நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, February 28, 2011

மருத்துவர் அய்யா அவர்களின் இல்லத் திருமண விழா.. புகைப்படங்கள்



மருத்துவர் அய்யா அவர்களின் இல்லத் திருமண விழா..

                                                                    நாள்-28-02-2011
மருத்துவர் அய்யா அவர்களின் இல்லத் திருமண விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி,
பாட்டாளி  மக்கள் கட்சியினுடைய  நிறுவனத் தலைவரும், சமூக நீதிக் காவலரும், என்னுடைய அன்பிற்குரிய நண்பரும், என்றென்றும் திராவிட சமுதாயத்திலே  சுயமரியாதை உணர்வை உருவாக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்று அயராமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற டாக்டர் ராமதாஸ் அவர்களே, அவருடைய அன்புச் செல்வன், என்னுடைய அன்புத் தம்பி  அன்புமணி ராமதாஸ் அவர்களே, தம்பி  ஸ்டாலின் இங்கே வாழ்த்தும்பொழுது தேர்தல் திருமணம்  என்று குறிப்பிட்டார். இது மணமகனை மணமகள் வீட்டாரும், மணமகளை   மணமகன் வீட்டாரும்  தேர்வு செய்த பிறகு நடைபெறுகின்ற  திருமணம்.   ஏற்கனவே  இல்லத்தார் தேர்ந்தெடுத்து நடத்துகின்ற திருமணம்.   எனவே  ஒரு நல்ல கூட்டணி     இரு குடும்பத்திற்கிடையே அமைந்து அந்தக் கூட்டணி   இந்தக் குடும்பத்தின் குலவிளக்குகளை ஏற்றி வைக்கக் கூடிய  கூட்டணியாக விளங்கும் என்ற நம்பிக்கையோடு  நான் அவர்களை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா பேரன், டாக்டர் சுகந்தன் ராணிப்பேட்டை குணசேகரன் அன்பு மகள்  செல்வி  டாக்டர் டீனா  இவர்கள்  இருவரும்  இல்லறம் இணையும் விழா நடத்திக் கொள்ளும் இந்த நாளில், நாங்களும் சாட்சியாக இருந்தோம் என்று பெருமைப்படுகின்ற அளவிற்கு  நாமெல்லாம் இங்கே வாழ்த்துரை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

நம்முடைய நண்பர் கோ.க. மணி பேசும்போது என்னைச் சிறப்பிக்கும் போது கலைஞர், எதிர்க்கட்சித் தலைவராக எதிர்க் கட்சித் துணைத் தலைவராக எதிர்க் கட்சி கொறடாவாக அண்ணா அமைச்ச ரவையிலே அமைச்சராக  பிறகு முதல் அமைச்சராக என்று  இப்படி 56, 60 ஆண்டுகளில் நான் வகித்த பதவிகளையெல்லாம் சொன்னார். அந்த பதவிகளையெல்லாம் விட இன்றைக்கு இந்தத் திருமண விழாவிலே புரோகிதராக அமர்ந்திருக்கின்ற இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கின்ற இந்தப் பணியைத்தான் பெரும் பதவியாக நான் கருதுகிறேன்.
இதென்ன, புரோகிதர் பதவியை பெரிய பதவியாகக் கருதுகிறாய் என்று  யாராவது கேட்பீர்களேயானால்,  இன்றைக்கு அந்தப் பதவிக்குத் தான் நாட்டிலே பெருமை. எனவே அந்தப் புரோகிதராக இந்தத் திருமண விழாவிலே கலந்து கொண்டு மணமக்களை நான் வாழ்த்துகிறேன்.  என்னுடைய அன்பை,  உண்மையான நெஞ்சத்தை, உறவு முறையில் காட்ட வேண்டிய அந்தப் பாசத்தை  மணமக்களுடைய குடும்பத்தாருக்கு குறிப்பாக அய்யா ராமதாஸ் அவர்களுக்கு நான் வழங்க விரும்புகிறேன்.
குடும்பம் என்றால் இடையிலே சில பிணக்குகள் வரக் கூடும். என்ன தான் நான் மணமகனாக டாக்டர் ராமதாஸ் மணமகளாக இருந் தாலும் எங்கள் குடும்பத்திற்குள்ளே பிணக்குகள் வரும், போகும். ஆனாலும் ஒரு இலட்சியத்தை நிறைவேற்ற, ஈடேற்ற முனையும்போது நாங்கள் ஒன்று பட்டு நிற்போம் என்பதற்கு  நீங்கள் காணுகின்ற காட்சி தான்  சாட்சி என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

 நம்முடைய நாட்டில்  காலாகாலமாக நடைபெற்ற தமிழகத்தின் திருமணங்கள்  எல்லாம்    சங்கக் காலத்துத் தி
ருமணங்கள் எல்லாம்  ஞாயும் யாயும்  யாராகியரோ, எந்தையும் முந்தையும் எம்முறை கேளிர்   நானும் நீயும் எவ்வழி அறிதும்   செம்புலப் பெய் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே     நீ யாரோ, நான் யாரோ    உன்னுடைய தந்தை யாரோ     தாயார் யாரோ   செம்புலப் பெய் நீர் போல    சிகப்பு நிறத்திலே ஊற்றப்பட்ட தண்ணீர் அந்த வண்ணத்தோடு கலந்து ஒன்றாகி விடுவதைப் போல நம்முடைய அன்பான நெஞ்சங்கள் கலந்து விட்டன என்று சொல்லி மணவிழாவை முடித்துக் கொண்டார்கள்.   
அந்தத் தமிழர்களுடைய திருமணம் இடைக்காலத்தில் தடை பட்டு விட்டன என்று நாம் எண்ணியதற்கு  மாறாக பெரியார் அவர்களுடைய கொள்கைப் பற்றால்,  அதனை  சட்டப் பூர்வமாக நிறைவேற்றியதோடு மாத்திரமல்ல    இப்படி  எங்களுடைய குடும்பங்களிலும்  தமிழ் வழியிலே திருமணங்களை நடத்த முடியும், நடத்துவோம்,  சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்  நடத்துவோம் என்கின்ற உறுதியோடு நம்முடைய டாக்டர் அய்யா அவர்கள் இங்கே நடத்திக் காட்டிய திருமணம்,  பழந்தமிழர் காலத்திலே  பசும்புல்  தரையில் பால் வண்ண உடை உடுத்தி, காதலுக்கும் கடவுளுக்கும் வேறுபாடில்லை, அது காலத்தால் அழிவதுமில்லை என்று  வாழ்த்த தமிழர்கள் காலத்துத் திருமண முறையாக  இங்கே இருந்ததை நான் கண்டேன்.   வியந்தேன்,  வாழ்த்துகிறேன்.  அய்யா அவர்களையும், அவருடைய குடும்பத்தாரையும், அவருடைய கட்சித் தோழர் களையும் நான் வாழ்த்துகிறேன்.
அந்தக் கட்சியிலே உள்ள அத்தனை உறுப்பினர்களையும்   நான் வழக்கமாகச் சொல்வதைப் போல    என்னுடைய உடன்பிறப்புகள் என்ற முறையில்  அந்த உடன்பிறப்புக்களுக்கும் என் வாழ்த்துகளைச் சொல்லி, நாம் அடையப் போகும் வெற்றிக்கு  இது  முதல் அடையாளமாக இருக்கட்டும் என்று கூறி  இதுவும் ஒரு மங்கலமான விழா தான் என்று எல்லோராலும் பாராட்டக்கூடிய  போற்றக் கூடிய    விரும்பக் கூடிய விழாவாக  அமையும், அதைப் போல இந்தக் குடும்ப விழா எல்லோராலும் பாராட்டக் கூடிய ஒரு விழாவாக, வெற்றிக்கு அடையாள விழாவாக இந்த விழா அமைந்திருக்கின்றது என்று கூறி, மணமக்கள் பல்லாண்டு வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்தி
இன்று  டாக்டர் ராமதாஸ் அவர்களுடைய பேரனுக்கான திருமணம்,  இனி கொள்ளுப்
பேரனுக்கு நடைபெறுகின்ற திருமணவிழாவிலும் கலந்து கொள்கின்ற வாய்ப்பு நமக் கெல்லாம் கிடைக்கும்  என்று சொல்வதற்குக் காரணம்  அந்த அளவிற்கு எங்களுடைய நட்பு நீடிக்க வேண்டும் என்ற ஆசையோடு இதைச் சொல்கிறேன் என்று அப்படி நீடிப்பதற்கு  அன்புமணியும் அருள் பாலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

Sunday, February 27, 2011

வன்னிய இன பாதுகாவலர் மருத்துவர் அய்யா.


