நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, June 22, 2012

மதுக்கடைக்கு பூட்டு போடும் போரட்டம் 11

மதுக்கடைக்கு பூட்டு போடும் போரட்டம்
11



பாம.க மதுவுக்கு எதிராக தொடர்ந்து பல ஆண்டுகளாக  பொதுமக்களிடமும் அரசியல் தலைவர்களை ஒருங்கிணைத்து மது ஒழிப்பு மாநாடு நடத்திவருகிறது

தமிழகத்தில் மதுவுக்கு எதிரான கட்சி என்றால் அது பாமக மட்டும் தான் என்பது இவ்வுலகம் அறிந்தது..

























டாஸ்மாக் வரலாறு


தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம்

டாஸ்மாக்
வகை
தொடக்கம்
1983
தலைமையகம்
முக்கியமானநபர்கள்

மாண்புமிகு
 செல்வி ஜெயலலிதா     அவர்கள்,முதலமைச்சர்,தமிழ்நாடு. 
  அவர்கள்
(தமிழ்நாட்டின் சுங்க வரி மற்றும்மதுவிலக்குத் துறை அமைச்சர்))
மதுபான வர்த்தகம் (மொத்தமற்றும் சில்லறை விற்பனை)
14,965 கோடி ரூபாய் (2010-11நிதியாண்டில்)
ஊழியர்கள்
36,000




























டாஸ்மாக் (டாசுமாக்TASMACஎனப்படும் தமிழ் நாடு மாநிலவாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporationதமிழ் நாட்டில்மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம்இந்நிறுவனம்தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறைவர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.



வரலாறு

தமிழ்நாடு மாநிலவாணிபக் கழகம், 1983 ஆம்ஆண்டு எம்ஜி.ராமச்சந்திரன் (எம்ஜிஆர்)தலைமையிலான அதிமுகஅரசாங்கத்தால்,தமிழகத்தில்மதுவகைகளின் மொத்தவிற்பனைக்காகதொடங்கப்பட்டதுஇந்தியநிறுவனச் சட்டம் - 1956 இன் படி இந்நிறுவனம் மாநில அரசின்கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது.தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்துவந்துள்ளதுமுதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னைமாகாணத்தில் சிராஜகோபாலச்சாரியின் காங்கிரசுஅரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது.அன்றிலிருந்து 2001 வரை, 1971-74, 1983-87, 1990-91 ஆகிய சிறு காலஇடைவெளிகளைத் தவிர தமிழகத்தில் மது விற்பனை தடைசெய்யப்பட்டிருந்ததுவிஸ்கிபிராந்திரம்ஓட்காவைன் போன்றஇந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளும் கள்,சாராயம் போன்ற உள்நாட்டு மதுவகைகளும் தடைசெய்யப்பட்டிருந்தன. 2001 இல் மதுவிலக்கு விலக்கப்பட்டபோது,மாநில அரசு டாஸ்மாக் நிறுவனத்தை மீண்டும் மொத்த விற்பனைநிறுவனமாக பயன்படுத்தியதுசில்லறை விற்பனைக்குமதுக்கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டனஆனால் பல கடைமுதலாளிகள் தங்களுக்குள் குழு அமைத்து செயல்பட்டதால்(cartelisation) கடைகள் குறைவான ஏலத்திற்குச் சென்றனஇதனால்அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதாம்..
இதனை எதிர்கொள்ள2002-03 ஆம் நிதியாண்டில் அரசு ஏலமுறையை மாற்றியமைத்தது.ஒரே சீரான வருவாயுள்ள மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டு பின்குலுக்கல் முறையில் பிரித்தளிக்கப்பட்டனஆனால் முதலாளிகள்இம்முறையை எளிதில் முறியடித்து விட்டனர்ஏலம் முடிந்தபின்பிறருக்காக விட்டுக் கொடுத்தல்பல கடைகளை முன்திட்டமிட்டபடி எவரும் ஏலம் எடுக்காமல் விடுதல் போன்றஉத்திகளைக் கையாண்டனர்எனவே மாநில அரசு சில்லறைவிற்பனையையும் தானே செய்ய முன் வந்ததுஅக்டோபர் 2003 இல்தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937 இல் ஒரு திருத்தத்தைசெய்ததன் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு மதுவிற்பனையில் மாநிலம் முழுவதும் ஏகபோக உரிமையை அளித்தது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசால் செய்யப்ப்பட்டஇம்மாற்றம் நவம்பர் 29, 2003 இல் அமலுக்கு வந்ததுதொடக்கத்தில்திமுக இதை எதிர்த்தாலும்2006 ஆம் ஆண்டு மு.கருணாநிதிதலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர்தமிழ்நாடு அரசுநிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் ஏகபோக மதுவிற்பனையால் அரசுக்கு அதிகமான வருவாய் கிட்டியதால்இம்முடிவை மாற்ற விருப்பமின்றி தொடர்ந்து செயல்படுத்தி வந்ததுஇதனால் மது விற்பனையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்தனியுரிமை தொடர்கிறது.





தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஒரு மாநில அரசு நிறுவனம்.தமிழ் நாடு அரசே இதன் நூறு சதவிகித உரிமையாளர்இந்நிறுவனம்அரசின் மதுவிலக்கு மற்றும் சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில்இருந்து வருகிறதுஇதன் இயக்குநர் குழுமத்தில் உள்ளவர்கள்அனைவரும் இந்திய ஆட்சிப் பணி (..அதிகாரிகள்இதன்தலைமை அலுவலகம் சென்னைஎழும்பூரில் உள்ள சென்னைபெருநகர் வளர்ச்சி குழுமக் கட்டிடத்தில் அமைந்துள்ளதுதமிழ்நாடுமாநில வாணிபக் கழகம் ஐந்து நிர்வாக மண்டலங்களாகப்பிரிக்கப்பட்டுள்ளதுசென்னைகோவைமதுரைதிருச்சி மற்றும்சேலம் ஆகிய இவ்வைந்து மண்டலங்களும் மண்டலமேலாளர்களின் தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றனஇவைமேலும் 33 வருவாய் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுஒவ்வொருமாவட்டமும் ஒரு மாவட்ட மேலாளரின் கீழ் இயங்குகின்றது.

2010 ஆம் ஆண்டுவாக்கில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்குதமிழகமெங்கும் 6500 மதுக்கடைகளும், 41 சேமிப்புக் கிடங்குகளும்உள்ளனஇந்நிறுவனத்தில் மொத்தம் 36,000 ஊழியர்கள்பணியாற்றுகின்றனர்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுக் கடைகளுக்கு தனிப்பெயர்கள் எதுவும் கிடையாதுமுன்பு டாஸ்மாக் கடை என்றுபெயர்ப்பலகை வைக்கப்பட்டதுடன் அவ்வாறே அழைக்கப்பட்டன.பின்னர் இது கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழிமாநாட்டை ஒட்டி "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்என்கிறபெயர்ப்பலகைக்கு மாற்றப்பட்டதுஇக்கடைகளில் அதிகமானகடைகளில் மது அருந்த தனி இடவசதி (பார்செய்து தரப்பட்டுள்ளது.

இந்த மது அருந்தும் இடம் மற்றும் சிறு உணவக வசதிகளை செய்துஅதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளும் உரிமை தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறதுஇந்த உரிமை ஆண்டுதோறும் தனிஏலம் மூலம் விடப்படுகிறதுஇக்கடைகள் பொது மக்களால் "வைன்ஷாப்என்று பரவலாக வழங்கப்பட்டாலும் பிற மதுவகைகளும்இங்கு விற்கப்படுகின்றன.

