நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, January 5, 2011

மருத்துவர் இராமதாசு அவர்கள் தலைமையில் தமிழகத்தில் மூன்றவது அணி....

மிழகத்தை நேசிக்கின்ற நல்ல மனங்கள் பல உள்ளன அந்த மனங்களின் உண்மையான ஏக்கங்கள் பல என்றாலும் மிக முக்கியமானது 1967 முதற்கொண்டு தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இருபெரும்  கட்சிகளே மாறி மாறி அரசாளுகின்றன

இதில் யாராவது ஒருவராவது மக்களுக்கு ஆக்கப்பூர்வமான செயல்களை செய்வார்களா என்றால் எதுவும் இல்லை

இவர்களை தவிர்த்து வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்குமே? என்பதுதான் ஆனால் மாற்று ஏற்பாடாக நல்லவர்கள் யாரும் ஆளும் ஆண்ட தமிழக அரசியல் வானில் தென்பட வில்லை என்பதுதான் யதார்த்த உண்மையாக உள்ளது

காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் கைவிட்டுப் போன அதிகாரத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக கிடையாது


  காங்கிரஸ்காரர்கள் உறக்கத்தில் கூட சோனியா காந்தி எப்போது எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பாரோ நம் கட்சிப் பதவி எப்போது பறிபோகுமோ? என்ற பதபதைப்புத்தான் தொடர்கிறது

பொதுவுடமை கட்சிக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் இரவு பகலாக போராட்டங்கள் நடத்துவதில் தான் ஆர்வம் உள்ளதே தவிர  தேசிய அளவிலும் சரி மாநில அளவிலும் சரி மக்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர  தீர்வுகள் காண முயற்சிப்போமே என்ற எண்ணம் எப்போதுமே கிடையாது

தங்களது ஆட்சி இருக்கின்ற மாநிலங்களில் கூட அவர்களின் செயல்பாடுகளால் மக்கள் நன்மை அடைகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்

பா.ஜ.க. போன்ற கட்சிக்களும் கூட தங்களுக்குள் கோஷ்டி சண்டையில்தான் தமிழ் நாட்டிலேக் கூட உள்ளனர் அவர்களை நம்புவதும் மண்குதிரையை நம்புவதும் ஒன்றுதான்


   
சரி நிலமை இப்படியே போனால் கருணாநிதி ஜெயலலிதா போன்ற பூனைகளுக்கு மணிக்கட்டுவது யார்? தமிழகத்தை குடும்ப ஆதிக்கத்திலிருந்தும் மன்னார்குடி சுரண்டலிருந்தும் காப்பாற்றப் போவது யார்?


 
மருத்துவர் இராமதாசு அவர்கள் தலைமையில் தமிழகத்தில் மூன்றவது அணி அமைத்து. மந்திரி சபையில் பங்கெடுத்துக் கொள்ள சொல்லி காங்கிரஸ் மற்றும் உதிரி கட்சிகளை இணைத்து இடதுசாரிகளையும் அரவணைத்து மூன்றாவது அணியை உருவாக்கினால் அரசியலில் மட்டுமல்ல ஆட்சியிலும் மாற்றம் நிச்சயம் ஏற்படும்

கழக மாயங்களை ஒழித்து விட்டால் தமிழகம் வளம் பெறும்...

கருணநிதியை நாம் மட்டுமல்ல காலம் கூட மன்னிக்காது....

தி.மு.க. தோற்க வேண்டும்! ஏன்?


     டெல்லி செங்கோட்டையிலிருந்து கன்னியாகுமரி வட்டகோட்டை வரை தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி அலங்கோலத்தைப் பற்றி பேசாதவர்கள் மிக குறைவு, வடக்கில் இருந்து வந்து தமிழகத்தை சுரண்டுகிறார்கள் என்று வீதிதோறும் மேடை போட்டு பாட்டுபாடி தீர்த்தவர்கள், இன்று வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் ஒட்டிக்கொண்டு ஒட்டுமொத்த தேசத்தையே உண்டுயில்லை என்று ஆக்கி கொண்டிருப்பதாக நாடு முழுவதும் பேசப்படுகிறது தி.மு.காவின் சுரண்டலை தாங்க முடியாமல் திரு. ராகுல்காந்தி கூட கொதித்து போயிருப்பதாக கேள்வி, இப்படி எல்லாதரப்பிலும் கரித்து கொட்டும் அளவிற்கு இவர்கள் செய்த தவறுகள் தான் என்ன? கலைஞர் அரசால் ஒரு ரூபாய்க்கு அரசி உட்பட இரண்டு ஏக்கர் நிலம், இலவசதொலைக்காட்சி பெட்டி, மருத்துவ காப்பிடு திட்டம் என ஏகப்பட்ட நல திட்டங்களை செய்து வருகிறார்களே இவர்களை ஏன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்? என சில விவரம் புரியாதவர்கள் கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்றாலும் விளக்கம் சொல்ல வேண்டியது நமது கடமை.


       ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று மிக பிரமாதமாக விளம்பரபடுத்தபடுகிறது அந்த விளம்பரத்தை மேலோட்டமாக கேட்டோம் என்றால் தமிழ்நாட்டில் பசி கொடுமை என்பதே கலைஞர் ஆட்சியில் இல்லாது போய்விட்டது என்று தோன்றும். ஆற அமர உட்கார்ந்து அரசியை தவிர மற்ற பொருட்களின் விலை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்தால் வெறும் சோற்றை மட்டுமே சாப்பிட பழகி கொண்டவர்களால் தான் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்பது தெரியும். பருப்பு விலை காய்கறிகளின் விலை, மசாலா பொருட்களின் விலை, இன்னும் சமையலுக்கு தேவையான மண்ணெய், எரிவாயு, விறகு என்று எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் ஒரு சிறிய குடும்பத்தை பட்டினி இல்லாமல் நடத்துவதற்கு தினசரி இருநூறு ரூபாயாவது வேண்டும். அடிப்படை தேவைகளுக்கே மாதம் ஆறாயிர ரூபாய் வேண்டும் எனும்போது தண்ணீர் வரி, மின்சார வரி, மருத்துவ செலவு, மற்றும் இதர செலவுகளுக்கு மக்கள் கண்கள் பிதுங்கி விடுகிறார்கள்.


    அதற்காக அரசாங்கம் ஒவ்வொரு குடி மகனுக்கும் மாதம் பத்தாயிரம் உதவி தொகையா தர முடியும்? என்று சிலர் கேட்கலாம் தமிழகத்தில் இருக்கின்ற எந்த மக்களும் உதவி தொகை எதிர்பார்க்கவில்லை. பொருட்களின் விலைவாசி குறைந்தால் தங்களது வருவாய்க்குள் செட்டும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தி கொள்ளலாம் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். முன்பெல்லாம் கடைதெருவிற்கு போனால் சட்டை பையில் பணத்தை எடுத்து போயி கைப்பையில் பொருள் வாங்கிவரலாம். இப்போதோ கைப்பையில் பணம் எடுத்து போனாலும் கூட சட்டை பை நிறைய பொருள் கிடைப்பதில்லை.

     விலைவாசி நிலவரம் இப்படியென்றால் மின்சாரத்தின் கதையோ மிக மோசமாக இருக்கிறது. பெரிய தொழிற்சாலை முதல் குழந்தைகள் படிப்பது வரைக்கும் மின்சாரம் இன்று அத்தியாவசிய தேவையாகிவிட்டது. சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லையென்றால் திருப்பூர், கோவை, சிவகாசி போன்ற தொழில் நகரங்களில் உற்பத்தி இழப்பு என்பது பல கோடி ரூபாயை தாண்டிவிடும்.