 
 
அய்யாவின் முன்   
அனைத்து அரசியல் கட்சிகளும்
அவர் காலடியில் சுருண்டு கிடக்கிறது
 
உருவங்களின் , ஆடைகளின் நிறம் பார்ப்பதில்லை-நிழல்கள்
அவை எப்போதும் கரிய நிறம்கொண்டவை
அடர்ந்தோ மங்கலாகவோ
நீளமாகவோ குட்டையாகவோ
தகுந்தாற்போல் மாறிக்கொண்டிருப்பவை அவை

 
உருவம் தொலைக்காமல்.மங்காமல் இருக்கும்
அய்யாவின் நிழலில்
நான் தொலைந்த ஒட்டு மொத்த வன்னிய இனத்தையே பார்க்கிறேன்.

நிறைந்த  வெளிச்சத்தில் இருந்துகொண்டு
வன்னிய இனத்தையே
பாதுகாக்கும் பாதுகாவலர் மருத்துவர் அய்யா.

 

லஞ்சம் வாங்கரவகளுக்கு ஆப்பு வைக்க முகவரி...

லஞ்சம் வாங்கரவகளுக்கு ஆப்பு வைக்க..



Location of Vigilance Offices

HEADQUARTERS
The Director, 
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 21, P.S.Kumarasamy Raja Salai,
Chennai-600 028
Phone : 044-24612561 (Direct), 044-24615929/24615949, 044-24615989/24954142
Fax : (044) 28293264
SPECIAL INVESTIGATION CELLS
Inspector General of Police, 
Special Investigation Cell – I & II,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 25-A, P.S.Kumarasamy Raja Salai,
Chennai – 600 028
Phone : 044-24616900 (Direct), 044-24615929 / 24615949, 044-24615989 / 24954142
Fax :044-24615556
The Superintendent of Police, 
Special Investigation Cell,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 27, P.S.Kumarasamy Raja Salai,
Chennai - 600 028
Phone : 044-24610550 (Off)
The Addl. Superintendent of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 28, P.S.Kumarasamy Raja Salai,
Chennai - 600 028
Phone : 044-24959880 (Off)
Cell : 94450-48869
The Deputy Superintendent of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 28, P.S.Kumarasamy Raja Salai,
Chennai - 600 028
Phone : 044-24959855 (Off),
Cell : 94450-48872
The Deputy Superintendent of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 28, P.S.Kumarasamy Raja Salai,
Chennai - 600 028
Phone : 044-24959866 (Off)
Cell : 94450-48871
The Deputy Superintendent of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB-25A, P.S. Kumarasamy Raja Salai,
Chennai - 600 028
Phone : 044 - 24959855 (Off)
Cell : 94450-48873
The Deputy Superintendent of Police,
Special Investigation Cell – II,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB-27, P.S. Kumarasamy Raja Salai
Chennai - 600 028
Phone : 044 - 24959880 (Off)
Cell : 94450-48870
CENTRAL RANGE
The Superintendent of Police,
Central Range

Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 25, P.S.Kumarasamy Raja Salai,
Chennai – 600 028.
Phone: 044- 24954771 (Direct), 044-24615929 / 24615949, 044-24615989 / 24954142
Headquarters Vigilance office:
The Addl. Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Headquarters,
Chennai – 600 028.
Phone :044-24618285 (Direct), 044-24615929 / 24615949, 044-24615989 / 24954142
cell : 94450-48858
Headquarters Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Headquarters,
Chennai – 600 028.
Phone : 044-24615999 (Direct), 044-24615929 / 24615949,
044-24615989 / 24954142,
044-28141921 (Res)
cell : 94450-48860
Chennai CSU - I Vigilance office: 
The Addl. Superintendent of Police
Vigilance and Anti-Corruption,
City Special Unit - I, Post Box No.487,
NCB 28, P.S.Kumarasamy Raja Salai,
Chennai - 600 028 
Phone :044-24613020 (Direct), 044-24615929 / 24615949,
044-24615989 / 24954142,
044-27264346 (Res)
Cell : 94450-48859
Chennai CSU - III Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City Special Unit - III,
# 485,TNHB Building, IInd Floor,
Anna Salai, Nandanam,
Chennai - 600 035 
Phone : 044-24422330 (Off),
044-22770351 (Res)
Cell : 94450-48867
Chennai City - I Vigilance office:
Vigilance and Anti-Corruption,
Chennai City Unit - I, Post Box No.487,
NCB 24, P.S.Kumarasamy Raja Salai,
Chennai - 600 028 
Phone : 044-24621232 (Direct), 044-24615929 / 24615949, 044-24615989 / 24954142
Deputy Superintendent of Police - I
Phone :044-23763363 (Res)
Cell : 94450-48861
Deputy Superintendent of Police - I
Phone : 044-26287361 (Res)
Cell : 94450-48862
Chennai City - II, III, IV, V Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City Unit - II,
# 485,TNHB Building, IInd Floor,
Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone : 044-24455089 (Off),
044-26562111 (Res)
Cell : 94450-48863
Chennai City - III Vigilance office:
Phone : 044-24422029 (Off),
044-22554411 (Res)
Cell : 94450-48864
Chennai City - IV Vigilance office:
Phone : 044-24422095 (Off),
044-28362370 (Res)
Cell : 94450-48866
Chennai City - V Vigilance office:
Phone : 044-24422095 (Off),
044-42664413 (Res)
Cell : 94450-48865
Kanchipuram Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 28, Bangaru Amman Colony,
Ellappan Nagar,
Kancheepuram – 631 501.
Opposite to collectorate
Phone : 044-27237139 (Off),
044-27236466 (Res)
Cell : 94450-48868
WESTERN RANGE
The Superintendent of Police,
Western Range,
Vigilance and Anti-Corruption,
Post Box No:487,
NCB 24, P.S. Kumarasamy Raja Salai,
Chennai - 600 028.
Phone : 044-24622794 (Direct), 044-24615929 / 24615949, 044-24615989 / 24954142
Coimbatore Vigilance office: 
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 11/332, Cross Cut Road,
Gandhipuram,
Shivangali Building opposite.
Coimbatore – 641 012.
Phone : 0422-238647 (off),
0422-2222250 (Res)
Cell : 94450-48882
Erode Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 3/2, Ranganathan Street,
Karungalpalayam,
Near Gandhi Statue.
Erode – 638 003.
Phone : 0424-2210898 (off),
0424-2276100 (Res)
Cell : 94450-48881
Nilgiris Vigilance office 
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Villa Dawn, Havelock Road,
Near Collector office.
The Nilgiris – 643 001.
Phone : 0423-2443962 (off),
0423-2441099 (Res)
Cell : 94450-48883
Salem Vigilance office: 
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# B-3, Rajaji Street, Swarnapuri,
Near New Bus Stand.
Salem – 636 004.
Phone : 0427-2448735 (off),
0427-2334522 (Res)
cell: 94450-48877
Namakkal Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 1/7-1, Thiruchengodu Main Road,
Near Post Office,
Nallipalayam Post,
Namakkal - 637 003.
Phone : 0427-2441191 (off),
04268-257604 (Res)
cell: 94450-48878
Dharmapuri Vigilance office:
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Ramasamy Gounder Street,
No.30-A, Kamalakshmi Colony,
Dharmapuri – 636 701.
Phone : 04342-260042 (off),
04342-269450 (Res)
cell: 94450-48879
Krishnagiri Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
No. H-90, Tamilnadu Housing Board
Phase-II,
Krishnagiri - 635 001.
Phone : 04343- 231345 (off),
04343-226644 (Res)
cell: 94450-48880
Vellore Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 24, Nellai Godown Street,
Near Mummy Hospital
Vellore – 632 001. 
Phone : 0416-2220893 (off),
0416-2258388 (Res)
cell: 94450-48876
Cuddalore Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 16, Pavazha Salai, Anna Nagar,
Near S.P office Back side
Cuddalore – 607 001.
Phone : 04142-233816 (off)
cell: 94450-48875
Villupuram Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 92A, Radhakrishnan street, VGP Nagar,
East Sala Medu,
Villuppuram.
Phone : 04146-259216 (off)
cell: 94450-48874
SOUTHERN RANGE
The Superintendent of Police,
Southern Range,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 23, P.S.Kumarasamy Raja Salai,
Chennai – 600 028.
Phone : 044-24959597 (Direct), 044-24615929/24615989, 044-24615949/24954142
Madurai Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 165/G, Alagar Koil Main Road,
Madurai – 625 002.
Phone :0452-2531395 (Off),
0452-2581144 (Res)
Cell : 94450-48891
Theni Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 19/27, Nethaji Salai,
Sevaliye Sivaji Nagar,
Near Karur Railway Gate
Theni – 31.
Phone : 04546- 255477 (Off)
Cell : 94450-48890
Dindugul Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 576/4, EB Colony,
Chettinaykkanpatty,
Trichy By-pass Road,
Dindugul – 624 004.
Phone : 0451-2431508 (off)
Cell : 94450-48889
Ramanathapuram Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 1/426-A,Om Sakthi Nagar,
Barathi Nagar,
Near Housing Board D-Block
Ramanathapuram – 623 503.
Phone : 04567-230036 (off)
Cell : 94450-48893
Virudhunagar Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 6/223, Kaveri Street,
NGO Colony East, Madurai Road,
Near V.V.V College,
Virudhunagar - 626 001.
Phone : 04562-245178 (off), 0452-2676467 (Off)
Cell : 94450-48894
Sivagangai Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 23, Thirupathur Road,
Kanchirangal,
Opposite Court Building & Govt. Girls Hr. Sec. School,
Sivagangai – 630 562.
Phone : 04575-240222 (off),
04575- 246460 (Off)
Cell : 94450-48892
Tirunelveli Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
No:16/53A/1, Marilamani Nagar,
Near Central Jail, Palayamkottai,
Tirunelveli – 627 002.
Phone : 0462-2580908 (off)
Cell : 94450-48895
Thoothukudi Vigilance office:
The Addl. Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 215/5B/2, Ganesh Nagar, IInd Street,
Near VOC college
Thoothukkudi – 628 008. 
Phone : 0461-2310243 (off), 0461-2554222 (Off)
Cell : 94450-48896
Nagercoil Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
#210/1A, Lourdu Annai Salai,
SP Camp office Road,
Thalavaipuram,
Punnai Nagar, Koram Post,
Nagercoil - 629 004.
Phone : 04652-227339 (off),
04651-271234 (Res)
Cell : 94450-48897
Trichy Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 10, Quide-Millath Street, Kaja Nagar,
Near Mannar Puram,
Thiruchirappalli – 620 020.
Phone : 0431-2420166 (Off),
0431-2434303 (Res)
Cell : 94450-48885
Pudukottai Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Plot No.1143, Ganapathy Salai,
Periyar Nagar,
Rajagopalapuram,
Near New Bus Stand,
Pudukottai – 622 003. 
Phone : 04322-260164,
04322-223577 (Res)
Cell : 94450-48887
Thanjavur Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 6, Eliza Nagar,
(Near Saraboji College)
Near New Bus Stand,
Thanjavur – 613 005.
Phone : 04362-227100 (Off),
04322-241651 / 247555 (Res)
Cell : 94450-48884
Nagapattinam Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 4/67, Kumaran Koil East Street,
Manjakollai,
Near Anna Statue,
Nagapattinam – 611 106.
Phone : 04365-245460 (off)
Cell : 94450-48886

