நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, March 31, 2011

விஜய்காந்து அரசியலில் ஆப்பு வைக்க பாஸ்கரனை அனுகவும்..

 

எதிர்க்கட்சிக்காரர்கள் யாரவது பாஸ்கரனை அனுகி, உனக்கு 10 கோடி தறேன்னு, " விஜய்காந்து கோபம் வந்து உன்னை அடிச்சான் னு உண்மையை ஒரு போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளய்ன் பண்ணு" விலை பேசி அதற்கு பாஸ்கரன் சரி என்றால், விஜய்காந்து அரசியல் வாழக்கை இன்றோடு ஒரு முடிவுக்கு வந்துவிடும்!

எத்தனைகோடி நஷ்ட ஈடு விஜய்காந்திடம் பெற்றாரோ அந்த அடிவாங்கிய பாஸ்கரன்? விஜய்காந்திடம் வாங்கிய அந்த நாலு அடிக்கு குறைந்தது நாலு கோடியாவது வாங்கி இருப்பார்!

மொதல்ல விஜய்காந்து அவரோட வேட்பாளர் “பாண்டியனை” (பாஸ்கரனை) அடிச்சான்னு சொன்னதும் நான் நெஜம்மாவே நம்பலை! சும்மா விஜய்காந்துமேலே உள்ள கெட்ட எண்ணத்திலே இவரை வச்சு காமெடி பண்ணுறானுகனுதான் சத்தியமா நெனச்சேன். ஆனால், அந்த வீடியோ மட்டுமல்லாமல், விஜய்காந்தே நான் அடிச்சேன்னு சொல்ற ஆளு மஹாராஜரா ஆகிவிடுவார்னு பிதற்றிப் பூசி மொளுகுவதைப் பார்த்தால், இவன் அடிச்சான்கிறதை நம்பாமல் இருக்க முடியலை!

சிறுகுழந்தைகளை, தான் பெற்ற பிள்ளைகள் தவறு செய்யும்போது அடிப்பதே தவறு! அப்படியிருக்கும்போது தன்னால் (இந்த ஆளுதானே வேட்பாளரை தேர்ந்தெடுத்தது) தரமான ஆள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வேட்பாளரை தொடுவதே மிகப்பெரிய தவறு. இந்த ஆளு என்னப்பா உண்மையிலேயே பப்ளில் மத்தியில் இப்படி அடிச்சு இருக்கான்!! கைநீட்டி அடிக்கும் விஜய்காந்துபோல ஒரு கீழ்த்தரமான ஆளுக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு?

மேதாவி சோ ராமசாமி என்னவோ விஜய்காந்து தன் வேட்பாளரை அடிச்சா தப்பு இல்லைனு சொன்னதாகச் சொன்னார்கள். சோ ராமசாமிக்கு என்ன மறை கழண்டுருச்சா? திமுக ஆட்சி ஒழியனும் என்பதற்காக இவன் என்ன வேணா பேசலாமா? ஒரு வேட்பாளரை மக்கள் முன்னிலையில் அடிச்சதை எப்படி தவறில்லைனு சொல்ல முடியும்?

ஆமா, விஜய்காந்தை, வடிவேலு தரமற்றுப் பேசியவைகளை விமர்சனம் செய்த மேதாவிகள் இப்போ அநாகரிகமாக நடந்த முட்டாள் விஜய்காந்தை கண்டிக்க முன்வரவில்லையே, அது ஏன்?

பதிவுலகில் உள்ள சாதாரண அதிமுக ஜால்ரக்கள், விஜய்காந்து ஜால்ராக்கள் எல்லாம் விஜய்காந்தின் இந்த கிழ்த்தரமான செயலை பார்த்துக்கிட்டு என்னமோ ஒண்ணுமே நடக்காத மாதிரி பொத்திக்கிட்டு இருக்கார்கள்! பதிவுலகில் இஷ்டத்துக்கு நியாயம் பேசும் இவர்களே இப்படி பெரிய அரசியல்வாதிபோல் நடந்துகொள்ளும்போது பல ஆண்டுகள் அரசியலில் புரண்டவர்கள் எப்படி எல்லாத்தையும் உதிர்த்துவிட்டு இருப்பார்கள் என்று விளங்குது!
 
நன்றி..