     இன்று தமிழகம் முழுவதிலுமே பலமணி நேரங்கள் மின்சாரம் இருப்பதில்லை. பலசிறிய தொழிற்சாலைகள் முற்றிலுமாக இயங்க முடியாத நிலைக்கு போய்விட்டன. இதனால் பல தொழிலாளர் குடும்பங்கள் வீதி வந்துவிட கூடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 



   நமது தமிழக அரசோ மின்சார உற்பத்தியை சீர்படுத்துவதற்கு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை இரண்டாயிரத்து ஒன்பதில் கூட அதற்கான நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரளவு பிரச்சனையை சமாளித்து இருக்கலாம். அரசின் மெத்தன போக்கால் விவசாயம், தொழில்துறை, வீடுகள், மருத்துவமனைகள் கூட இருள் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 600 யுனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்டுத்துபவர்களுக்கு யுனிட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் ஏற்றியிருப்பது கடும் வேதனைக்குரியது, இன்றைய நிலையில் 300 யுனிட்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம், அதுவும் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் மின்சார கணக்கீடு டிஜிட்டல் மீட்டர்கள், இண்டிகேட்டர் எரிந்தால் கூட மரவட்டை மாதிரி நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இப்போது எல்லாம் சாதாரணமாக ஒரு குழல்விளக்கு எரிந்தால் கூட முன்னூறு ரூபாய்க்கு மேல் தான் மின்சாரகட்டணம் வருகிறது.


   தமிழகத்தின் பல ஊர்களில் குடி தண்ணீர் விநியோகம் என்பதே சுத்தமாக கிடையாது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் கார்பேரஷன் குழாயில் குடிதண்ணீர் வந்தே வருட கணக்காகிறது. தர்மபுரி, திருப்பூர், நான்குனேறி, ராதாபுரம், மதுரையின் சில பகுதிகளில் குடிதண்ணீருக்காக ஒரு குடும்பம் மாதம் முந்நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

  நிலத்தடி நீரை சரியான முறையில் பயன்படுத்தினாலே தமிழகத்தில் குடீநீர் பிரச்சனையே ஏற்படாது. ஆனால் நிலத்தடி நீர் சுண்டி போவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை கெட்ட காரியங்களையும் ஆளும் தரப்பு செய்து கொண்டியிருக்கு, 


   பல நகராட்சிகள், பேரூராட்சிகளில் தெருவிளக்கை கூட பராமரிக்க அக்கறையில்லை. அரசாங்க மருத்துவமனைகளில் குறிப்பாக தலூக்கா தலைநகரங்களிலுள்ள மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துக்களே இருப்பில் இருப்பது இல்லை.

     கலைஞர் மருத்துவ காப்பிடு திட்டம் மிகபெரும் சேவைதிட்டமாக அரசாங்கத்தால் விளம்பரபடுத்தப்படுகிறது. உண்மையில் அந்த திட்டத்தால் சில ஏழைகள் பயன்பட்டாலும் கூட, பெருமளவு பயனையும், இலாபத்தையும் அனுபவிப்பது ஆளும் கட்சிகாரர்களுக்கு வேண்டப்பட்ட தனியார் மருத்துவ மனைகளே ஆகும்.

     அரசாங்கத்திலிருந்து நோயாளிக்கு ஒரு லட்சரூபாய் வரை சலுகை வழங்குவதாக கூறப்பட்டாலும் சிகிச்சைக்கு முன்பும், பின்பும் ஏரளமான கட்டண தொகைகளை மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளிடமிருந்து கரந்து விடுகிறது. சில குறிப்பிட்ட நோய்களுக்கு தான் கிசிக்கை என்று இருக்கும். போது நோயாளிகளுக்கு அது சம்பந்தமான விவரங்கள் தெரியாத போது மக்களின் அறியாமையை பல மருத்துவ மனைகள் சுயலாபத்தோடு பயன்படுத்துகின்றனர். ஆளும் தரப்புக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு சில மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமலே காப்பிட்டு நிறுவனத்திடமிருந்து பணம் பெற்று கொள்ளப்படுகிறது. இது மருத்துவர்களால் பேப்பர் கேஸ் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. நோயாளிக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்ட பிறகு சில செயற்கை கோணங்களில் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆவணமாக்கப்படுவதாகவும் கேள்வி.



    சமச்சீர் கல்விமுறையை கொண்டு வந்துவிட்டதாக அரசாங்கம் பெருமையடித்து கொள்கிறது. உண்மையில் இந்த கல்விமுறை பாடப்புத்தகங்களில் மட்டுமே இருக்கிறது. நடைமுறையோ, மாணவர்களும், பெற்றோர்களும் திணரும் வண்ணமே உள்ளது.

     தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருமே தங்களுக்கு என்று தனிதனி கல்லூரிகளை கட்டி வசூல் வேட்டையில் மிக தீவிரமாக இருக்கும் போது மக்களுக்கு பயன்படும் வண்ணம் கட்டண விகிதங்களை அரசாங்கத்தால் எப்படி தீர்மானிக்க முடியும்?

     கல்வியை வியாபார பொருளாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியை எதிர்த்தவர்கள், ஆங்கிலத்தை வரவேற்று தமிழை அழித்தவர்கள் கல்விக்காக எப்படி சேவை செய்வார்கள். 


       சமுதாயத்தில் நடைமுறை தலைமுறையினரை தமிழ் பண்பாட்டை அறிய முடியாத வண்ணம் இன்று நாடு ஆகிவிட்டது. தமிழக்காக ஒடும் ஏயிலை இடைமறித்து தண்டவாளத்தில் தலைவைத்து, பாளையங்கோட்டை சிறையில் பாம்பும், தேளும் நடுவில் கடுஞ்சிறை அனுபவித்தவர் ஆட்சியில் தமிழ் பண்பாடு காற்றோடு போனதோ இல்லையோ பணக்கார தமிழன் தான் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

       தி.மு.க. அரசு சொன்னதைதான் செய்யும், செய்ததை தான் சொல்லும் என்று நமது முதல்வர் அவர்கள் அழகான கவிதை மொழியில் பேசி ஐம்பது லட்சம் ஏக்கர் நிலத்தை நிலமில்லாத விவசாயிகளுக்கு தலா இரண்டு ஏக்கராக பிரித்து தரப்போவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்கள், 


    ஆட்சிக்காலமும் இன்னும் சில மாதங்களில் முடிய போகிறது. இதுவரை எத்தனை பேர்கள் நிலத்தை பெற்றார்கள் என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக முதல்வரிடம் கேட்டால் ஐம்பது லட்ச ஏக்கர் நிலமில்லை, இருந்தால் காட்டுகள் பிரித்து தருகிறோம் என்கிறார்.

      இதை தான் ஆரம்பத்தில் வை. கோபால்சாமி, விஜயகாந்த் போன்றவர்கள் மேடைகளில் கேட்டபோது ஏழைகள் நிலம் பெறுவது பிடிக்காதவர்கள் என்று எரிச்சல்பட்டார் முதல்வர், இன்று அவர் கூறுகிறபடியே பன்னாட்டு நிறுவனங்களிடம் குவிந்து கிடக்கும் பல்லாயிர கணக்கான ஏக்கர் நிலங்களையாவது பிரித்து கொடுங்கள் என்று ஏழைகள் கேட்டால் காவல் துறையை ஏவிவிட்டு தடியடி நடத்தி தனது நிஜமான அரக்க தனத்தை வெளிகாட்டுகிறார்.



     பன்னாட்டு நிறுவனங்கள் வைத்துள்ள நிலங்களை கை வைத்து புதிய பிரச்சனைகளை கூட கிளப்ப வேண்டாம். அரசுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களை ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளை சார்ந்த திமிங்கலங்கள் பல காலமாக அபகரித்து அனுபவித்து வருகிறார்கள் அதை கையகப்படுத்தி மக்களுக்கு கொடுத்தாலே ஏராளமான பேர் பயனடைவார்கள்.