For more details visit: www.tn.gov.in/citizen/dirvac.htm

Friday, February 25, 2011

தொடர்வண்டி துறை நிதி நிலை அறிக்கை ஏமாற்றம்..

 
தொடர்வண்டி துறை நிதி நிலை அறிக்கை தமிழகத்துக்கு ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அய்யா அவர்கள் கூறியுள்ளார்
விரைவில் நடைபெறவுள்ள மேற்கு வங்க பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பட்ஜெட் என்பதைவிட மேற்கு வங்கத்துக்கான பட்ஜெட் என்று சொன்னால் மிகையாகாது.
தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 56 ரயில்களில் ஒரு சில ரயில்கள் மட்டுமே தமிழகத்திற்குள்ளும், தமிழகத்தின் வழியாகவும் செல்லக் கூடியவை. இதில் 2 ரயில்கள் மட்டுமே தினமும் இயக்கப்படுவை.
விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பகல், இரவு நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மின்மயமாக்கும் திட்டம், இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.
பாமக அமைச்சரின் முயற்சியால் சென்னை பரங்கிமலையில் இருந்து புதுச்சேரிக்கு அறிவிக்கப்பட்ட ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று ராமதாஸ் அய்யா அவர்கள் கூறியுள்ளார்.

Tuesday, February 22, 2011

தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி வரலாறு அன்று முதல்-இன்று வரை...

அருமையான விளக்கங்களுடன் விரிவாக விளக்கம் தந்துள்ள திரு அருள் அவர்களின் வலைத்தள பதிவு இது..


விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!


(அரசியல் கூட்டணி என்பதை விபச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ளமைக்காக வருந்துகிறேன். ஆதிக்க சாதியினரின் மனோபாவம் விகாரமாக இருப்பதால் அதை சுட்டிக்காட்டவே கொச்சையான வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. மன்னிக்கவும்)""’கொள்கைக்காக கூட்டணி, தமிழர் நலனுக்காகக் கூட்டணி, சுய மரியாதையைக் காப்பதற்காகக் கூட்டணி’ என்றெல்லாம் மற்ற கட்சிக்காரர்கள் தன் கூட்டணித் தாவலுக்கு கஷ்டப்பட்டுக் காரணம் கூறும்போது, மிகவும் வெளிப்படையாக ‘இவங்க கூட ஒரு சீட்டு தர்றோம்னாங்க..வந்துட்டேன்” என்ற ரேஞ்சில் அரசியலை நல்ல பிஸினஸாக நடத்தி வருபவர் ராமதாஸ். அரசியல் என்பது அதிக சீட்டுகளைப் பெறுவதும், சம்பாதிப்பதும் என்று ஆனபின் ’முக்காடு எதற்கு’ என்ற நிலைப்பாடு கொண்டவர் அவர்."" 

--என்று "டாக்டர் ராமதாசும் பாமகவும்" எனும் பதிவில் எழுதுகிறார் செங்கோவி.

"ராமதாஸின் அவதாரங்கள்" என்று விமர்சிக்கிறார் ஓசை.

"இவய்ங்க இப்படி தான் பாஸ் எப்பப் பாத்தாலும் துப்பிக் கிட்டே இருப்பாங்க" என்று கொச்சையாக விமர்சிக்கிறார் சவுக்கு. 

இப்படி வரும் விமர்சனங்களும் அவற்றில் வெளியிடப்படும் கேவலமான பின்னூட்டங்களும் பா.ம.க'வை வேண்டுமென்றே இழிவு படுத்துகின்றன.

இத்தகைய பதிவுகளைவிட ஒருபடி மேலாக - தமிழக பத்திரிகைகள் திட்டமிட்டு பா.ம.க மீது அவதூறு சாக்கடையை அள்ளி வீசுகின்றன?

பா.ம.க'வை தூற்றுவது நியாயம் தானா?காவல்துறையினர் அவ்வப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது என்று புகைப்படத்தை வெளியிடுவார்கள், அதில் சில பெண்கள் வரிசையாக நிற்பார்கள். ஆனால், விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்கள் அப்புகைப்படத்தில் இருக்க மாட்டார்கள். விபச்சாரத்தை யாராவது தனியாக செய்ய முடியுமா? அந்த ஆண்கள் எங்கே போனார்கள்? ஏன் கைது செய்யப்படவில்லை? என்கிற கேள்வி எவராலும் கேட்கப்படாது.

அதே போன்றுதான் - திமுக'வும் அதிமுகவும் இடம்மாறி பாமகவுடன் கூட்டணி அமைக்கும் போதெல்லாம் - பாமக மட்டுமே தாவுகிறது என்கிற கருத்தை ஆதிக்க சாதிவெறியர்கள் ஊதுகின்றனர்.

தமிழ்நாட்டு அரசியலில் அணி மாறாத கட்சி என்று எதுவுமே இல்லை. எடுத்துக்காட்டாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகியன இப்போது திமுக அணியில் உள்ளன. அவ்வாறே, திமுக அணியில் இருந்த இந்திய பொதுவுடைமைக் கட்சி, மார்க்சீய பொதுவுடைமைக் கட்சி ஆகியன அதிமுக அணியில் உள்ளன.

இது மட்டுமின்றி - எல்லா தேர்தல்களிலும் ஏதேனும் சில கட்சிகள் இடம் மாறுகின்றன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?

ஒருவேளை ஓரிருமுறை விபச்சாரம் செய்பவர்கள் ஒழுக்க சீலர்கள் என்று ஆதிக்க சாதியினர் சாதிக்கப் பார்க்கினரா? அப்படிப்பார்த்தால் கூட அதிக முறை அணிமாறிய கட்சி பா.ம.க இல்லையே! தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் அணி மாறுகின்றன. சில கட்சிகள் சில முறை, சில கட்சிகள் பலமுறை அணி மாறுகின்றன. இதையே வேறொரு கோணத்தில் பார்த்தால் - அதிகமாக அணிமாறிய கட்சிகள் அதிமுக'வும் திமுக'வும் தான்.

தமிழக தேர்தலில் கூட்டணி வரலாறு

முதலாவது சட்டமன்ற தேர்தல் 1952

தி.மு.க போட்டியிடவில்லை.  காங்கிரசு, CPI கட்சிகள் முதன்மையாக போட்டியிட்டன.

காங்கிரசு கட்சியில் வன்னியர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பதால் - தனித்து களமிறங்கிய மாணிக்கவேல் நாயகரின் காமன்வீல் கட்சி 6 இடங்களிலும் இராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தமாக அன்றைய தமிழ் பகுதியில் இருந்த 190 சட்டமன்ற இடங்களில் 25 இடங்களை வன்னியர்கட்சிகள் தனித்து வென்றன.

