நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, January 5, 2011

மருத்துவர் இராமதாசு அவர்கள் தலைமையில் தமிழகத்தில் மூன்றவது அணி....

மிழகத்தை நேசிக்கின்ற நல்ல மனங்கள் பல உள்ளன அந்த மனங்களின் உண்மையான ஏக்கங்கள் பல என்றாலும் மிக முக்கியமானது 1967 முதற்கொண்டு தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இருபெரும்  கட்சிகளே மாறி மாறி அரசாளுகின்றன

இதில் யாராவது ஒருவராவது மக்களுக்கு ஆக்கப்பூர்வமான செயல்களை செய்வார்களா என்றால் எதுவும் இல்லை

இவர்களை தவிர்த்து வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்குமே? என்பதுதான் ஆனால் மாற்று ஏற்பாடாக நல்லவர்கள் யாரும் ஆளும் ஆண்ட தமிழக அரசியல் வானில் தென்பட வில்லை என்பதுதான் யதார்த்த உண்மையாக உள்ளது

காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் கைவிட்டுப் போன அதிகாரத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக கிடையாது


  காங்கிரஸ்காரர்கள் உறக்கத்தில் கூட சோனியா காந்தி எப்போது எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பாரோ நம் கட்சிப் பதவி எப்போது பறிபோகுமோ? என்ற பதபதைப்புத்தான் தொடர்கிறது

பொதுவுடமை கட்சிக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் இரவு பகலாக போராட்டங்கள் நடத்துவதில் தான் ஆர்வம் உள்ளதே தவிர  தேசிய அளவிலும் சரி மாநில அளவிலும் சரி மக்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர  தீர்வுகள் காண முயற்சிப்போமே என்ற எண்ணம் எப்போதுமே கிடையாது

தங்களது ஆட்சி இருக்கின்ற மாநிலங்களில் கூட அவர்களின் செயல்பாடுகளால் மக்கள் நன்மை அடைகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்

பா.ஜ.க. போன்ற கட்சிக்களும் கூட தங்களுக்குள் கோஷ்டி சண்டையில்தான் தமிழ் நாட்டிலேக் கூட உள்ளனர் அவர்களை நம்புவதும் மண்குதிரையை நம்புவதும் ஒன்றுதான்


   
சரி நிலமை இப்படியே போனால் கருணாநிதி ஜெயலலிதா போன்ற பூனைகளுக்கு மணிக்கட்டுவது யார்? தமிழகத்தை குடும்ப ஆதிக்கத்திலிருந்தும் மன்னார்குடி சுரண்டலிருந்தும் காப்பாற்றப் போவது யார்?


 
மருத்துவர் இராமதாசு அவர்கள் தலைமையில் தமிழகத்தில் மூன்றவது அணி அமைத்து. மந்திரி சபையில் பங்கெடுத்துக் கொள்ள சொல்லி காங்கிரஸ் மற்றும் உதிரி கட்சிகளை இணைத்து இடதுசாரிகளையும் அரவணைத்து மூன்றாவது அணியை உருவாக்கினால் அரசியலில் மட்டுமல்ல ஆட்சியிலும் மாற்றம் நிச்சயம் ஏற்படும்

கழக மாயங்களை ஒழித்து விட்டால் தமிழகம் வளம் பெறும்...

10 comments:

nerkuppai thumbi said...

pl see:
http://anbutamilnet.blogspot.com/2011/01/blog-post_2239.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FriWnR+%28%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%29

nerkuppai thumbi said...

கொஞ்சம் வித்தியாசனமான பதிவு.
இரண்டு கழகங்களை விட்டால் வேறு நாதி இல்லாமல் இருக்கிறோமே என்று அங்கலாய்க்கும் பதிவுகள் ஏராளம்.
ஒரு சில காப்டனுடன் காங்கிரஸ் சேர்ந்து மூன்றாம் அணி என்று கூட கண்டிருக்கிறேன்.
இது வரை கூட்டணி விட்டு கூட்டணி தாவிக்கொண்டிருந்த மருத்துவர் ஒரு அணியை அமைக்கலாம் என்று இது வரை எழுதிக் காணவில்லை; அவர்களே அப்படி நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. இது போல் அவர்களும் சிந்திக்கலாம்.
ஆனால் ஒன்று: மருத்துவர் இது வரை நீண்ட காலத் திட்டங்களைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்ல வில்லை என்று நினைக்கிறேன். குறிப்பிட்ட பிரச்னைகளைப் பற்றியே பேசியதாக நினைவு.: பொறி இயல், மருத்துவ கல்விக்கு பொது தேர்வு வேண்டாம்; கிராமப் புற மாணவர்களுக்கும் வாய்ப்பு வேண்டும்; மது விலக்கு; பொருளாதார முன்னேற்றத்தில் வன்னியர்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை; போன்ற சில.
விவசாயத்தை, மேலும் விவசாயிகளின் முன்னேற்றம், அவர்கள் நிலங்களை கையகப் படுத்தினால் அவர்களுக்கு தர வேண்டிய ஈட்டு தொகை; தொழில் மேன்பாடு; கிராமங்களில் கல்வி வசதி, மருத்துவ வசதி, வணிகத்தில் தமிழகம் என்னென்ன செய்யலாம் ; பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு தருவதா வேண்டாமா,
ஆங்கிலக் கல்வி/தாய் மொழி கல்வி, சிறு தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, போன்ற விஷயங்களில் தொலை நோக்குடன் கொள்கைகள்/அணுகுமுறை எனப் பல கூறலாம்.
ஏதாவதொரு கூட்டணியிலேயே இருந்ததால், அந்த அணியின் கொள்கைகளை விட்டு புதிய அணுகுமுறையை அழுத்திச் சொல்ல முடியாத நிலை இருந்தது உண்மை தான். அது இப்போது செய்யப்பட வேண்டும். வரும் தேர்தலில் இல்லையெனில், அடுத்த தேர்தலில் பெரும்பான்மை என நினைத்து செயல் பட வேண்டும்.
மிகப் பெரிய விஷயம்: ஊழல் குறித்து அதை களைவதைப் பற்றி சிறப்பான அணுகுமுறையைக் காட்ட வேண்டும். சிந்தனை தமிழகம் முழுதுக்குமானதாக அதாவது, வன்னியர்/வட தமிழகம் என்று குறுகிய வட்டத்துக்குள் இருந்து வெளி வர வேண்டும்.
அதாவது பிள்ளையார் சுழியில் இருந்து துவங்க வேண்டும். எண்ணம் செயல்பட வாழ்த்துக்கள். 10/01/2011