    தமிழக அரசே கூட திருவள்ளூர் மாட்டம் காவேரி ராஜபுரத்தில் 199 ஏக்கர் நிலத்தையும், பல்லவாடத்தில் 800 ஏக்கர் நிலத்தையும், திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மா பட்டியில் 5000 ஏக்கர் நிலத்தையும் கைவசம் வைத்துள்ளது.

        கையளவு இடமிருந்தால் கூட கண்ணீர் விடும் ஏழைக்கு தானமாக கொடுப்பேன் என்று வசனம் பேசிய முதல்வர் இந்த நிலங்களையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை. ஒரு வேளை ஸ்டாலின் , அழகிரி, கனிமொழி தயாநிதிமாறன் போன்றோருக்கு பட்டாபோட்டு கொடுக்க போகிறாரோ என்னவோ? நிலைமை இப்படியிருக்க தி.மு.க அரசு செய்யும் பல நல்திட்டங்கள் அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுக்கிறது என்று எதிர்கட்சிகள் பொறாமைபடுவதாக ஆளும் தரப்பு வாய்வலிக்க புலம்புகிறது.



     தற்போதைய தமிழக அரசின் இலவச திட்டங்கள் எந்த கோணத்தில் மக்களால் பார்க்கப்படுகிறது, விமர்சனம் செய்யப்படுகிறது என்பதை ஆராய்ந்தால் மக்களிடத்தில் கூட சற்று விழிப்புணர்வு ஏற்பட்டுயிருக்கிறது என்று சொல்ல வேண்டும். இலவச அடுப்பு கொடுத்தார்கள் ஏரிவாயு சிலிண்டர் விலை பலமடங்கு ஏறிவிட்டதனால் அடுப்பு துருபிடித்து கிடக்கிறது.

   இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி தந்தார்கள். ஒரு நாள் ஒடியது மறுநாளில் வெறும் புள்ளி மட்டும் தான் தெரிந்தது. ஒடாத டி.வி யை மூலையில் போடுவதா அல்லது வெங்காயத்திற்கோ மரவள்ளி கிழங்கிற்கோ, காயலான் கடையில் போடுவதா?

    அடுத்ததாக இலவச நீர் மோட்டார் தரப்போவதாக தலைவர் அறிவித்து இருக்கிறார். அதை வாங்கி எந்த பழைய இரும்பு கடையில் போடுவது என்று மக்கள் பேசி கொள்கிறார்கள்.

      இதுமட்டுமல்ல இந்த இலவச திட்டங்களை எல்லாம் அறிவிப்பதை விட்டுவிட்டு நிலப்பதிவு அலுவலகம், வருவாய் துறை அலுவலகம், காவல் துறை போன்வற்றில் ஊழல் நடக்காமல் சாமானியனும் நிவாரணம் பெற வழி செய்தாலே கலைஞரை கை எடுத்து கும்மிடலாம் என்றும் பேசி கொள்கிறார்கள். இந்த பேச்சியெல்லாம் கலைஞர் காதில் எப்படியேறும்.

      இத்தகைய உருப்படி இல்லாத திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை கூட மன்னித்து விடலாம். .ஜெயலலிதா வந்தாலும் சரி வேறு யாரு ஆட்சிக்கு வந்தாலும் சரி தமிழகத்தின் தலையெழுத்து இப்போதைக்கு இதுதான்.

    ஆனால் மன்னிக்க முடியாத, கூடாத ஒரு கொடும் செயலை கலைஞர் செய்து விட்டார். சுற்றுச்சூழலுக்காகவும். மது. புகை போன்றவற்றால் பாதிக்கபடுவதை தடுத்து நிறுத்த வக்கில்லாத கருணாநிதி தனி மனிதராக ஐந்து ஆண்டு காலத்தில் சுகாதர துறையில் போரடி பல சாதனைகளை புரிந்த மருத்துவர் அன்புமணி அவர்களை அழிக்க நினைத்து பாரளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் பன்னாட்டு கம்பனிகளுடன் கைகோர்த்து பல கோடிகளை வாரி இறைத்து நம்மை  தோற்கடித்த கருணநிதியை நாம் மட்டுமல்ல காலம் கூட மன்னிக்காது.இத்தனை நாள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து ஏரளமான பணத்தை சுரண்டி வைத்திருக்கிறோம். அந்த பணத்தில் கால் பங்கை செலவழித்தாலே ஒட்டுமொத்த தமிழக வாக்காளர்களையே விலைக்கு வாங்கி விடலாம் என்று செயல்படுகிறார் கருணாநிதி. இதன் மூலம் ஜனநாயகம் என்பது செத்த சவமாகிவிடும். அதனால்தான் தமிழகத்தில் ஜனநாயகம் பிழைக்க சர்வ நிச்சயமாக தி.மு.க தோற்க வேண்டும் நாம் வருங்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் பா.ம.க வெற்றிபட பாடுபடவேண்டுமே தவிற மாம்பழத்தை காலில் போட்டு மிதித்த ஸ்டாலினையே  வெற்றிபெற வைக்ககூடாது..

அரசியலில் துாய்மையானவர் நம் மருத்துவர் அய்யா

நம் மருத்துவர் அய்யா அரசியலில் துாய்மையானவர் ஆம் நடுவன் அமைச்சாரக பணிபுரிந்த காலத்தில் ஒரு சிறு தவறு கூட நடைபெறாமல் இந்திய அரசுக்கு பல விருதுகளை வாங்கி தந்தவர் தான் மருத்துவர் அய்யா நம்மின காவலர் எங்கே மற்ற அரசியல் வாதிகள் எங்கே....


ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக சொல்வார்கள்.  அழிவை பற்றி அக்கறை இல்லாமல் தனது ஆனந்தத்தை மட்டுமே பேணி பாதுகாக்கும் மனிதரை இப்படி சொல்வது வழக்கம்.  ஆனால் இன்றைய தலைவர்கள் பிடில் வாசிப்பதையெல்லாம் விட்டுவிட்டு அதை விட அதிகமான குரூரங்களில் ஈடுபட ஆரமித்துவிட்டார்கள்.  இதை இன்னும் விளக்கி சொல்ல வேண்டுமென்றால் சொந்த மகனை கழுத்தறுத்து வழியும் ரத்தத்தை மது கோப்பையில் பிடித்து ஆசை காதலிக்கு ஊட்டுவது போல என்றும் சொல்லலாம்.

  அமெக்க அதிபர் இந்தியா வருகிறார் இந்தியா வளரும் நாடு அல்ல வளர்ந்த நாடு என பட்டையம் தருகிறார் இன்னும் பல நாடுகளில் இருந்து வருகை தரும் தலைவர்கள் இந்தியா புத்துயிர் பெற்று விட்டது, வளமையோடு எழுந்து நிற்கிறது என்று பட்டு கம்பளத்தில் நின்று பாராட்டு உரை படித்து விட்டு போகிறார்கள்.  சராசரி இந்தியன் ஒழுகும் ஓட்டை குடிசையில் ஒடிந்த கட்டிலில் உட்கார்ந்து இலவச வண்ண தொலைக்காட்சியில் இவைகளை பார்த்து ஏக்க பெருமூச்சு விடுகிறான் .


  கந்து வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒவ்வொரு அரைமணி நேரத்திலும் எங்காவது ஒரு மூலையில் ஒரு விவசாயி தற்கொலை செய்கிறான்.  ஆடு மாடுகள் நிறைந்த பூமியில் உதட்டில் ஈரம் பட ஒரு துளி பால் இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு பதினைந்து குழந்தைகள் பட்டினியால் துடிதுடித்து சாகிறார்கள்.  போதிய போஷாக்கு இல்லாததால் தினசரி ரத்த சோகையில் ஏராளமான தாய்மார்கள் பாதிப்படைந்து கொண்டே வருகிறார்கள் வயல்வெளியில் பயிரை விட களைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது போல பொருட்களின் தரத்தை விட விலைவாசி பன்மடங்கு உயர்ந்து கிடக்கிறது.  தொழிற்சாலை இயங்குவதற்கும் பயிர்களுக்கு உயிர் தண்ணி கொடுப்பதற்கும் குழந்தைகள் இரவில் படிப்பதற்கும் கூட மின்சாரம் கிடையாது.  வயிற்றுவலி என்று அரசு மருத்துவமனை சென்றால் அப்பாவி இந்தியன் காலரா நோயால் செத்து போகிறான்.