தேர்தலுக்கு பின்பு காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் - விடுதலைக்கு பிந்தைய தமிழ்நாட்டில் முதன்முதலாக வன்னியர் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரசு ஆட்சியமைத்தது.

(பின்னர் வன்னியர்கட்சிகள் கலைக்கப்பட்டு தலைவர்கள் காங்கிரசிலும், காங்கிரசு எதிர்ப்பில் வளர்ந்த தொண்டர்கள் தி.மு.க'விலும் இணைந்தனர்.)


இரண்டாவது சட்டமன்ற தேர்தல் 1957

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.


மூன்றாவது சட்டமன்ற தேர்தல் 1962

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.

தி.மு.க'வுடன் CPI, பார்வார்டு பிளாக், முசுலீம் லீக் கட்சிகள் கூட்டணி அமைத்தன.


நான்காவது சட்டமன்ற தேர்தல் 1967

தி.மு.க. கூட்டணியில் இராசாசியின் சுதந்திரா கட்சி, CPI(M), பிரசா சோசலிச கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.

CPI தனித்து போட்டியிட்டது.


ஐந்தாவது சட்டமன்ற தேர்தல் 1971

தி.மு.க. கூட்டணியில் இந்திரா காங்கிரசு, CPI, பிரசா சோசலிச கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முசுலீம் லீக், தமிழ்தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

காமராசர் தலைமையிலான இசுதாபன காங்கிரசுடன் இராசாசியின் சுதந்திரா கட்சி, இந்திய குடியரசு கட்சி, சம்யுக்த சோசலிச கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆகியன கூட்டணி அமைத்தன.


ஆறாவது சட்டமன்ற தேர்தல் 1977

தி.மு.க தனித்து போட்டி.

அ.தி.மு.க' வுடன் CPI(M), பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முசுலீம் லீக் கூட்டணி.

இந்திய தேசிய காங்கிரசுடன் CPI கூட்டணி,

சனதா கட்சி தனித்து போட்டி.


ஏழாவது சட்டமன்ற தேர்தல் 1980

தி.மு.க - காங்கிரசு கூட்டணி.

அ.தி.மு.க - சனதா கட்சி கூட்டணி.


எட்டாவது சட்டமன்ற தேர்தல் 1984

அ.தி.மு.க'வுடன் காங்கிரசு மற்றும் காந்தி காமராசர் காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

தி.மு.க'வுடன் CPI(M), CPI, சனதா கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி.


ஒன்பதாவது சட்டமன்ற தேர்தல் 1989

அ.தி.மு.க (செயலலிதா) - காங்கிரசு கூட்டணி.

அ.தி.மு.க (சானகி) - தமிழக முன்னேற்ற முன்னணி (சிவாசி) கூட்டணி.

தி.மு.க - சனதா தளம், CPI(M) கூட்டணி.


பத்தாவது சட்டமன்ற தேர்தல் 1991

அ.தி.மு.க - காங்கிரசு கூட்டணி.

தி.மு.க'வுடன் CPI, CPI(M), சனதா தளம், தாயக மறுமலர்ச்சி கழகம் கூட்டணி.

பா.ம.க தனித்து போட்டி.


பதினோராவது சட்டமன்ற தேர்தல் 1996

தி.மு.க'வுடன் த.மா.க, CPI, இந்திய தேசிய லீக், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க'வுடன் காங்கிரசு, முசுலீம் லீக், பார்வர்டு பிளாக், அனைத்திந்திய குடியரசு கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி, ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிகள் கூட்டணி.

ம.தி.மு.க'வுடன் CPI(M), சனதா தளம், சமாச் வாதி சனதா கட்சிகள் கூட்டணி.

பா.ம.க - திவாரி காங்கிரசு (வாழப்பாடி இராமமூர்த்தி) கூட்டணி.


பன்னிரெண்டாவது சட்டமன்ற தேர்தல் 2001

அ.தி.மு.க'வுடன் தா.ம.க., பா.ம.க., காங்கிரசு, CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி.

தி.மு.க'வுடன் பா.ச.க., MGRஅ.தி.மு.க கட்சிகள் கூட்டணி.


பதிமூன்றாவது சட்டமன்ற தேர்தல் 2006

தி.மு.க'வுடன் காங்கிரசு, பா.ம.க., CPI(M), CPI, முசுலீம்லீக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க'வுடன் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய லீக், பார்வார்டு பிளாக், மூ.மு.க., இந்திய யூனியன் முசுலீம் லீக். சனதா தளம் கட்சிகள் கூட்டணி.

--இவ்வாறாக கடந்த 50 ஆண்டுகால சட்டமன்ற தேர்தல் வரலாற்றில், குறிப்பாக 1962 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான தி.மு.க'வோ அல்லது அ.தி.மு.க'வோ ஒரு தேர்தலில் அமைத்த அதே கூட்டணியுடன் அடுத்த தேர்தலை சந்திக்கவில்லை.


ஆக, எல்லா தேர்தல்களிலும் பெரும்பாலான கட்சிகள் இடம் மாறுகின்றன. உண்மை இவ்வாறிருக்க, பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?

Monday, February 21, 2011

கலைஞர் கருணாநிதி,ஸ்டாலினை சாந்தித்தார் மேனாள் நடுவண் அமைச்சர் மருத்துவர் அன்புமணி அய்யா..







கலைஞரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் கூறியது

பிபரவரி 21-2-11 காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள தி.மு.க. கூட்டணி, மெகா கூட்டணி. இது சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும். முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார்.

இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். சட்டசபை தேர்தலின் போது, டாக்டர் ராமதாசும், நானும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரசாரம் செய்வோம். தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து, தி.மு.க. கிளை ஒன்றிய நிர்வாகிகளுடன் நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படும். இதன் மூலம் தேர்தலில் சிறப்பாக பணி புரிய வாய்ப்பு ஏற்படும் என்றார்.

Friday, February 18, 2011

பாமக கூட்டணியால் திமுகவிற்க்கு 2011 சட்டமன்ற தேர்தலில் வெற்றி உறுதி...




சென்னையில் பிப்ரவரி 18 ல் தமிழக முதல்வரை சந்தித்த மருத்துவர் அய்யா அவர்கள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.என சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.முதல்வர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அவருடன் கட்சித் தலைவர் ஜி.கே. மணியும் சென்றார். நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் உடன் இருந்தனர்.


 காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்தச் சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.

 சந்திப்புக்குப் பிறகு, தி.மு.க. - பா.ம.க. இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.


 இதுதொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறியது:

 தில்லிக்கு நான் சென்றிருந்தபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தேன். அப்போது வரும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.


 அதன் தொடர்ச்சியாக, இப்போது பா.ம.க.வுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு, இந்தத் தேர்தலில் தி.மு.க.வுடன் இணைந்து பா.ம.க. போட்டியிடும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.


 அதன்பிறகு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

 என் பேரன் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு வந்தேன். அதோடு சேர்த்து தேர்தல் உடன்பாடும் ஏற்படுத்திக் கொண்டுள்ளேன். மகிழ்ச்சியோடு கருணாநிதியைச் சந்திக்கச் சென்றேன். மகிழ்ச்சியோடு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்.

 பா.ம.க.வுக்கு 31 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இரு கட்சிகளின் தேர்தல் குழுக்கள் கூடி முடிவு செய்யும்.


 திருமண அழைப்பிதழை கொடுக்க வந்த நான், இந்த தேர்தல் உடன்பாட்டையும் எதிர்பார்த்துதான் வந்தேன்.


 வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைத் தவிர, மேலும் பல கட்சிகள் சேர இருக்கின்றன. இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

 தேர்தலில் அதிக தொகுதிகளைப் பெறுவதற்கான பா.ம.க.வின் பேரம் பேசும் திறன் குறையவும் இல்லை, கூடவும் இல்லை என்றார் ராமதாஸ்.

 சோனியாவைச் சந்திப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி, சோனியாவைச் சந்தித்து உள்ளார் என்றார் ராமதாஸ். கடந்த பேரவைத் தேர்தலில் இதே எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்றபோது, தொகுதிகளை அள்ளியும் கொடுக்கவில்லை - கிள்ளியும் கொடுக்கவில்லை என்று சொன்னீர்கள். இப்போதும் அதே அளவுக்குதான் தொகுதிகளைப் பெற்றிருக்கிறீர்களே என்று கேட்டபோது, இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் ராமதாஸ்.



பேரவைத் தேர்தலில்  இதுவரை பா.ம.க.உள்ள அணியே வெற்றி பெற்றுள்ளது.



 1991 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.

1996 பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளை வென்றது.


 2001 பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் சேர்ந்த பா.ம.க. 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

 2006 பேரவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க., 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை வென்றது.


