நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, August 13, 2014

உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகி - சாமி நாகப்பன் படையாட்சி

மகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்க சத்யாகிரகப் போரில் பங்கேற்று 6 ஜூலை 1909 அன்று உயிர்த்தியாகம் செய்த - உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகி

மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை சத்தியாகிரகம் எனப்படுவதாகும். இந்திய விடுதலைப்போராட்டம், நெல்சம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்க கருப்பின உரிமைப் போராட்டம் என உலகின் மிகப்பெரிய போராட்டங்களின் அடிப்படை வடிவம் சத்தியாகிரகம்தான். அப்படிப்பட்ட தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போருக்காக முதன்முதலில் உயிர்த்தியாகம் செய்தவர் சாமி நாகப்பன் படையாட்சி.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவே இல்லை.

மாவீரன் சாமி நாகப்பன் படையாட்சி அவர்களின் தியாகத்தை போற்ற வேண்டும் என்கிற மகாத்மா காந்தியின் விருப்பத்தை 104 ஆண்டுகளுக்கு பிறகாவது நாம் நிறைவேற்றுவோம்.

தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின்தியாகமும். உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும்.இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர். ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்காதவர் என்பதாலா? அந்த மாபெரும் தியாகம் குறித்த இரண்டாவது கட்டுரை இதுவாகும்: இதர இரண்டு கட்டுரைகளை இந்த இணைப்புகளில் காணலாம்:1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம் – சாமி நாகப்பன் படையாட்சி! 3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி கட்டுரை 2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்தென் ஆப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் உருவாக்கிய ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை எதிர்த்து காந்தி 1906 ஆம் ஆண்டில் போராட்டம் அறிவித்தார். காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். காந்தி முதன்முதலாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். அவரது அறிவிப்பை மீறி 1907 ஆம் ஆண்டு அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் இச்சட்டத்துக்கு எதிராக 1909 ஆம் ஆண்டில்தான் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது .

தென் ஆப்பிரிக்காவில் காந்தி
இதே காலகட்டத்தில்தான் காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த் தியாகமாக சாமி நாகப்பன் படையாட்சி வீரமரணம் அடைந்தார். கடைசியில் 1914 ஆம் ஆண்டில் காந்திக்கும் செனரல் ஸ்முட்ஸ் என்கிற டிரான்சுவால் அரசின் செயலாளருக்கும் இடையேயான உடன்படிக்கையின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய நிவாரண சட்டம் என்கிற புதிய சட்டத்தின் படி இந்திய சமூகத்தினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் இந்த போராட்டம் வரலாற்று நோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக, இரண்டு கண்டங்களில் இருக்கும் இரண்டு நாடுகளின் விடுதலைப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி அதுதான். அகிம்சை முறையிலான இந்திய சுதந்திரப்போராட்டத்தின் வழிகாட்டி இந்த போராட்டம்தான். நெல்சன் மண்டேலா அவர்களின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் வழிகாட்டியும் இந்த போராட்டம்தான். இரண்டாவதாக, அமெரிக்க குடியுரிமை போராட்டமான மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் போராட்டம் தொடங்கி, அதற்கு பின் இன்றுவரை உலகெங்கும் நடக்கும் அகிம்சை வழி போராட்டங்கள் அனைத்திற்கும் தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் இந்த போராட்டம்தான் முன்னோடியாகும். தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டமே மகாத்மா காந்தியை உருவாக்கியது, அதுவே இந்திய விடுதலைப் போரின் வழிகாட்டி என்பதை காந்தியும் தெளிவாக கூறியிருக்கிறார். “காந்தி இந்தியாவில் பிறந்திருக்கலாம் – ஆனால் தென் ஆப்பிரிக்காதான் காந்தியை ‘உருவாக்கியது’” என்றார் அவர். 1925 ஆம் ஆண்டு கான்பூர் காங்கிரசு மாநாட்டில் பேசிய காந்தி “தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் என்னை உங்களுக்கு (காந்தியை இந்தியாவுக்கு) அளித்ததாகக் கூறுகிறார்கள். அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். அது முற்றிலும் உண்மை. இப்போது என்னால் இந்தியாவுக்காக என்னென்ன பணிகளை எல்லாம் செய்ய முடிகின்றதோ, அவை எல்லாம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவை” என்று கூறினார் எட்டாண்டுகள் நடந்த தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் சத்தியாகிரகப் போரில் இருபதாயிரம் இந்தியர்கள் பங்கேற்றதாக காந்தி தெரிவிக்கிறார். இவர்கள் எல்லோரும் தத்தமது வேலைகளை விட்டுவிட்டு – வருமானத்தை இழந்து – பலநாட்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் நாடுகடத்தப்பட்டனர். எத்தனை துன்பம் வந்தாலும் அதனை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்
இப்போராட்டத்திற்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் என்று நான்கு பேர்களை குறிப்பிடுகிறார் காந்தி.
1. சாமி நாகப்பன் படையாட்சி: காந்தியின் கட்டளைக்கு ஏற்ப “ஏசியாட்டிக் பதிவு சட்டத்தின்படி பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்” 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார் சாமி நாகப்பன் படையாட்சி.