  உண்மையான நிலை இப்படி இருக்கும் போது கடல் கடந்து வந்த தலைவர்களும் இங்கே இருக்கும் உள்வீட்டு தலைவர்களும் இந்தியா முன்னேறிவிட்டது என்கிறார்களே.  ஒருவேளை இந்த தலைவர்களுக்கு எதாவது பார்வை கோளாறா?  அல்லது வறுமையை மட்டுமே பார்க்கும் நமக்கு எதாவது மூளை கோளாறா?  என்ற சந்தேகம் வலுவாகவே வருகிறது.


  1990-க்கு முன்பு இருந்த இந்தியாவோடு ஒப்பிட்டு பார்க்கும் போது தற்கால இந்தியா முன்னேறி இருப்பதாகவே தோன்றுகிறது.  மக்களின் நுகர்வு கலாச்சாரம் அதிகரித்து உள்ளது.  நிலத்தின் விலை ஆகாயத்தை தொட்டாலும் வீட்டு மனைகளை வாங்கி போடுபவன் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.  ஆடம்பர பொருட்களான தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பொருட்கள், நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் உற்பத்தி எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.  ஐந்து ரூபாய் நோட்டுக்கு ஏங்கி கிடந்தவன் கூட ஐநூறு ரூபாய் நோட்டை சுலபமாக எடுத்து மாற்றுகிறான்.  இவையெல்லாம் முன்னேற்றத்தின் அடையாளம் தானே என்று நாம் நினைக்க தோன்றுகிறது.  தலைவர்கள் சொல்வது சரியாக இருக்க கூடுமோ என்று மயக்கமும் ஏற்படுகிறது.

  சிங்கப்பூர், ஜப்பான், அமெக்க நாடுகளை போல இந்தியாவும் பணக்கார நாடாக ஆகிவிட்டதாக நம்புவதில் சில சிக்கல்கள் உள்ளன.  சாலையோரங்களில் குடியிருப்போரின் எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை.  ஆயிரம் சட்டம் வந்தாலும், அனைவருக்கும் இலவச கல்வி என திட்டம் வந்தாலும் வேலைக்கு போகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை.  நெருக்கடி மிகுந்த பல சேரிப்பகுதிகளில் அடிப்படை சுகாதாரமும், மருத்துவ வசதியும் இன்று வரை கூட இல்லை.  கிராமங்களில் உள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலைவலிக்கு மாத்திரையும் இல்லை.  அதை தருவதற்கு மருத்துவரும் இல்லை.  எனவே வளர்ந்து விட்ட இந்தியா என்று காட்டப்படும் சித்திரம் வீக்கமே தவிர வளர்ச்சியில்லை.
  முன் எப்போதும் இல்லாததை விட இப்போது விவசாய தொழில் பெரிய பின்னடைவை எதிர் நோக்கி உள்ளது.  பருவ நிலை மாற்றத்தால் ஒரு பகுதியில் அதிகப்படியான மழையும், இன்னொரு பகுதியில் மழையே இல்லாத நிலையும் விவசாய மகசூலை சீர்குலைக்கிறது.  நீர் தேக்கங்களில் பராமரிப்பு சரிவரை இல்லை என்பதினால் தண்ணீர் தேவைக்கு குறைவாகவே கிடைக்கிறது. 

   அசுர வேகத்தில் ஆற்று மணல் படுகைகள் கொள்ளையடிக்கப்படுவதினால் நிலத்தடி நீருக்கும் பயங்கர பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.  முறைப்படி தண்ணீர் விட முடியாமல் மின்சாரம் கழுத்தை அருக்கிறது.  கூலிக்கு ஆள் கிடைப்பதில்லை.  களத்துமேட்டு நெல்லு வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் உழைப்பவனின் உயிரில் பாதிப்போய் விடுகிறது.  ஆனால் நமது மத்திய மாநில அரசுகள் இந்தியாவின் முதுகு எலும்பான விவசாயத்தை பற்றி கிஞ்சிதித்தும் கவலைப்படுவதில்லை.

  அவர்களுடைய கவலைகள் புதிய திட்டங்கள் எதை எதை போட்டு எவ்வளவு நீதி ஒதுக்கீடு செய்து அதில் எத்தனை சதவிகிதம் கமிஷன் அடிக்கலாம் என்றும், எந்த பெரிய முதலாளிக்கு அரசாங்க ஒப்பந்தங்களை கொடுத்து எப்படி விசுவாசத்தை காட்டலாம் என்றும், அடுத்து வரும் தேர்தல்களில் எவ்வளவு பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெறலாம் என்றும் இருக்கிறதே தவிர மக்கள் நலம், நாட்டு வளர்ச்சி என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட அவர்களுக்கு நேரமில்லை.  உண்மையில் இந்திய தலைவர்கள் மட்டும் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களாக இருந்திருந்தால் அமெரிக்க நாட்டையே பொருளாதார பலத்தால் அச்சுறுத்தி அடக்கி வைக்கலாம்.  அந்தளவு செல்வங்கள் நம்மிடம் குவிந்து கிடக்கிறது.  எடுத்து பயன்படுத்த தான் ஆட்கள் இல்லை.

 நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்ற உறுதி படைத்த தலைவர்கள் இருந்திருந்தால் இன்று உலகமே கைகொட்டி சிரிக்கும் அலைகற்றை ஊழல் நடைபெற்றிருக்கவே முடியாது.  2 ஜி அலைகற்றைகளை வாங்கிய நிறுவனங்கள் சம்பாதித்த தொகையை முழுவதும் நாட்டு நல திட்டங்களில் செலவிடப்பட்டிருந்தால் பாதி இந்தியாவை ஜப்பானாக்கி இருக்கலாம்.


  உதாரணமாக ஸ்வான்டெலிகாம் நிறுவனம் தான் வாங்கிய அலைகற்றையின் ரூ. 1500 கோடி உரிமத்தில் நாற்பத்தி ஐந்து சதவிகிதத்தை ஒரே வாரத்தில் விற்று 6000 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளது.  இதே போல யுனிடெக் நிறுவனம் 1658 கோடி ரூபாய்க்கு அரசாங்கத்திடம் பெற்ற உரிமத்தை சில நாட்களிலேயே 7442 கோடிக்கு விற்று உள்ளது.  டாட்டா டெலிசர்வீஸ் நிறுவனம் 1667 கோடிக்கான உரிமத்தில் வெறும் இருபத்தி ஐந்து சதவிகிதத்தை டோக்கோமா நிறுவனத்திற்கு 13000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.  ஒரே வாரத்திலேயே இத்தனை கோடி ரூபாய்களை சம்பாதிக்க முடியும் என்று தனியார் முதலாளிகளுக்கு தெரிந்த விஷயம் அரசு தலைவர்களுக்கு தெரியாது என்றால் அதை நம்புவதற்கு இந்தியர்கள் அனைவருமே மடையர்களாகத் தான் இருக்க வேண்டும்.

