நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, March 29, 2011

நிதானம் தவறி உளறுகிறார் விஜயகாந்த்: மாவீரன் ஜெ.குரு

நடிகர் விஜயகாந்திற்கு தேர்தல் ஜுரம் அதிகரித்து, நிதானம் தவறிவிட்டார். என்ன பேசுகிறோம்? வரலாறு என்ன? என்று அறியாமலும், புரியாமலும் மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார் என, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு கூறியுள்ளார்.

வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடிகர் விஜயகாந்திற்கு தேர்தல் ஜுரம் அதிகரித்து, நிதானம் தவறிவிட்டார். என்ன பேசுகிறோம்? வரலாறு என்ன? என்று அறியாமலும், புரியாமலும் மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார்.

மரங்களையெல்லாம் வெட்டி விட்டு இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் மரங்களை நடச் சொல்லுகிறார்கள் என்று விபரம் தெரியாமல் விஜயகாந்த் பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் மிகப்பெரிய பின் தங்கிய சமுதாயம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதார சூழ்நிலையிலும் தொடர்ந்து பின்தங்கி கிடந்த நிலையில், 1987ஆம் ஆண்டு இச்சமுதாயம் மருத்துவர் அய்யா அவர்களின் தலைமையில் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை நடத்தியது.

சமூக நீதிக்காக நடைபெற்ற இப்புனித போராட்டம் நடந்த காலத்திலே, தன்னுடைய பிழைப்பிற்காக கோடம்பாக்கம் தெருக்களிலே சுற்றி திரிந்த ஒரு நபர் இப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவது இந்த புனிதப் போராட்டத்தில் பங்கு கொண்ட இலட்சக்கணக்கான மிகபின்தங்கிய மக்களையும், தன் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளின் தியாகத்தையும் இழிவுப்படுத்துவதாக உள்ளது.

அதிமுக ஆட்சியில் இந்தப் போராட்டம் நடந்தாலும், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞரின் ஆட்சியில்தான் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டின் விளைவாக இவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் கல்விகள் இப்போது ஓரளவு கிடைத்து வருகிறது.

இதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல், பொறாமை உணர்வுடன் நடிகர் விஜயகாந்த் இந்த மக்கள் மீது, மரத்தை வெட்டியவர்கள் என்று பழிசுமத்தி பேசுகிறார்.

அவர் சார்ந்த திரைப்படத் துறையினராலேயே தள்ளாட்டம் போடுகின்ற தண்ணீர் மனிதன் என்று விமர்சிக்கப்படுகின்ற ஒரு நபர் வெகு மக்களின் போராட்டத்தை, இழிவுப்படுத்தி பேசுவதை தமிழ் சமுதாயம் இனியும் மன்னிக்காது.
விலைமதிப்பற்ற 21 மனித உயிர்களை பலி கொடுத்த நேரத்திலே நடந்த சில சம்பவங்களை பெரிதுபடுத்தும் நிதானம் இல்லாத அந்த நபர் என்றாவது மக்களின் பிரச்சனைகளுக்காக போராடியதுண்டா? ஆண்டுடாண்டு காலமாக உழவுத் தொழிலை நம் குலத் தொழிலாக கொண்டு அனைவருக்கும் உணவு அளிக்கும் இம்மக்கள் மரங்களை நடுவதும், பசுமை தாயகம் அமைப்பதும் புதுமையான செய்தியல்ல. இவ்வாறு ஜெ.குரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.