இப்போது மீண்டும் 2011 -ல் தி.மு.க. அணியில் இடம்பெறும் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Thursday, February 17, 2011

காங்கிரசு கூட்டணியில் பாமகவை சேர்க்க திருமதி சோனிய, பிரதமர் மன்மோகன்சிங் தீவிர முயற்ச்சி..

சோனியகாந்தியை சந்தித்தார் மேனாள் நடுவண் அமைச்சர் திரு அன்புமணி இராமதாசு..

 


புது தில்லியில் 17-2-11 அன்று  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை,  முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தில்லியில் வியாழக்கிழமை சந்தித்தார்.
 
இதனால் தமிழக கட்சிகளுக்கிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்தும் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், . பிரதமர் மன்மோகன் சிங்கையும் திருமதி சோனியவையும் நேரில் சந்தித்தார் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள்
 
 மருத்துவர் அன்புமணியை நடுவண் நல்வாழ்வு துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தே நேரில் அழைத்துச் சென்றதற்கு 2 காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
ஒன்று, தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதை சோனியா விரும்பவில்லை என்ற கருத்தைப் திமுக வேண்டுமென்றே காங்கிரசு மீது பழிபோடுகிறது என்பதைதெளிவாக கூறியதாகவும் தெரிகிறது.
.
 மத்திய சுகாதார அமைச்சராக மீண்டும் அன்புமணியே நியமிக்கப்படலாம் என்பதால், இந்தக் கூட்டணிக்கு குலாம் நபி ஆசாத்தே தடையாக இருக்கிறார் என்ற கருத்தைப் போக்கவுமே அவர் அன்புமணியை நேரில் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
 இதன்மூலம், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. சேருவதை தான் ஊக்குவிப்பது போன்ற கருத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுக் கூட்டம் குலாம் நபி ஆசாத்தின் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்வதை காங்கிரஸ் வரவேற்பதாகக் கூறினார்.
 
 கூட்டணி தொடர்பாக தி.மு.க.வுடனான பேச்சுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தொடர்பான தெளிவின்மையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
 
பாமக உள்ள அணியே பல ஆண்டுகளாய் வெற்றிபெருவதையும்.கடந்த நாடளுமன்ற தோ்தலில் பாமக வை வீழ்த்த பல கோடி செலவு செய்து திமுக பாமகவை வீழ்த்தியது. நாம் தொடந்து வெற்றிபெற வேண்டுமானல்
பாமக தயவு நமக்கு தேவை என்பதை காங்கிரசார் அனைவரும் விருப்புவாதாக சோனியவிடம் தங்கபாலு கூறியுள்ளார்.
 
 
அதன்காரணமாகவே, இந்தக் கூட்டணியில் பா.ம.க.வைச் சேர்ப்பதற்குக் காங்கிரஸ் தரப்பில் ஆர்வம் காட்டப்படுவதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்
 
காலங்கள் மாறுகின்றன..
காட்சிகளும் மாறுகின்றன..

Monday, February 14, 2011

எங்கள் ஆசிரியர்..! மருத்துவர் அய்யா.....


எங்கள் ஆசிரியர்..! மருத்துவர் அய்யா.....

கர முதல சொல்லித்  தந்த எங்கள் ஆசிரியரே...
அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் மருத்துவரே...


சை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..!

னிய தமிழ் பயிற்றுவித்த  எங்கள் ஆசிரியையே...
னிய நம் இனத்தின் பெருமையை சொல்லித்தந்த  எங்கள் மருத்துவரே...
ன்ற தாயைப் போல நாங்கள் வணங்குவோம் உம்மையே..!

லக மொழியை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...ண்மைதனை எடுத்துரைத்த எங்கள் மருத்துவர் சின்னவரே...

ர் கேட்க  சொல்லிடுவோம்  உங்கள் பெருமையையே..!

எம் இன வரலாற்றை கற்றளித்த எங்கள் மாவீரனே...ளிமைதனை எமக்களித்த எங்கள் பெண்குல மாணிக்கமே...

ற்றிடுவோம் உம் புகழை உலக ஏட்டினிலே..!

ம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் ஆசிரியரே...யங்களை நீக்கி வைத்த எங்கள் மருத்துவரே...

ழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே..!

ர் நிலை சமூகஅறிவியலை படிக்க வைத்த எங்கள் ஆசிரியரே...ர்குலம் நாமெல்லாம்  என்றுரைத்த எங்கள் மாவீரனே...

வை போல கற்று தெளிந்தோம் உங்கள் வழியிலே..!

எஃகு போல் திடம் கொண்டோம் உம் அரசியலால்..

(எ)ஃகணமும் மனதில் ஏந்தி நிற்போம் உந்தன் கொள்கைகளை..!
மருத்துவர் அய்யாவழிநடப்போம்....
மனுடத்தை காத்து நிற்போம்....

Wednesday, February 9, 2011

வரமா,சாபமா மரபணுமாற்றபட்ட உணவு பொருட்கள்....?





தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதனின் வளர்நிலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தொழில் நுட்பம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் தொடங்குகின்றது. இதனை மேற்கொள்ளும் அறிவியலார் குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணைப் போன்றவர்கள்; நிறைய எதிர்பார்ப்பும் அதைவிட நிறையக் கவலையையும் சுமக்கின்றார்கள். குழந்தை எப்பொழுது பிறக்கும் ? அது என்ன பண்புகளைக் கொண்டிருக்கும், அதன் நிறம் என்னவாயிருக்கும் - என்பதைப் போன்ற ஆர்வமும் அதனையும் விழுங்குமளவிற்கு அக்குழந்தை நல்லபடியாகப் பிறக்குமா என்பதைப் போன்ற கவலைகளும் அவர்கள் உள்ளத்தை நிறைத்திருக்கும். புதுக்குழந்தையாக அறிவியல் கண்டுபிடிப்பு வெளிவந்தவுடன் எல்லார் கவனமும் அதன் மேல். அதற்குப் பெயரிடுதலும் காண்பவர் எல்லாரிடமும் தன் கண்டுபிடிப்பைக் காட்டி மகிழ்தலுமாக ஒரே மகிழ்ச்சி வெள்ளந்தான். சில நாட்களில் பள்ளிக் குழந்தையைப் போல் அறிவியல் கண்டுபிடிப்பும் பத்தோடு ஒன்றாகி மறக்கப் படுகின்றது. பின்னர் தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சியால் அது மெல்ல வளரத் தொடங்குகின்றது. மனித வாழ்வைப்போலவே அறிவியலிலும் விடலைப் பருவம் உண்டு, அது சிறுவனாயிருக்கும் அறிவியல் பிறருக்குப் பயனளிக்கக் கூடிய மனிதனாய் - தொழில்நுட்பமாய் - முதிர்ச்சியடையும் தருனம். அக்கட்டத்தில் அது வளர்ச்சிக்கான வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து நல்ல தொழில்நுட்பமாக,. இளைஞர்களைப் போல சமுதாயத்திற்கு பயன்படும் துடிப்புகொண்டாதாக, மாறுகின்றது. பின்னர், வயோதிகனாகப் பரிணமிக்கிறது, முதிர்காலத்தில் தன் அனுபவத்தால் பிறருக்கு அறிவூட்டும் மூதறிஞன் போல இன்றைக்கு கணிதத்தைக் கூறலாம். இளைஞனாகத் திகழ்பவை நிறைய நம்மில் உண்டு - உதாரணமாக குறைகடத்தித் தொழில்நுட்பம் (semiconductor technology), நோய்த்தடுப்புத் தொழில்நுட்பம் (immunization) , அறுவை சிகிச்சை (surgery), இவற்றைக் காட்டலாம்.

இவை எல்லாவற்றையும் விட சுவையான பருவம் - விடலை. இக்கால கட்டத்தில்தான் எத்தனை விரைவான மாற்றங்கள் - தன்னைத் தானே நிலை நிறுத்திக்கொள்ள வேண்டியமை, பிறரிலிருந்து தன்னை மாறுபட்டவனாகக் காட்டிக்கொள்ளுதல், மற்ற வளர்வனவற்றுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் ஆர்வம் - அப்பப்பா, அதுதான் எத்தனைச் சுவையானது. இன்று இத்தகைய நிலையில் இருப்பவையாக நிறைய உள்ளன - மரபு மருத்துவம் (gene therapy), மின்வனிகம் (e-commerce), வானிலை ஆராய்ச்சி (weather prediction), சூழியல் (ecology) ஆய்வுகள், ... இவை தங்களுக்கே உரித்தான விரைவில் மாறும், முதிர்ச்சியடையும் திறனால் பலரது கவனத்தை எளிதில் ஈர்க்கின்றன. இத்தகைய விடலைத் தொழில்நுட்பங்களுள் ஒன்று மரபு மாற்றப்பட்ட உணவுகள் (Genetically Modified Foods, GM Foods), இதற்குத்தான் எத்தனை எதிர்ப்பு. இது வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள வகுத்துவரும் இன்னொரு ஆயுதமா ? இது சூழலுடன் இயைந்து மாறாமல் தன்னிலையாக மாறுவதால் சூழலைச் சிதைக்க வல்லதா ? இது பணமுதலைகளான பன்னாட்டு நிறுவனங்களின் முற்றிலுமான வியாபார தந்திரமா ? இதற்குத்தான் எத்தனை ஆதரவும் எதிர்பார்ப்பும் - நாம் உண்ணும் உணவுகளையும் அதன் சுவையையும் திறனையும் உயர்த்த வந்ததா ? கட்டுக்கடங்காத மக்கள் பெருக்கத்திற்கு உணவளிக்க வல்ல ஒரே வரப்பிரசாதமா ?