  அலைகற்றை ஊழல் மட்டுமல்ல இந்திய தேசிய காங்கிரஸின் ஊழல் மகுடத்தில் இன்னொரு வைரமாக காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் அமைந்துள்ளது.  பதினைந்து நாட்கள் மட்டுமே நடைபெற்ற ஒரு விளையாட்டு போட்டிக்கு அரசாங்கம் செலவிட்ட மக்கள் வரிப்பணம் ரூ. 70 ஆயிரம் கோடி ஆகும்.  இதே விளையாட்டு போட்டியை 2006-ல் ஆஸ்திரேலிய நாடு நடத்திய போது அங்கு செலவான தொகை 5200 கோடி மட்டும் தான்.  நான்கு ஆண்டுகளில் விலைவாசி உயர்வு நூறு சதவிகிதத்தை தாண்டி உயர்ந்து விட்டது எனக் கொண்டாலும் பத்தாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட வாய்ப்பே இல்லை.  ஆனால் மக்கள் வரிபணத்தில் 70000 கோடி ரூபாய் எடுத்து யார் யாரோ உண்டு கொழுத்து விட்டார்கள்.  மிக பெரிய ஊழல் என்று வர்ணிக்கப்பட்ட பீரங்கி பேரல் ஊழல் கூட இப்போது நடந்திருக்கும் ஊழல் முன்னால் தூசுக்கு சமமாக ஆகாது.


  இத்தகைய பெரிய ஊழல்களை ஆ. ராசா, சுரேஷ் கல்மாடி போன்ற தனிநபர்கள் மட்டுமே செய்தார்கள் என்பதை நம்புவது கடினம்.  பிரதமரின் அறிவுரையையும் மீறி ஊழல் நடந்ததாக சொல்வதை பார்க்கும் போது இந்தியாவின் அதிகார பீடம் பிரதமறிடம் இருக்கிறது என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.

  தேசிய அளவில் கருணாநிதி என்ற தனிநபரின் பலம் சுண்டக்காய் அளவு தான்.  மத்திய மனிதர்களின் அதிகார ஆசிர்வாதம் இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் மூட்டையை தனி ஒருவராக சுமந்து கொண்டு தமிழ் நாட்டிற்கு வந்திருக்க முடியாது.  ஊழலில் பங்கு பெற்ற பயன்பெற்ற பலரில் கருணாநிதி குடும்பமும் ஒன்றாகயிருக்குமே தவிர அவர்களே முற்றிலும் சுவை பார்த்தவர்கள் என்பதை நம்புவது கடினம்.

 பொதுவாழ்வில் நேர்மை, ஒழுக்கம் என்று வீராப்பு பேசும் நேரு குடும்பத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த இரண்டு ஊழல்களும் நடைபெற்றிருக்கவே முடியாது.  எனவே விசாரிக்க வேண்டியது தி.மு.க. வை மட்டுமல்ல சோனியாவையும் மன்மோகன் சிங்கையும் கூடவே தான்.  


   இந்த ஊழல் முன்னால் அரசாங்கம் ஏற்பாடு செய்யும் விசாரணை குழுக்கள் எதுவும் உருப்படியான செயலை செய்து விட இயலாது.  இந்திய மக்கள் சக்தி தான் தவறுகளுக்கு எல்லாம் மூலமாக இருக்கும் குடும்பங்களின் அதிகார வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலும்.  அப்படி முடிவுக்கு வராத வரையில் இந்தியா வளர்ந்த நாடு அல்ல, வளரும் நாடும் அல்ல, பைத்தியகார நாடு.
நமக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள்
முகவரி இல்லாமல் அல்லல் படுவார்கள் என்பதற்க்கு ஸ்பெக்ட்ரம் ஒரு பாடம்....

சினிமாக்காரனுங்க அரசியலுக்கு வராதிங்க!!! உங்களுக்கு தகுதியில்லை!!!

திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது என்பது தென்னிந்தியாவில் அதிகம். (ஏனென்றால்  இங்கே தான் சினிமா பைத்தியங்கள் அதிகம், அதுவும் ரசிகர் மன்றங்கள் பெயரில்...,) அங்கே கொஞ்ச காலம் இருக்க வேண்டியது!
வாய்ப்புகளின்றி, வயதாகிவிட்டதாலும், சீந்துவாரின்றி, போணியாகவில்லையெனில், அந்த முகம், பெயர் தெரிந்த விளம்பரத்தில், ஏதோ இவர்கள் தான் இந்த நாட்டை காப்பாற்ற அவதரித்த புருஷர்களாய், அரசியலுக்கு வருவேன்! வந்துவிட்டேன்!  இனி நாட்டை மாற்றிக் காட்டுவேன்! ஊழலை ஒழிப்பேன்! ஊறுகாய் போடுவேன்! என கிடைக்கும் (மைக்)ஒலிபெருக்கி முன் சினிமாவில் நடிப்பதைபோல உத்தமன் வேஷம் போட்டு நடித்து விட்டு, திரை மறைவில் செய்யும் அயோக்கிய தனங்கள் மக்களுக்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் சினிமா (ROSE பவுடர்) முகப்பூச்சு கவர்ச்சியில் மயங்கி விடுகின்றனர்.

இதில் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி, பாலக்காடு- மருதூர் கோபாலகிருஷ்ண இராமச்சந்திரன்(MGR ), மைசூர்-ஜெயலலிதா, கோபி-பாக்கியராஜ், மாயவரம் டி ராஜேந்தர், மதுரை விஜயகாந்த்,.... சீமான், சமீபத்தில் விஜய் வரை, ( இன்று அஜித் கூட நான் அரசியலுக்கு வந்தால்...? என ஒரு பேட்டி வந்துள்ளது).

இதில் மூன்று பேர் முதல்வர்களாகவும் 43 ஆண்டுகள் இந்த தமிழகத்தை ஆண்டும் விட்டனர்! இதனாலேயே இப்போதெல்லாம் ஒரு படத்தில் நடித்தவுடன், இயக்கியவுடன் அடுத்த படத்தில் பட்டப் பெயர்கள், ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்து தமிழகத்தை காக்க (கொள்ளையடிக்க) புறப்பட்டு விடுகின்றனர்!

நண்பர்களே! இனி விசயத்துக்கு வருவோம்!

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து,
ஊழலை ஒழிப்பேன்! லஞ்சத்தை ஒழிப்பேன்! என்கின்ற இவர்களின் லட்சணம் என்ன?
இவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு? சம்பளம் வாங்கியதற்கு ரசீது- வவுச்சர் -ல கையெழுத்து போட்டு வாங்குறாங்களா? வெள்ளையா? கருப்பு பணமாகவா??? -
சரி ஊழலை ஒழிப்பதாக வாய் கிழிய பேசும் நீங்கள் உங்கள் திரைப்பட வருமானங்கள்-இழப்புகள் குறித்து தணிக்கை உண்டா?? 
திரையரங்கத்தில் என் திரைபடத்திற்கு மிகச் சரியான கட்டணம் மட்டுமே வசூலிக்கப் படவேண்டும் என எவனாவது சொன்னதுண்டா? 
தன் ரசிகர்களிடம் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்கும் அளவுக்கு நான் ஒன்றும் புதிய சமுதாய புரட்சியை படைக்க, நடிக்கவில்லை என சொன்னவருண்டா?
திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் வாங்கிய பணத்துக்கு ஒழுங்கா, உண்மையா வருமானவரி கட்டின ஒரே
ஒருத்(தனை)தியை காட்டிவிடுங்கள்!!! பார்க்கலாம்! 
 
போலி வேஷதாரிகளை தலைவன், தலைவி என தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களே!  சிந்தியுங்கள்!


அப்புறம் இவர்கள் பொதுவாழ்க்கைக்கு வருவது எதற்க்காக???
நீங்களே  ஒழுங்காய் வரி கட்டாமல் நாட்டை அரசை ஏமாற்றுகிறீர்கள்?
நீங்கள அரசியலுக்கு வந்து சாதிக்கப் போவது என்ன? யாரை ஏமாற்றுகிறீர்கள்?  
 
பொதுவாழ்க்கையில்  தனி மனித ஒழுக்கம் பேணவேண்டும் என்ற அறிவு கொஞ்சமும் இல்லாமல், இவர்களின் திரை மறைவு வாழ்க்கையும், தனி மனித ஒழுக்கமும்,கூடாநட்பும்  பற்றி, ஒருவரை பற்றியாவது நல்ல முறையில் முன் மாதிரியாக இவரை போல என்று சொல்ல முடியுமா???
ஒரே ஒருத்(தனை)தியை காட்டிவிடுங்கள்!!! பார்க்கலாம்!
 
