நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, June 7, 2011

தமிழக மக்கள் நாங்களும் தமிழ்நாட்டுல இருக்கிறோம்...!!!



முதலமைச்சாரக பதவியேற்ற அன்றே 1000 கோடி ரூபாயை அலேக்காக தூக்கி வீசி இருக்கிறார் ஜெயலலிதா...?

கருணாநிதியால் கட்டப்பட்ட(கருணாநிதி என்ன அவர் சொந்த பணத்தை போட்டா கட்டினார்?) தலைமை செயலகத்துக்கு செல்ல மாட்டேன் என்று கூறி பழைய தலைமை செயலகமான கோட்டையில் பதவி ஏற்றுள்ளார் ஜெயலலிதா...

நாளை அந்த தலைமை செயலகத்தை வேற எதற்காக அரசு பயன்படுத்தினாலும் அது கட்டப்பட்ட நோக்கம் வீண் தானே ?

இதற்க்கு பின்னால் இருக்கும் கண்ணாம்பூச்சி விளையாட்டை கொஞ்சம் பாப்போம்...

அரசுக்கு தேவையான முக்கிய அலுவலகங்கள் அனைத்தையும் இந்த கோட்டைக்குள் கொண்டு வரமுடியவில்லை என்பதால் ராணிமேரி கல்லூரி அமைந்துள்ள இடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய தலைமை செயலகத்தை கட்ட முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆட்சியில் முடிவு செய்தார்.

ஆனால் அப்போது மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக அதற்கு முட்டுக்கட்டை போட்டது...

இந்த நிலையில் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர் ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகத்தை 1000 கோடிக்கும் மேல் செலவு செய்து உருவாக்கினார்...அது எல்லாம் மக்களின் வரிப்பணம்...

இப்போது ஜெயலலிதா கருணாநிதியின் மீது உள்ள வீம்பு, ஈகோ ,நீ கட்டி நான் என்ன ஆளுவது என்ற போட்டி (ஜெயலலிதா பாணியில் சொன்னால் சபதம் ) போன்றவற்றால் 1000 கோடியை வீணாக்கி உள்ளார்...

அது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா ? நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டு விளையாட?எல்லாம் வியர்வை சிந்தி உழைக்கும் சாமான்ய மக்களின் வரிப்பணம்...

உங்களுக்குள் உள்ள ஈகோ மற்ற கருமாதிக்காக கருணாநிதி வீட்டுக்கு நான் போகமாட்டேன் என்று சபதம் போட்டால் அது நியாயம்...j

அதைவிட்டு விட்டுவிட்டு அவசர அவசரமாக கோட்டையில் இருந்த நூலகத்தை அகற்றிவிட்டு தலைமை செயலகத்தை மாற்றி அமைப்பது எந்த வகையில் நியாயம்..?

மக்கள் ஜெயலலிதாவிடம் எதிர்பார்ப்பது ஊழலற்ற ,சீரான சட்டம் ஒழுங்கு கொண்ட நல்லாட்சி மட்டுமே...இது மாதிரி வீண் சபதங்கள் போட்டு மக்கள் வரிபணத்தை வீணடிப்பது அல்ல...

அது போததென்று சமச்சீர் கல்வி திட்டம் கலைஞர் ஆட்சியில் அமல்படுத்தபட்டன என்ற ஒரே நோக்கத்திற்க்காக நிறுத்துவாது நியாமா
இத்திட்டத்தை அமல்படுத்த பல ஆண்டுகளாக பாமக போரடிவருவது அனைவரும் அறிந்ததே

கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல் செய்து 2011 -ல் ஆளும் அரசு பெரும் பங்காற்றியுள்ளதை வரலாறும் வறுமையில் வாடுபவர்களும் மன்னிக்க மாட்டார்கள்..

கலைஞர் வீடு வசதி திட்டம் இரத்து,திட்டத்திற்க்கு ரத்துக்கு பதில் வேண்டுமென்றால் ஜெயலலிதா வீடு வசதி திட்டம் என்றாவது மாற்றிகொண்டு இருந்தால் தமிழகத்தில் வாடும் வருமையில் உள்ளவர்கள் பயன்பெற்று இருப்பார்கள்..

கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் இரத்து இதிலோயும் தமிழக மக்களின் வயிற்றில் மண்..

போதக்குறைக்கு அரசு பேருந்து பணிமனைகளில் ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்தில்  அனைவரையும் இணைய சொல்லி கட்டாய படுத்துவதால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது..
 பயணம் செய்யலாம்னு பார்த்த உட்கார பயண இருக்கைக்கும் ஆப்பு வைச்சிட்டிங்க....

பவம்ங்க தமிழக மக்கள் கலைஞர் குடும்ப ஆட்சி நடத்துனாரு சொன்னீங்க இப்பே தமிழக அரசு நடத்துவது என்ன ஆட்சிங்கா...

மக்களுக்கு ஆதரவான ஆட்சியா? இல்லை திமுகவுக்கு எதிரான ஆட்சியா?


தமிழக மக்கள் நாங்களும் தமிழ்நாட்டுல இருக்கிறோம்...!!!

சில நாட்களிலேயே தமிழக அரசு சாதனை படைக்கும் போலிருக்கு....