தாவரங்களின் தன்மை மாற்றுதல் இன்று நேற்றாக நடந்துவரும் செயலல்ல. இது எப்பொழுது தோன்றியது என்று யாராலும் அறுதியிடமுடியாது. ஒட்டுமாங்கன்றுகளும், பலவண்ண ரோஜாச் செடிகளும் மனிதனால் வடிவமைக்கப் பட்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். உணவு அறிவியலாளர் டாக்டர் மா. சாம்பசிவம் சுவாமிநாதனின் அயராத முயற்சியால் இந்தியாவிலும் அதைத் தொடர்ந்து சினா முதல் பிலிப்பைன்ஸ் வரை நிகழ்ந்த பசுமைப் புரட்சி அற்புதங்களையும் நாம் அறிவோம். இது எல்லோராலும் எளிதில் உணரப்பட்டது - ஏற்றுக்கொள்ளப் பட்டது. இது தாவர ஒட்டு வளர்ச்சி எனப்படுவது. உயர்குணங்களைக் கொண்ட, சுவையான மாம்பழத்தை அதன் உற்பத்தித் திறனைப் பெருக்க, சுவையற்ற நாரைக்கொண்ட ஆனால் அதிக அளவில் காய்க்கவல்ல நாட்டுப்பழங்களுடன் ஒட்டுப் போட்டு அதன்மூலம் தரமான பழங்களின் உற்பத்தியைப் பெருக்குதல் என்பது நாம் நன்றாக அறிந்ததே.

உயிரிகளின் குணங்களும் தன்மைகளும் அதன் மரபுக்கூறான டி.என்.ஏ எனும் மூலக்கூறினால் நிர்வகிக்கப்படுகின்றது. டி.என்.ஏ, ஒரு நீளமான வாக்கியத்தைப் போன்றது. உதாரணமாக, நெல்மணியின் நீளம் அதன் டி.என்.ஏயின் ஒரு குறிப்பிட்ட சொற்றொடரால் நிர்வகிக்கப் படுகின்றது. இந்த சொற்றொடரை மாற்றி மணிநீளத்தைத் திருத்தியமைக்க இயலும். முன் பத்தியில் சொன்ன தாவர ஒட்டுப் பெருக்கத்திலும் இதுதான் நடைபெறுகின்றது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மிக எளிதானது, ஒட்டுப் பெருக்கத்தில் விளையும் செடியின் பிற பன்புகளை நம்மால் ஊகிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. மரபு மாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் குறியாகக் கொண்டு அதற்கான டி.என்.ஏ பகுதியை மாற்றியமைக்க இயலும். உயிர்தொழில்நுட்ப (biotechnology) வளர்ச்சியாலும் மூலக்கூறு உயிரியல் (molecular biology) முன்னேற்றங்களாலும் இத்தகையை அடிப்படை ஆய்வுகள் இப்பொழுது ஏதுவாகியுள்ளன.

அறிவியல் முறை

இது எவ்வாறு நிகழ்த்தப் படுகின்றது ? முதலில் தொழில்நுட்பவியலார் ஒரு குறிப்பிட்ட பன்பினை இலக்காக கொள்வார்கள். உதாரணமாக நோய் எதிர்ப்பு சக்தி எனக் கொள்வோம். இதனை நிர்வகிக்கும் டி.என்.ஏ பகுதியை ஆராய்ந்து தெளிவர், இதன் பின் என்ஸைம்கள் எனப்படும் வேதிக்கலவையால் இப்பகுதியை 'வெட்டி ' எடுப்பார்கள். பின்னர் வேறு சில வேதிப்பொருள்களால் பிற உயிரி (தாவரமோ, விலங்கோ) யிலிருந்து எடுக்கப்பட்ட உயர்குண டி.என்.ஏ பகுதியை (இதுவும் ஒரு வேதிக்கலவையே) 'ஒட்டுவார்கள் '. பொதுவில் சேர்க்கப்படும் கலவை, சேருமிடத்திற்கு வேதியிணையாக (chemical pair) இருக்கும், இதனால் இவற்றின் சேர்க்கை உறுதியாகும். இதனை மேலும் நிச்சயிக்க சில என்ஸைம்களைச் சேர்ப்பார்கள்.

இதன்பின்னர் நடைபெற வேண்டியவை எல்லாம் வழக்கமான ஆய்வக மற்றும் நடைமுறை சோதனைகள். உருவாகும் தாவரத்தினைப் பெருக்குவார்கள், அதன் பல்வேறு குணங்களை ஆராய்வார்கள்; குறிப்பாக இலக்காக்கப்பட்ட பன்பின் மாற்றத்தை நன்றாக சோதிப்பார்கள். பின்னர் இச்சோதனையால் பிற பண்புகள் மாற்றமடைந்திருந்தால் அவற்றினை உணர்வார்கள். அதன்மூலம் ஏற்படக்கூடிய குறுகியகால மற்றும் நீண்ட கால விளைவுகளை ஆராய்வார்கள்.

ஏற்கனவே விற்பனையாகும் மாற்றப்பட்ட உணவுகள்

நீங்கள் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ வசிப்பவரென்றால் உங்களை அறியாமலேயே இந்த உணவு வகைகளை நீங்கள் முன்னரே உட்கொண்டிருக்க 80% சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ வசிப்பவரென்றால் இந்த சதவிதம் மிகவும் குறைவு; ஆனால் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

உணவுப் பொருள் - மாற்றப்பட்ட குணாதிசயங்கள்

தக்காளி - கெட்டியான தன்மை, அதிக சத்துப் பொருட்கள், நாட்பட சேமிக்கும் திறன்
உருளைக்கிழங்கு - நோய் எதிர்ப்புத்தன்மை
சோளம் - பூச்சிக்கொல்லியால் பாதிக்கப் படாமை
சோயா மொச்சை - களைக்கொல்லி எதிர்ப்புத்திறன்
கனோலா - நோய் தடுப்புத் திறன்

அமெரிக்க அரசாங்கத்தின் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் பரிந்துரைகளின்படி இத்தகையப் பொருட்களின் விற்பனைப் பெட்டியில் இவை 'மரபு மாற்றப்பட்ட உணவுகள் ' எனப் பொறிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் இத்தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்புமிகுந்த ஐரோப்பிய சமுதாய நாடுகளில், குறிப்பாக, பிரிட்டனில் இன்னும் கடுமையானவை. ஆனால் நாளொரு மேனியும், பொழுதொரு தாவரமுமாக வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்பத்தினால் விரைவில் இவைகளுக்கும் வழக்கமான உணவுப் பொருட்களுக்கும் வித்தியாசமில்லாமல் போகக்கூடும். தக்காளியில் வேண்டுமானால் பொறிக்கலாம், தக்காளி கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறுகளிலும், பாஸ்டா கலவைகளிலும் சற்றே கவனமாக இருந்து இவ்விதி கடைபிடிக்கப்படுகின்றதா என நோட்டமிடலாம். ஆனால், ஆயத்த உணவுக் கடைகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு வறுவலிலும், அதனுடன் வினியோகிக்கப்படும் தக்காளிக் கலவையிலும் எந்தவகையான தாவரம் பயன்படுத்தப்பட்டது எனக் கண்காணிப்பது மிகவும் கடினம். இதற்கான விதிமுறைகளை அரசாங்கங்கள் வகுக்கும்பொழுது, மொன்ஸான்டோ, கால்ஜீன் போன்ற பன்னாட்டு உயிர்தொழில் நுட்ப நிறுவனங்களும், அதனை பெருமளவில் பயன்படுத்தும் கெல்லாக்ஸ், நெஸ்லே, மக்டொனால்ட் போன்ற உணவுத் தயாரிப்பாளர்களிடமிருந்தும் அவர்களின் வணிக சாத்தியக்கூறுகளைப் பாதிப்பதாக பெரும் கூக்குரல் எழுகின்றது. ஒருவிதத்தில் இதற்கும் நியாயம் உள்ளது, இன்றைக்கு நாம் பயன்படுத்தும் தாவர மற்றும் விலங்கு உணவுகளில் 95% க்கும் மேற்பட்டவை ஒட்டுப்போடுதல், மட்டும் தீவிர இனக்கலப்பு செய்தலால் மாற்றப்பட்டவையே, இவற்றைப்பற்றி நாம் கவலைப் படுவதில்லை. நம்மூர் பொன்னி அரிசி மூட்டையில் 'இது பல்வேறு அரிசித்தாவரங்களை செயற்கை முறையில் ஒட்டி, இனப்பெருக்கம் செய்து உருவாக்கப் பட்டது ' - என ஒருக்காலும் பொறிக்கப்படுதில்லை.

