நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, February 24, 2012

பாமகவில் மீண்டும் இணைகிறார் பண்ருட்டி இராமசந்திரன்....? பாமகவில் மீண்டும் இணைகிறார் பண்ருட்டி இராமசந்திரன்....?

பாமகவில் மீண்டும் இணைகிறார் பண்ருட்டி இராமசந்திரன்....?


சில நாட்களுக்கு முன்பு திமுக வில் உள்ள நமது இனமான வீரபாண்டி ஆறுமுகத்தை திமுக ஓரம் கட்டி வருவது அனைவரும் அறிந்ததே..

வன்னியர்கள் எங்கிருந்தாலும் அவர்களை வாழவும், வளரவும் விடுவதில்லை தமிழகத்தை குடிகார நாடக மாற்றிவரும் திராவிடகட்சிகள்..


 1991-ல் பா.ம.க சார்பில் வென்ற முதல் M.L.A பண்ருட்டி S.இராமசந்திரன்,
பாமக வில் இருந்து பிரிந்து சென்ற ராமசந்திரன் தற்போது தேமுதிகவில்
உள்ளார்



தற்பொழுது தேமுதிக வின் முக்கிய புள்ளியாக வலம் வந்தவரும், தேமுதிக வின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவரும் தற்பொழுது தேமுதிக அவை தலைவராகவும் உள்ள பண்ருட்டி இராமசந்திரன் புறக்கணிக்கபடுகிறார்..


சென்னையில பொதுக்குழு நடந்த மண்டபத்தை சுற்றியும், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் விளம்பர பேனர்கள் கட்டியிருந்தா தேமுதிக வின் விளம்பர பதாகையில்  ஒண்ணுல கூட பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரும் இல்லை; போட்டோவும் இடம் பெறலை... பொதுக்குழுவுல அவர் பேசி முடிக்கறப்ப யாரும் கைதட்டலை... இதுல, அவருக்கு ரொம்ப வருத்தம் தான்... இருந்தாலும், அதை வெளிக்காட்டலை...




இருந்தாலும் தன் கட்சிகாரர்களிடம் பண்ருட்டி இராமசந்திரன் வருத்தபடுவதாகவும்.பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள பண்ருட்டி இராமசந்திரன் அவர்கள் தான் மீண்டும் தன் தாய் கட்சியான பாமகவில் இணையவிருப்பதாகவும் கூறிவருவதாக தேமுதிகவினரிடையே  பெரும் பரப்பரப்புடன் பேசப்பட்டுவருகிறது..