சாமி நாகப்பன் படையாட்சி
முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார். அப்போது அவரின் வயது 18. சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் சாமி நாகப்பன் படையாட்சியின் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக அடக்கம் செய்தனர். நன்றி ..கிராமத் தான்

வன்னியர் சங்கம்

நம் வன்னியர் சங்கத்திற்கு வயது 125



சென்னையில் வன்னியர் சங்கம் 09-06-1889--ல்ராவ் சாகிப் செல்லப்பா நாயக்கர் வீட்டில் அய்யாசாமி பிள்ளை தலைமையில் துவங்கப்பட்டது

சங்கத்தின் ஆண்டு விழாக்கள் நடைபெற்ற நாள் - இடம் - தலைமை வகித்தவர் பெயர்- முக்கிய விருந்தினர் பெயர் ஆகிய தகவல்கள் வருமாறு

01-06-1890 சென்னையில் அய்யாசாமி பிள்ளை தலைமை

21-06-1891 சென்னையில் செல்லப்ப நாயக்கர் தலைமை

05-06-1892 சென்னையில் பச்சையப்ப நாயக்கர் வீட்டில் ராவ் பகதூர் தனக்கோட்டிமுதலியார் தலைமை

25-01-1893 சென்னையில் பங்களா முதலியார் வீட்டில் புதுவை சதாசிவவேல் தலைமை

17-06-1894 ஆற்காடு நவாபு தோட்டம்

17-06-1895 ஜெயராம வேல் தலைமை

28-07-1895 ஆற்காடு நவாபு தோட்டம் காளிமுத்து படையாச்சி தலைமை

19-07-1896 ஆற்காடு நவாபு தோட்டம் சாமியார் தலைமை

21-06-1897 குருசாமி ராயர் தலைமை

26-06-1898 சென்னையில் தனக்கோட்டிமுதலி பங்களாவில் தருமபுரி மலையான்டிக் கன்டர் தலைமை

23-07-1899 கடலூர் குமரப்பன் பேட்டையில் 1900 இல்லை 1901 இல்லை

1902 ஆவணி மாதம் அய்யாசாமி பிள்ளை பங்களாவில் அரிராஜ கன்டர் தலைமை

03-081903 ஆற்காடு நவாபு தோட்டம் ஆறுமுக நாயக்கர் தலைமை 1904=1906 ஆன்டு விழா நடைபெறவில்லை

29-02-1907 தலைமை சிற்றரசு 1908 -1910 தகவல் கிடைக்கவில்லை


27-12-1911 கச்சி நகர் சிதம்பரம் சோழனார் தலைமை

30-12-1912 செஞ்சியில் சுப்பிரமணிவேல் தலைமையில்

11-06-1913 வெள்ளி விழாவும் சேலம் மாவட்ட சங்க 6-ம் ஆன்டு விழாவும் இனைந்து செலத்தில் சென்னை திருவேங்கட நாயகர் தலைமையில் பலபத்திர நாயக்கர் முன்னிலை கந்தசாமி கன்டர், நாட்ராம்பள்ளி தாயப்பசெல்வர், கோவை பூபதி, செல்லம் சின்ன லட்சுமணராஜா பலபத்திர நாயக்கர் முன்னிலை இரன்டு நாள் விழா தலைவரை விழா மெடைக்கு அழைத்து சென்ற ஊர்வலம் 5 மைல் நீளம் இருந்த்தாம் 1914 -1918 தகவல் கிடைக்கவில்லை

19-04-1919 திருக்கழுக்குன்றம்- சீர்காழி ராய ராவுத்த மின்டர் தலைமை ஒரு லட்சம் பேர் கூடிய கூட்டம்

25-12-1921 சூரப்ப சோழர் தலைமையில் 1922 -1929 தகவல் கிடைக்கவில்லை

24-05-1930 சேலத்தில் வரதப்ப நாயகர் தலைமையில் 1931 - 1939 தகவல் கிடைக்கவில்லை

05-05-1940 தங்க விழா மயிலாப்பூரில் ராஜுவேல் தலைமையில் வன்னிய கவி அர்த்தநாரீஸ்வர வர்மா அவர்களின் பங்கு இந்த விழாக்களில் அதிகம் உண்டு