இதற்கு எதிர்ப்பு ஏன் ?

இந்தத் தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள் பின்வரும் காரணங்களை முன்வைக்கின்றார்கள்:

1. சூழலிலின் ஒரு கூறினை அதற்கு முற்றிலும் ஒவ்வாதவகையில் உடனடிமாற்றம் செய்வதால் சூழல் பாதிக்கப்படுகின்றது.

உதாரணமாக, பூச்சிக்கொல்லி எதிர்ப்பு சக்தி மிகுந்ததாக உருவாக்கப்படும் சூரியகாந்திப்பூவில் வழக்கமாக அதில் தேனருந்தும் வண்டு அதற்குப் போதிய தேன் கிடைக்காததாலோ, அத்தேனின் சுவை குறைவாலோ அதனை விரும்பாமல் போகக்கூடும். நாளடைவில் போதிய உணவின்றி அவ்வண்டினம் அழியக்கூடும். அவ்வண்டின் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை கொள்ளும் வேறு தாவரங்களும் அழியக்கூடும். இச்சங்கிலி தொடர்ந்து சூழல் பெரிதும் மாற்றியமைக்கப்படக் கூடும். இத்தகைய மாற்றங்கள் தட்பவெப்ப மாறுபாடுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

2. சூழல் பன்முகம் பாதிக்கப்படும். உதாரணமாக, களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி மிக்க கோதுமை பயிரிடப்படுவதால் விவசாயிகள் அளவுக்கு அதிகமான களைக்கொல்லிகளை பயன்படுத்தத் துவங்குவார்கள். இது களைகளை முற்றிலுமாக அழிக்கும். எல்லா களைகளும் உபயோகமற்றவை எனக் கருதுவது தவறு. உதாரணமாக கிளைபோஸேட் எனும் களைக்கொல்லி அழிக்கும் களைகளில் சில மண்ணில் நுண்ணுயிரிகள் வளர உதவி செய்கின்றன. இந் நுண்ணுயிரிகள் நைட்ரஜன் எனும் வளியை மண்ணில் நிலைப்படுத்துகின்றன; மண்ணில் நைட்ரஜன் இருத்தல் பல வழிகளில் தாவரங்களுக்கு இன்றியமையாதது. களைகளை முற்றிலுமாக அழித்தலின் மூலம், களைகள் மற்றுமின்றி இதர தாவர வளர்ச்சியையும் பாதிக்கின்றது.

இது தவிர, உயர் இரகத் தாவரங்களை மாத்திரமே பயிரிடுவதால் ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் பல்வேறு இனங்கள் அருகிவிட வாய்ப்பிருக்கின்றது. பூவன், தேன்கதளி, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, சிறுமலைப்பழம், செவ்வாழை, மொந்தன், பேயன் என்று ஒருகாலத்தில் விதவிதமாக விளைந்த காவிரிக் கரைகளில் இன்று மொரிஷியஸ் ரொபஸ்டா எனும் பச்சைப் பழம் ஒன்றே பயிரிடப்படுகின்றது, இது நோய் எதிர்ப்புமிக்க, குறுகிய காலத்தில் முதிரக்கூடிய தீவிர ஒட்டு இனமாகும். இதுமாத்திரமே ஆதாயம் கருதி விளைக்கப் படுவதால் வாழையின் பல்வேறு சுவைமிகுந்த இரகங்களை நாம் இழந்து வருவது கண்கூடு. இதைவிட உயிர்தொழில் நுட்பத்தில் கண்டுபிடிக்கக்கூடிய ஒருசில தானியங்களும் தாவரங்களும் பன்மடங்கு விரைவில் மற்றவற்றை நாம் முற்றிலுமாக மறந்துவிடச் செய்யக்கூடிவை


2. மனிதர்களுக்கு உயிரிகளை மாற்றும் உரிமையில்லை. - இது சமூக, சமயம் சார்ந்த கொள்கையாகும். இத்தகைய குற்றச்சாட்டைப் பொதுவில் அனைத்து அறிவியல் முன்னேற்றங்களுக்கும் முன்வைக்கலாம்.

3. எல்லா விளைபொருட்களும் போதுமான அளவிற்கு ஆய்வக மற்றும் களச்சோதனைக்கு உட்படுத்தப் படவேண்டும். இவற்றால் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எந்த ஒரு தீங்கும் இல்லை என்பது அறுதியிடப்பட வேண்டும். - இதில் போதுமான என்பதன் வரையறை அவ்வளவு எளிதான காரியமல்ல. இதுதவிர இன்றைக்கு தாவர உயிர்த்தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள முன்னனி அறிவியலாளர்களில் 80 சதவீதத்தினர் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் மானியம் பெற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்கள். இவர்களின் ஆய்வகச் சோதனைகள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டனவாக இருக்கும் என்பதிலும் ஐயப்பாடுள்ளது.

4. இதனால் விளையக்கூடிய சமூக, பொருளாதார மாறுபாடுகள் நிச்சயிக்கப் படவில்லை - பெரும்பாலான தொழில்நுட்பங்கள் முன்னேறிய நாடுகளிலேயே உருவாக்கப் படுகின்றன. இவற்றுடன் அவற்றின் வணிக, மற்றும் அரசியல் ஆதிக்கச் சாத்தியக்கூறுகள் இணைந்தே உள்ளன.

உதாரணமாக, மொன்ஸான்டோ நிறுவனத்தின் ஒரு கண்டுபிடிப்பின்படி, மரபு மாற்றப்பட்ட, உயர்குணங்கள் கொண்ட, தானிய வகைகளின் விதைமணிகளை அவர்கள் விற்கின்றார்கள். இவற்றில் 'இறுக்கும் மரபணுக்கள் ' (terminator genes) அடங்கியுள்ளன. இதன்படி ஒருமுறை விதைத்து விளைந்ததும் அப்பயிரின் உயர்குணங்கள் அடுத்த பட்டத்திற்கும் தொடர்ந்து வருவதில்லை. வேறு வகையில் சொன்னால், உங்கள் வயலில் விளைந்த நெல்லிலிருந்து நீங்கள் விதைநெல் திரட்ட முடியாது; அவ்வாறு திரட்டப்பட்ட விதைகள் விளையாது அல்லது அவற்றின் தரம் முதல் தலைமுறை (விதை நேரடியாக வாங்கப்பட்டது) பயிரைப்போல உயர்ந்ததாக இருக்காது. இந்த இறுக்கும் மரபணுக்கள் முதல் விளைச்சலிலேய அவற்றின் பண்புகளை மாற்றிக்கொள்ளத் தெரிந்தவை. இதன்மூலம் தொடர்ச்சியாக நீங்கள் மொன்ஸான்டோவிடமே விதை வாங்குவது உறுதி செய்யப்படும்.

5. அறிவியல் கண்டுபிடிப்புகள் காப்புரிமை பெற்றவை. இதன்மூலம் நிறுவனங்கள் 'உயிருக்கு உரிமை ' பெறும் அபாயம் இருக்கின்றது.

இதனால் என்ன பயன்கள் ?