(விவரமாக சொல்ல ஆரம்பித்தால் பதிவின் நோக்கம் திசை மாறும்- தெரியாததொன்றுமில்லை -)

போலி வேஷதாரிகளை தலைவன், தலைவி என தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களே! சிந்தியுங்கள்!  

சரி! அரசியலுக்கு வந்தவர்கள், வந்துள்ளவர்கள் செய்யாத ஊழலா? அல்லது புதிதாய் அரசியலுக்கு வரும், வந்துள்ள  உங்களின் பக்கத்திலுள்ளவர்கள், உங்கள் கட்சியின் உறுப்பினர்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா? இவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு நீங்கள் எப்படி ஊழலை ஒழிப்பீர்கள்?

சரி உங்கள் ரசிகர் மன்ற செலவுகளை, கட்சியின் செலவுகளை எந்த எதிர்பார்ப்புமின்றி செலவு செய்யக் கூடிய நல்ல ரசிகர்கள் ஏன் உங்கள் பின்னால் அணி திரள்கின்றனர்? அந்தந்த ஊரில் உள்ளாட்சி நிர்வாகத்தில் அவர்களே பங்குகொண்டு அந்த நற்பணிகளை அவர்கள் செய்யலாமே! ஏன் உங்கள் பின்னால் வருகின்றனர்? அத்தனை உத்தமரா நீங்கள்? அப்படியெனில் உங்கள் முதல் படத்திலிருந்து இன்றுவரை உங்கள் சொத்துக் கணக்கை, வருமானவரிக் கணக்கை திறந்த புத்தகமாக மக்களிடம் முன் வைக்க வேண்டியது தானே??

(அடுத்து, நேற்று விஜயகாந்தின் மச்சான் சதீஷ் ஒரு பேட்டியில், ஒரு பேனரை கிழித்தால் அங்கு நூறு பேனரை வையுங்கள் என்கிறாரே! பேனர் செலவு யாருடையது? அந்த பணம் மீண்டும் ஊழலின்றி சம்பாதிக்க முடியுமா?)

முதலில் இப்படிப்பட்ட ஆடம்பர, விளம்பர, சினிமா & அரசியலை ஒழிப்போம்!  

பின்னர் அந்த பாலக்காடு- மருதூர் கோபாலகிருஷ்ண இராமச்சந்திரன்(MGR )காலத்திலிருந்து, பிளான் பண்ணி,ரொம்ப நல்லவன் மாதிரியே, மக்கள் சேவகனாய்  நடிக்கிறது! வேர்வை சிந்தி,
(ங்கொய்யால!!!  வயல்ல, வெயில்ல, மூட்டை சுமந்து) சம்பாரிக்கற  பணத்தில ஒரு சதவிகிதத்தை தையல் மெஷின், மூணு சக்கர சைக்கிள், இஸ்திரிப் பேட்டி (எனக்கு தெரிஞ்சு மூணு தான், இப்போ 50 கிலோ அரிசி மூடையும், காலேஜிலே பயன்படுத்த முடியாத பழைய Computers -இது தான் லேட்டஸ்ட்) இப்போ அரசியலுக்கு வந்த, வர்ற நடிகர்கள்  இலவசமா, இல்லாதவங்களுக்கு-  கொடுத்து, தன் கட்சியினராக ஆக்கி கொள்ளும், ஏதோ தான் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, மயிலுக்கு போர்வை கொடுத்த காரி-யை போல வள்ளல்களாய் காட்டி, அவர்களின் திரைமறைவு, தனி மனித ஒழுக்கக் கேட்டை மறைக்க பொய் வேஷமிட்ட, வேஷமிடும் இவர்களை நம்பியா நம் தமிழகத்தை ஆட்சி செய்ய ஒப்படைப்பது???

கிழிச்சானுங்க சினிமாக்காரனுங்க! அரசியலுக்கு வராதிங்க! உங்களுக்கு தகுதியில்லை!
போயும் போயும் இந்த கூத்தாடிகளிடம் நாட்டை கொடுத்து குட்டி சுவரானது போதாதா?

வேண்டும் ஓர் அரசியல் தூய்மை-நேர்மை-தியாக புரட்சி!


விவேகானந்தர்  என்னிடம் 100 இளைஞர்களை கொடுங்கள்! வருங்காலத்தில் வளமான வலிமையான் இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார்!

 யாராவது ஒரு அவதார புருஷன் வர மாட்டானா? என ஏங்கி தவிப்பவர்கள்,
ஏன் அந்த அவதார புருஷனாய் நாம், நம் சகோதரன், நம் நண்பன் இருக்கக் கூடாது? என சிந்தித்து, அவர்களுடனும் இந்த தகவலை பகிர்ந்து கொண்டு, நாம் விரும்பும் மாற்றத்தை, எதையும் நம்மிலிருந்து முதலாய் துவக்கலாம் என்ற எண்ணத்தோடு  அரசியலில் இணைந்து பணியாற்ற வாருங்கள்!
 
போலி வேஷதாரிகளை தலைவன், தலைவி என தூக்கி வைத்து கொண்டாடும் வன்னிய நண்பர்களே! சிந்தியுங்கள்!!!

நீங்கள் கானும் கனவை நிறைவேற்ற நம்மினத்தலைவவர் மருத்துவர் இராமதாசு, மருத்துவர் அன்புமனி இராமதாசு அவர்கள் வழி நடப்போம்..

பா.ம.கவின் போராட்டம் நடைபெறும் வரை திராவிட கட்சிகள் வன்னிய மக்களை குறித்து அக்கறை கொள்ளவில்லை....

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படுவதன் அவசியம் குறித்தும், அதனை எப்படி அமைக்கலாம் என்பது குறித்தும் இம் மாத "திசைகள்" இதழில் திரு.மாலன் எழுதியிருக்கிறார் (கட்டுரைக்கான சுட்டிகள் - 1,2). அவர் கூறுவது போல கூட்டணி ஆட்சி அமைப்பது சாத்தியமில்லாதது என்பது எனது கருத்து. இது ஒரு Theoretical approach தான் என்றாலும் மக்களின் வாக்களிப்பு முறையில் இயல்பாக வரும் மாற்றங்கள் மூலம் தான் கூட்டணி ஆட்சி சாத்தியமாகும்.

அவ்வாறான கூட்டணி ஆட்சி முறை தமிழகத்தில் சாத்தியமாகுமா ? இந்த தேர்தல் என்றில்லாமல் எதிர்காலத்திலாவது இந்த வாய்ப்பு ஏற்படுமா ?

எந்த தியரிப்படியும் மக்கள் வாக்களிப்பதில்லை. மக்கள் ஒரே கட்சிக்கு தான் பரவலாக வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்ற கருத்து கூட இது வரையில் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் அதுவே தொடர்ந்து கொண்டும் இருக்காது. மாற்றங்கள் ஏற்படவே செய்யும்.

மக்களின் வாக்களிக்கும் முறையில் இயல்பாகவே மாற்றங்கள் வரமுடியும். இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைந்த முறையை நோக்கும் பொழுது, தமிழகமும் அம் மாதிரியான ஒரு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது நமக்கு தெரியவரும்.

இந்தியாவில் ஒரே கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்கள் இன்று மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறார்கள். இதனை NDTVயின் பிரணாய் ராய் இந்திய ஜனநாயகம் Dynamicஆக மாறிக் கொண்டிருக்கிறது என்று வர்ணித்திருப்பார். கடந்த காலங்களில் தலைவர்களின் செல்வாக்கு, கட்சிகள் மீதான அபிமானம் போன்ற ஒரே பாணியில் வாக்களித்து கொண்டிருந்த மக்கள் (Static Pattern) சமீபகாலங்களில் கட்சிகளின் செயல்பாடுகளைக் கொண்டே வாக்களிக்கிறார்கள் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்துடன், இந்திய பொருளாதார வளர்ச்சி, குறியீடுகளின் உயர்வு போன்றவற்றுடன் ஊடகங்களின் புகழ்ச்சியுடன் கடந்த தேர்தலை சந்தித்த பாஜக தோல்வியடைந்தது கூட இந்திய வாக்காளர்கள் "மிகவும்" Dynamicஆக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தும். தங்களுடைய அடிப்படை வாழ்க்கை தேவைகளைக் கொண்டே அவர்களின் வாக்களிக்கும் முறை இருந்து வந்திருக்கிறது.