டாஸ்மாக்கின் ஆண்டு வருவாய்
நிதியாண்டு
வருவாய்
(
கோடிகளில்)
மாற்றம்
2002 - 03
2,828.09
2003 - 04
3,639
28.67%
2004 - 05
4,872
33.88%
2005 - 06
6,086.95
24.94%
2006 - 07
7,300
19.93%
2007 - 08
8,822
20.85%
2008 - 09
10,601.5
20.17%
2009 - 10
12,491
17.82%
2010 - 11
14,965
19.80%









அரசு மதுக்கடைகளைகையகப்படுத்தியபின்டாஸ்மாக்கின் வருவாய்ஆண்டுதோறும் 20சதவிகித அளவில்அதிகரித்து வந்துள்ளது.இந்நிறுவனம்தொடங்கப்பட்ட 1983 ஆம்ஆண்டில் இதன் மொத்தவருவாய் 183 கோடிரூபாயாக இருந்தது.சில்லறை விற்பனையில்ஈடுபடுவதற்கு முந்தயநிதியாண்டில் (2002-03) இதன் மொத்த வருவாய் 3499.75 கோடிகள்.இதில் அரசுக்குக் கிட்டிய வரி வருவாய் 2,828.09 கோடி.மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்த பின் 2003-04 நிதியாண்டிற்கானவரி வருவாய் 3,639 கோடியாக உயர்ந்தது.

 இதில் சுங்கவரியும்விற்பனை வரியும் தலா 50 சதவிகிதம்.நிர்வாகச் செலவுகளையும்பணியாளர் ஊதியத்தொகையையும்கழித்த பின்னர்மிச்சமுள்ள வரி வருவாய் முழுக்க அரசுக்குலாபமேஏனெனில் அரசே மொத்த விற்பனையாளராகவும்,சில்லறை விற்பனையாளராகவும் உள்ளதால்இரு விலைகளுக்கும்உள்ள வித்தியாசம் அரசின் கைக்கே வந்து சேர்கிறதுஅடுத்த நான்குநிதியாண்டுகளில் வரி வருவாய் முறையே 4872, 6087, 7300 மற்றும்8822 கோடி ரூபாய்களாக இருந்தது. 2005-06 ஆம் நிதியாண்டில் 23ஆண்டுகளாக நிலைத்து வந்த மது விற்பனை வருவாய் சாதனைமுறியடிக்கப்பட்டது. 2008-09 நிதியாண்டில் 10,601.5 கோடிகளாகஉயர்ந்து, 10,000 கோடி இலக்கு எட்டப்பட்டது. 2009-10 மற்றும் 2010-11நிதியாண்டுகளில் வருவாய் முறையே 12,491 மற்றும் 14,965கோடிகளாக இருந்ததுமது விற்பனையில் 80 சதவிகிதம் விஸ்கி,பிராந்திரம்வோத்கா போன்ற "ஹாட்மது வகைகளும்,மிச்சமுள்ள 20 சதவிகதத்தை பீர்களும் பிடித்துள்ளன.


 வரி வருவாயைத் தவிரபார் உரிமங்களை ஆண்டுதோறும்தனியாருக்கு ஏலம் விடுவதன் மூலமும் அரசுக்கு வருவாய்கிடைக்கிறதுமாநிலத்தில் பெருகி வரும் குடிப்பழக்கமும்,அவ்வப்போது நிகழும் மது விலையேற்றமும் இச்சீரான வருவாய்வளர்ச்சிக்கு காரணங்களாகக் கருதப்பட்டு வருகின்றன

மக்களுக்கு இலவசங்களை அள்ளி தந்து வாக்கு வங்கிகளை பேர  திராவிட கட்சிகள் மதுபான கடைகளை நடத்தி வருகின்றன...

மதுக்கடைகளுக்கு எதிராக பல வருடங்களாக போரட்டங்கள் நடத்தி மது விலக்கு மாநாடு நடத்தி மக்களை நல்வழிபடுத்தும் முயற்ச்சியில் மருத்துவர் அய்யா பாமக வின் மூலம் தொடர்ந்து போரடி வருகிறார் 

அதன் தொடர்ச்சியாக வரும் சூலை மாதம் 2012 வருடம் 2012 ஜூலை-11 - புதன் கிழமை அன்று பாட்டாளி மக்கள் கட்சி மகளிரணியினர் நடத்தும் 
மாநிலம் தழுவிய அளவிலான மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் 
போராட்டக் களத்திற்கான முழக்கங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.