிவு செய்ய, பிரவீண் - ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்கின்றனர்.

படத் துவக்கவிழாவில் பங்கேற்ற அன்புமணி, குழுவினரை வாழ்த்தியதோடு, சமூகத்துக்கு பயனுள்ள படங்களை எடுக்க வேண்டும் என்றார். பசும்பொன் தேவர் கழகத் தலைவர் வெள்ளைச்சாமி தேவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.