தமிழகத்திலும் இது நடந்து இருக்கிறது. 1996, 2001 ஆகிய தேர்தல்களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களும், 2004 பாராளுமன்ற தேர்தலின் முடிவும் சமீபகால உதாரணங்கள். ஜெயலலிதா தன்னுடைய சொந்த தொகுதியில் கூட தோல்வியடைந்தார் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். மக்கள் அரசாங்கங்களின் செயல்பாடுகளை மட்டுமே கொண்டு வாக்களிக்கிறார்கள். இந்த வாக்குகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன. எந்தக் கட்சி எவ்வளவு வாக்கு வங்கி வைத்திருந்தாலும் அது ஒரு Static நிலை தான். அது மட்டுமே தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது இல்லை.

தமிழகத்தில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பல கருத்துக்களை பல காலமாக கூறி வந்திருக்கிறார்கள். தமிழக மக்கள் பாரளுமன்ற தேர்தலுக்கு ஒரு பாணியிலும், சட்டமன்ற தேர்தல்களில் ஒரு பாணியிலும் வாக்களிப்பார்கள் என்பதாக இரு கருத்து இருக்கிறது. சாதாரண கிராமத்து வாக்காளன், நான் பிரதமரை தேர்ந்தெடுக்கப் போகிறேன் அதனால் இவருக்கு தான் வாக்களிப்பேன் என்றோ நான் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப் போகிறேன் அதனால் இவருக்கு தான் வாக்களிப்பேன் என்றோ தீர்மானிப்பதில்லை. படித்தவர்கள் வேண்டுமானால் இவ்வாறு வாக்களித்து கொண்டு இருக்கலாம். மக்கள் அந்த நேரத்தில் ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் கோபம் அல்லது ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் அபிமானம் இவற்றைச் சார்ந்தே வாக்களிக்கிறார்கள். அதனால் தான் 2004 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தோல்வியடைந்தது.

இன்று இந்தியாவின் மைய அரசாங்கத்தை நிர்வாகிக்கும் ஆளும் கட்சியின் எதிர்காலம் மாநில அரசுகளின் செயல்பாடுகளைக் கொண்டே உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு மாநிலத்திற்கு மாநிலம் இயல்பாக மாறும் வாக்களிக்கும் முறையே இந்தியாவில் கூட்டணி ஆட்சியை தோற்றுவித்து இருக்கிறது.

இதைத் தவிர மற்றொரு முக்கியமான காரணம் - பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி.

இந்தியாவின் தேசிய கட்சிகள் இந்தியாவின் பலதரப்பட்ட மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இந்தக் காரணமே பல பிராந்தியங்களில் பிராந்திய உணர்வு தலைத்தூக்க முக்கிய காரணம். குறிப்பாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட பல மாநிலங்களில் அந்த மாநிலத்தின் உரிமை கேட்டு பிராந்திய உணர்வு தலைதூக்க தொடங்கியது. தமிழகத்தில் மொழியைச் சார்ந்து இந்த இயக்கம் இருந்தது என்றால் அசாம் போன்ற மாநிலங்களில் தேசிய கட்சிகள் தங்கள் மாநிலத்திற்கு பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரவில்லை என்பதாகவும், ஆந்திராவில் ஆந்திராவின் சுயமரியாதை போன்ற கோஷங்கள் மூலமாகவும் பிராந்திய கட்சிகள் உருவாகின. பல மாநிலங்களில் வலுவாக இருந்த பிராந்திய தலைவர்கள் தாங்கள் சார்ந்து இருந்த கட்சியையோ, காங்கிரசுக்கு மாற்றாக இருந்த கட்சியையோ பலமாக வளர்த்துக் கொள்ள முடிந்தது. இவ்வாறு தான் பல தலைவர்கள் உருவாகினர். கர்நாடகாவில் தேவகவுடா, ராமகிருஷண் ஹெக்டே, ஒரிசாவில் பிஜு பட்நாயக் பிறகு அவரது மகன், முலயாம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ், ஜார்ஜ் பிரணாண்டஸ், பால்தாக்ரோ போன்றோர் தங்களுடைய மாநிலத்தில் கணிசமான ஆதரவை பெற்றிருந்தனர். இதற்கு காரணம் மைய அரசால் பல மாநிலங்களின் தேவையை தீர்க்க முடியவில்லை. பொருளாதார பிரச்சனைகள் காங்கிரசை வலு இழக்க செய்தது. இது பிராந்திய கட்சிகளையும், தலைவர்களையும் வலு இழக்க செய்தது.

இதை எல்லாவற்றையும் விட காங்கிரஸ் இயக்கம் நேருவுக்குப் பிறகு தன்னுடைய தாக்கத்தை இழக்க தொடங்கியது. இது இந்திரா காந்தி காலத்தில் வளர்ந்து ராஜீவ் காலத்தில் பிரதிபலிக்க தொடங்கியது. இந்தியா போன்ற ஒரு பெரிய தேசத்தில் அதுவும் பல வேறுபாடுகளைக் கொண்ட தேசத்தில் ஒரே கட்சி தன்னுடைய தாக்கத்தை தொடருவது சாத்தியமில்லாதது. நேரு என்ற கவர்ச்சியான பிம்பம், சுதந்திரத்திற்கு பாடுபட்ட கட்சி என்பதை கடந்து அதுவும் ஒரு சராசரி அரசியல் கட்சி என்றான பொழுது அதிலிருந்து பல கிளைக் கட்சிகள் தோன்ற தொடங்கின. மாற்று எண்ணங்களும் வலுப்பெற தொடங்கின. அந்த மாற்று எண்ணங்களின் ஒரு அங்கமாகத் தான் பாரதீய ஜனதா கட்சி தோன்றியது. பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி, பிற பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி போன்றவை காங்கிரசின் ஓட்டுவங்கியை கரைக்க தொடங்கின.

இவ்வாறான பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி தேவ கவுடா பிரதமராகியப் பிறகு வலுப்பெற தொடங்கியது. மாநிலம் மாநில கட்சிகளுக்கு, மைய அரசு தேசிய கட்சிகளுக்கு என்ற ரீதியில் கூட்டணி அமைத்து கொண்டிருந்த மாநில கட்சிகள் மைய அரசில் பங்கேற்பும் வாய்ப்பை பெற்றவுடன் மைய அரசில் பங்கு கொள்வதிலும், மைய அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் இருக்கும் வாய்ப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தன.இது தேசிய கட்சிகளை மேலும் பலவீனப்படுத்தின.

ஒரு கட்சி ஆட்சி முறை களையப்பட்டு பல கட்சி கூட்டணி முறைக்கு இந்தியா இவ்வாறு தான் வந்து சேர்ந்தது. இன்று இந்த நிலையில் இருந்து இந்தியாவால் விலக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

இதே மாதிரியான போக்கு தற்பொழுது தமிழக அரசியலில் காணப்படுகிறது. காங்கிரசின் ஓட்டு வங்கியை 1967க்குப் பிறகு கைப்பற்றிய திமுக, பின் தன்னுடைய வாக்கு வங்கியை அதிமுகவிடம் இழந்தது. வடமாவட்டங்களில் திமுகவின் பலமான வன்னியர் வாக்கு வங்கியை பாட்டாளி மக்கள் கட்சி பகிர்ந்து கொண்டது. தலித் மக்களை கொண்ட காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கியை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் கைப்பற்றியது. இது போல மதிமுகவிடம் தன்னுடைய தென் மாவட்ட வாக்கு வங்கியில் கணிசமான பங்கினை திமுக இழந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அதிமுகவின் பலமான தேவர் வாக்கு வங்கி சரியலாம்.