உலகின் மக்கள்தொகையில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஏழை நாடுகளில் வசிப்பவர்களே. இதில் கனிசமான பங்கினர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ளனர். இந்நாடுகளின் நிலங்களில் பெரும்பங்கு பயிரிடப்படுவதில்லை அல்லது பயிரிடுவதற்கு ஏற்றதல்ல. தரமான உணவுப்பயிர்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்யமுடியுமென்றால் இவற்றின் பஞ்சம் தீருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இன்னும் தீவிரமாகச் சொல்லப்போனால் உயிர்தொழில்நுட்பம் போன்ற முற்றிலும் புரட்சிகரமான கருவிகள் இல்லாமல், மக்கள் வெள்ளத்தின் இந்த பெரும்பங்கிற்குப் பசி தீர்ப்பதென்பது முற்றிலும் இயலாத காரியம். கடந்த சில ஆண்டுகளாக உலகில் சிசுச்சாக்காடு (infact mortality) அதிகரித்து வருகின்றது (குறிப்பாக மத்திய ஆப்பிரிக்கா), இது அரைநூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியான ஆரோக்கிய நிலைக்குத் தலைகீழாக உள்ளது - பெரிதும் கவலையைத் தரக்கூடியது. சமீபத்திய ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்கை ஒன்று இந்தியாவை தர்மசங்கடமான நிலையில் காட்டுகின்றது - இந்தியக் குழந்தைகளில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சத்துணவு அளவினைப் பெறுவதில்லை. இது தவிர பெருகிவரும் இயற்கையின் சீற்றத்தாலும் வழக்கமான பயிர்முறைகள் பலனில்லாமல் போய்வருகின்றன. இந்நிலையில் வளர்ந்துவரும் நாடுகளுக்கு உயிர்த்தொழில் நுட்பம் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள் காட்டும் நிலவரம் மிகவும் அற்புதமாக உள்ளது. உலகில் நீரும், விளைநிலமும் உயரப்போவதில்லை, இந்நிலையில் மும்மடங்கு விளைச்சளைத் தரவல்ல புதிய இரகங்கள் உலகின் பசிதீர்க்க இன்றியமையாததாகின்றன. இருக்கும் விளைநிலத்தை முற்றிலுமாகப் பயன்படுத்துவதன் மூலம் காடுகளை அழித்து விளைநிலமாக்களைத் தடுக்கலாம்; இது உயிர்பன்முகத்தை (biodiversity) நிலைசெய்யும். குறுகியகால அறுவடையை உறுதிசெய்வதன் மூலம் கட்டுக்கடங்காது தப்பிவரும் பருவங்களைப் பற்றிய கவலையைக் குறைத்துக் கொள்ளலாம். வளரும் பயிர்களை மேலும் சுவையானதாகவும் சத்துள்ளதாகவும் மாற்றுவதன் மூலம் உலகின் உணவுத்தேவையை எளிதில் நிறைவேற்றலாம். சேமிப்புத்திறனைப் பெருக்குதல் மூலம் தேவையான நாடுகளுக்கு எளிதில் ஏற்றுமதி செய்யலாம். குறைந்த பூச்சிகொல்லி மற்றும் களைக்கொல்லியைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான விவசாய முறைகளுக்கு மாறாலாம். தங்கள் முன் வைக்கப்படும் எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் இந்நிறுவனங்கள் அநேகமாகச் சரிவர பதிலளிக்கின்றன, முடியாத இடங்களில் பதிலற்ற எதிர்கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணமாக, 'உயிரிகளை மாற்றும் உரிமை மனிதனுக்குக் கிடையாது ' எனும் சமயநெறி சார்ந்த கடுமையான வாதத்திற்கு, 'நீங்கள் உட்கொள்ளும் உணவுவகையில் மனிதானால் ஒருபொழுதும் மாற்றியமைக்கப்படாத தானியங்களோ, பழவகைகளோ என்னவிருக்கிறது எனக்காட்டுங்கள் ' என்று கேட்கின்றார்கள்.

உண்மை நிலை

ஆனால் உண்மை நிலை வேறுவிதமாகக் காட்சியளிக்கின்றது. களைக்கொல்லி எதிர்ப்புதிறன் தம் தாவரங்களுக்கு உண்டென்பதால் அதிகக் களைக்கொல்லியைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்க முயலுகின்றனர். உலகின் பெரும்பகுதிக் காடுகளும், பன்முகம் கொண்ட சூழலும் பெரிதும் வளரும் நாடுகளிலேயே உள்ளன (உதாரணத்திற்கு பரப்பளவில் குறைந்த இந்தியாவின் தாவர மற்றும் விலங்குப் பன்முகத்தை அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கிரீன்பீஸ் எனும் தன்னார்வ சூழியல் பாதுகாப்புக் குழுவின் அறிக்கைப்படி இந்தியாவில் 50,000 க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் பயிரிடப்படுகின்றன, அல்லது ஒருகாலத்தில் பயிரிடப்பட்டன). பன்முகப் பாதுகாப்பு எனும் பெயரில் பயிரிடும் உரிமையையும் திறமையையும் தமக்குள்ளே பங்கிட்டு குழுவுரிமையாக்க முயற்சி செய்கின்றன. மாற்றியமைக்கப்பட்ட தாவரங்கள் முற்றிலும் எக்காலத்திலும் சிறந்ததாக விளங்கும் எனச் சொல்லுவதற்கில்லை. உதாரணமாக பசுமைப்புரட்சி காலத்தில் நெல்லைப் பாதிக்கும் எட்டு முக்கியமான வியாதிகளுக்கும், கிருமிகளுக்கும் எதிர்ப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டு ஐ.ஆர்-36 எனும் நெல் வெளியிடப்பட்டது. விரைவிலேயே இதுவரை நெல்லைத் தாக்காத இரண்டு கிருமிகளால் பாதிக்கப்பட்டு அது குட்டையாகின்றது எனத் தெரியவந்தது.

மனிதனால் மாற்றப்படாத உணவுப்பொருளைக் காட்டச் சொல்லிக் கேட்கும் நிறுவனங்களின் வாதத்தில் ஒரு அடிப்படை முரண் பொதிந்துள்ளது. இதுவரை செயற்கையாகச் செய்யப்பட்டவை எல்லாம் மரபுத்தொடரில் மேலிருந்து கீழாகச் செய்யப்பட்டவை. இரண்டு பயிர்களை ஒட்டுவதன் பலன் அடுத்த தலைமுறையில் கிடைக்கும், அதன்பின் தலைமுறைகளில் அவை மரபுவிதிகளுக்குக் கட்டுப்பட்டுத் தொடரும். உயிர்தொழில் நுட்ப மாற்றங்கள் இவ்வாறில்லை. இது இணைக்கப்பட்ட உயிர் அந்த தலைமுறையிலேயே மாற்றம் காணும். இறுக்கும் மரபணு தொழில்நுட்பம் போன்றனவற்றால் அது அடுத்த தலைமுறைக்குத் தொடராது - ஆனால் நம்மால் ஊகிக்க முடியாத பிற பக்கவிளைவுகள் தொடரக்கூடும் - அவை சில தலைமுறைகளுக்குப் பின் முற்றிலும் அபாயகரமானவையாக மாறக்கூடும்.

இன்னமொரு முற்றிலும் புரட்சிகரமான, அபாயகரமான வேறுபாடும் உள்ளது. இதுவரைப் புழக்கத்திலிருக்கும் ஒட்டுதல் முறையில் மரபு சம்பந்தமுள்ள இரண்டு உயிரிகளையே இணைக்க முடியும் - உதாரணமா நெற்பயிருடன் மாங்கன்றை ஒட்டிட முடியாது. ஆனால் உயிர்தொழில் நுட்பத்தில் இது சாத்தியம், ஏன், இதற்கு ஒருபடி மேலேயே போய் தாவரங்களின் டி.என்.ஏ-வைப் பிளந்து அதில் மனித டி.என்.ஏ துண்டை ஒட்டிட இயலும். இதன்மூலம் எண்ணிப்பார்க்கவியலாத சாத்தியங்கள் புலப்படுகின்றன. விளையும் தாவரம் பலதலைமுறை இயற்கை மரபு மாற்றங்களுக்குப் பிறகு என்னவாக மாறும் என்பது யாராலும் ஊகிக்க முடியாதது.

கட்டுரைத் தொடக்கத்தில் குறிப்பிட விடலைத் தொழில்நுட்பம் எனும் தொடருக்கு இப்பொழுது விளக்கம் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். உயிர்தொழில் நுட்ப வளர்ச்சியில் இது முக்கியமான கட்டமாகும் - நல்லனவாகவும் தீயனவாகவும் மாறுவது இந்தப் நிலையில்தான். இதில் நாளொரு வளர்ச்சியும், பொழுதொரு வேதனையும் தவிர்க்க முடியாதவை. எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆக்கமும் உண்டு அழிவும் உண்டு. பலசமயங்களில் நாம் ஆபத்தைத் தெளிந்து தவிர்க்கின்றோம். சிலசமயங்களில் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற விலைகளைக் கொடுத்து உண்மைகளை அறிந்து கொள்கின்றோம். எனினும் இயற்கையை அறியும் மனிதனின் அடிப்படை உணர்வுக்கு எப்பொழுது அழிவு கிடையாது. இது மனிதனுக்கும் இயற்கைக்குமான ஓட்டப்பந்தயம் எனக்கருதுவதைவிட மனிதனும் இயற்கையுமாக கால்களைப் பிணைத்துக்கொண்டு மூன்றுகால் ஓட்டம் ஓடுவதாகவே கொள்ளவேண்டும், மனிதன் வேகமாக ஓடினால் இயற்கை அவனைப் பின்னுக்கிழுக்கின்றது. சக்திமிக்க இயற்கை இழுக்கும் திசையில் அவன் செல்லாவிடில் அவனுக்கு கால்வலி நிச்சயம். எல்லா கட்டங்களிலும் இயற்கைக்கு எதிராக ஓடத்துவங்கினால் கால்வலி ஏற்பட்டு ஓட்டம் மட்டுப்படுத்தப்படுவது உறுதி.