nerkuppai thumbi said...

கொஞ்சம் வித்தியாசனமான பதிவு.
இரண்டு கழகங்களை விட்டால் வேறு நாதி இல்லாமல் இருக்கிறோமே என்று அங்கலாய்க்கும் பதிவுகள் ஏராளம்.
ஒரு சில காப்டனுடன் காங்கிரஸ் சேர்ந்து மூன்றாம் அணி என்று கூட கண்டிருக்கிறேன்.
இது வரை கூட்டணி விட்டு கூட்டணி தாவிக்கொண்டிருந்த மருத்துவர் ஒரு அணியை அமைக்கலாம் என்று இது வரை எழுதிக் காணவில்லை; அவர்களே அப்படி நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. இது போல் அவர்களும் சிந்திக்கலாம்.
ஆனால் ஒன்று: மருத்துவர் இது வரை நீண்ட காலத் திட்டங்களைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்ல வில்லை என்று நினைக்கிறேன். குறிப்பிட்ட பிரச்னைகளைப் பற்றியே பேசியதாக நினைவு.: பொறி இயல், மருத்துவ கல்விக்கு பொது தேர்வு வேண்டாம்; கிராமப் புற மாணவர்களுக்கும் வாய்ப்பு வேண்டும்; மது விலக்கு; பொருளாதார முன்னேற்றத்தில் வன்னியர்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை; போன்ற சில.

nerkuppai thumbi said...

விவசாயத்தை, மேலும் விவசாயிகளின் முன்னேற்றம், அவர்கள் நிலங்களை கையகப் படுத்தினால் அவர்களுக்கு தர வேண்டிய ஈட்டு தொகை; தொழில் மேன்பாடு; கிராமங்களில் கல்வி வசதி, மருத்துவ வசதி, வணிகத்தில் தமிழகம் என்னென்ன செய்யலாம் ; பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு தருவதா வேண்டாமா,
ஆங்கிலக் கல்வி/தாய் மொழி கல்வி, சிறு தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, போன்ற விஷயங்களில் தொலை நோக்குடன் கொள்கைகள்/அணுகுமுறை எனப் பல கூறலாம்.
ஏதாவதொரு கூட்டணியிலேயே இருந்ததால், அந்த அணியின் கொள்கைகளை விட்டு புதிய அணுகுமுறையை அழுத்திச் சொல்ல முடியாத நிலை இருந்தது உண்மை தான். அது இப்போது செய்யப்பட வேண்டும். வரும் தேர்தலில் இல்லையெனில், அடுத்த தேர்தலில் பெரும்பான்மை என நினைத்து செயல் பட வேண்டும்.
மிகப் பெரிய விஷயம்: ஊழல் குறித்து அதை களைவதைப் பற்றி சிறப்பான அணுகுமுறையைக் காட்ட வேண்டும். சிந்தனை தமிழகம் முழுதுக்குமானதாக அதாவது, வன்னியர்/வட தமிழகம் என்று குறுகிய வட்டத்துக்குள் இருந்து வெளி வர வேண்டும்.
அதாவது பிள்ளையார் சுழியில் இருந்து துவங்க வேண்டும். எண்ணம் செயல்பட வாழ்த்துக்கள். 10/01/201

கிராமத்தான் said...

உமது எண்ணங்களே எமது எண்ணங்களும்

நன்றி

arun said...

உமது எண்ணங்களே எமது எண்ணங்களும்

arun said...

உமது எண்ணங்களே எமது எண்ணங்களும்

arun said...

உமது எண்ணங்களே எமது எண்ணங்களும்

arun said...

உமது எண்ணங்களே எமது எண்ணங்களும்

arun said...

உமது எண்ணங்களே எமது எண்ணங்களும்

நன்றி