இதற்கும் பொருளாதார காரணங்களை தான் கூற வேண்டும். உதாரணமாக பாமக எப்படி தோன்றியது என்பதை பார்க்கு பொழுது இது நமக்கு தெரியவரும். வடமாவட்ட பிற்படுத்தப்பட்ட வன்னிய மக்கள் ஏழ்மையில் இருந்த நிலையில் அவர்களின் கல்வி வேலைவாய்ப்பிற்கான இடஒதுக்கீடு போராட்டமாக தொடங்கி பின் பொருளாதார ரீதியில் ஒரளவிற்கு முன்னேறிய நிலையில் அரசியல் அதிகாரங்களை பிடிக்க பாமக உருவாகியது. வன்னிய மக்களின் போராட்டம் நடைபெறும் வரை திராவிட கட்சிகள் இந்த மக்களை குறித்து அக்கறை கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அந்த நிலையை தனக்கு சாதகமாக வன்னியர் சங்கம் மற்றும் பாமக பாமக பயன்படுத்திக் கொண்டது.

அது போல தலித் மக்களை இரு கட்சிகளும் உதாசினப்படுத்திய நிலையில் அவர்களுக்கான இயக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் உருவாகியது. தலித் மக்களுக்ம் இந்த இயக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.

இந்தியாவில் எப்படி பிராந்திய உணர்வைச் சார்ந்து இந்த இயக்கங்கள் வளர்ந்தனவோ அது போல தமிழகத்தில் சாதியை அடிப்படையாக கொண்டு இந்த இயக்கங்கள் வளர்கின்றன. இந்தியாவில் எப்படி பிராந்திய உணர்வுகள் இயல்பாக இருக்கின்றனவோ அது போல தமிழகத்தில் சாதீய உணர்வு இயல்பாக இருப்பதால் அதனைச் சார்ந்து தான் இயக்கங்கள் வளர முடியும். தமிழகம் போன்று இருக்கும் மற்றொரு மாநிலம் உத்திரபிரதேசம். அங்கு இன்று கூட்டணி ஆட்சியைத் தான் அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்,

வடமாவட்டங்களில் ஏற்பட்ட இந்த மாற்றம் தென்மாவட்டங்களில் ஏற்படவில்லை என்றாலும் அதிமுகவைச் சார்ந்து இருக்கின்ற தேவர் வாக்குகள் எதிர்காலத்தில் சரியலாம். அப்பொழுது தென்மாவட்டங்களில் பலமாக தெரியும் அதிமுக தன்னுடைய பலத்தை இழக்கும். ஏற்கனவே வடமாவட்டங்களில் அதிமுகவிற்கு பெரிய செல்வாக்கு இல்லை. இந்த நிலையில் தென்மாவட்ட வாக்கு வங்கி சிதறும் பொழுது கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் உறுதியாகும் (இது என்னுடைய கருத்து தான். நடக்காமலும் போகலாம்). ஆனால் தற்போதைய சூழலில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் குறைவு தான்.

இன்று தமிழக அரசியலில் பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை எந்தக் கட்சியும் தனித்து போட்டியிடும் நிலையில் இல்லை. இது பெரிய கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. பாமக 30இடங்களை திமுக கூட்டணியிலோ அதிமுக கூட்டணியிலோ பெற்றுக் கொண்டு அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்ந்த முன்வந்து விடுகிறது. தனித்து போட்டியிட்டு ஒரு இடம் கூட கிடைக்காமல் இன்று மதிமுகவும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இதற்கு காரணம் சிறுகட்சிகள் தங்களை ஒரு அணியாக அமைத்துக் கொள்வதில் இருக்க கூடிய சிக்கல்கள். அதனால் பெரிய கட்சிகள் இவ்வளவு தொகுதிகள் தான் கொடுக்க முடியும் என்று சொல்லும் பொழுது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் சிறு கட்சிகளுக்கு ஏற்படுகிறது.

ஆனால் இந்த நிலையில் கூட எதிர்காலத்தில் மாற்றம் வரலாம். அது சிறிய கட்சிகள் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. சமீபத்தில் கூட பாமக-விடுதலைச் சிறுத்தைகள் இவ்வாறு இணைய தொடங்கியதையும், இவ்வாறு இணைபவர்களுக்கு நிறைய இடங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக திமுக அதனை நிராகரித்ததையும் நாம் கவனிக்க வேண்டும். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெறும் பட்சத்தில் இது எதிர்வரும் தேர்தல்களில் சாத்தியமாகலாம். அப்பொழுது பெரிய கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை குறைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் எழலாம்.

இன்று திமுக கூட்டணி போட்டியிடும் இடங்களைப் பார்க்கும் பொழுது கூட்டணி ஆட்சியை நோக்கி நாம் நகர்ந்து செல்வது தெரியவரும். திமுக 130 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. இதில் சுமார் 80% தொகுதிகளில் வெற்றி பெற்றே தீரவேண்டும். பெரிய அலை இல்லாமல் கடுமையாக போட்டியிருக்கும் இந்த தேர்தலில் இது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. அதுவும் தவிர தென்மாவட்டங்களில் பலவீனமாக இருக்கும் திமுக தென்மாவட்ட தொகுதிகளை கைப்பற்ற முடியுமா என்பதை பொறுத்தே திமுக தனித்து ஆட்சி அமைப்பதோ, கூட்டணி ஆட்சி அமைப்பதோ இருக்கிறது. திமுகவின் வெற்றியே தென்மாவட்டங்களில் அந்தக் கட்சி பெறும் வெற்றியை கொண்டே இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

அது போல அதிமுக வடமாவட்டங்களில் பலவீனமான கட்சி. விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக தவிர இந்தக் கூட்டணிக்கு வடமாவட்டங்களில் திமுக-பாமக கூட்டணியுடன் ஓப்பிடத்தகுந்த அளவில் செல்வாக்கு இல்லை. எனவே வடமாவட்டங்கள் தான் அதிமுகவின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகின்றன.

வடமாவட்டமும், தென்மாவட்டமும் இரு கூட்டணி இடையே பிரிந்து போனால் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் உருவாகும். அப்படி இல்லாவிட்டால் ஒரு கட்சி ஆட்சி தான் ஏற்படும்.

தமிழக மக்கள் எப்பொழுதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள். இந்தியாவின் முதல் தேர்தலில் இந்தியாவெங்கும் இந்திய தேசிய காங்கிரஸ் பெருவாரியாக வெற்றி பெற்று கொண்டிருக்க, சென்னை மாகாணத்தில் (தமிழகம், ஆந்திராவின் சிலப் பகுதிகளை உள்ளடக்கிய மாகாணம்) காங்கிரஸ் குறைவான இடங்களையே வெல்ல முடிந்தது.

அன்றைக்கு தொடங்கி பல தேர்தல்களில் பொதுவாக ஊடகங்கள் முன்வைத்த வாதங்களை தமிழக மக்கள் மறுத்தே வந்திருக்கிறார்கள். அது வெற்றி பெறும் கட்சிகள் குறித்து கணிப்புகளாக இருந்தாலும் சரி, சினிமா நடிகர்களை முன்வைக்கும் ஊடகங்களின் பிரச்சாரங்களாக இருந்தாலும் சரி அவற்றையெல்லாம் மக்கள் பொருட்படுத்துவதில்லை. மக்களின் உணர்வுகளை ஊடகங்கள் சரியாக பிரதிபலித்ததும் இல்லை.

இந்த தேர்தலிலும் ஆச்சரியங்கள் இருக்கலாம்.

நன்றி -சசி