நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, February 2, 2011

வன்னியரை பகைத்தவன் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை-திமுக ராச கைது

வன்னிய சங்க தலைவர் செ.குருவை எதிர்த்த திமுக வை சேர்ந்த ஊழல் பெருச்சாளி ராச கைது இதன் மூலம் வன்னியனை எதிர்த்தவன் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை என்பதை காலம் இவ்வுலகிற்க்கு மீண்டும் உணர்தியுள்ளது.
 
 
ரூபாய், 1.76 லட்சம் கோடி, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா மற்றும் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா ஆகிய மூன்று பேர், சி.பி.ஐ., அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜா (வயது 47), மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக, 2007, மே 18ல் பதவியேற்றார். இடையில் நடந்த தேர்தலில், 15வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னும், மீண்டும் அதே பதவியில் தொடர்ந்தார்.இவர், அமைச்சராக பதவி வகித்த காலத்தில், 2008ல், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு நடைபெற்றது. இந்த ஒதுக்கீட்டில், ஏல முறை பின்பற்றப்படவில்லை என்றும், முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற முறை பின்பற்றப்பட்டதால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து எழுந்த சர்ச்சையால், 2010 நவம்பர் 14ம் தேதி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜா விலகினார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக, ராஜாவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான கட்டடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைக்குப் பின், மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.அதே நேரத்தில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், வரும் 10ம் தேதிக்குள் விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக, கடந்த டிசம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில், ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், பல கேள்விகள் ராஜாவிடம் கேட்கப்பட்டன. பல விஷயங்கள் குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது.ராஜா மட்டுமின்றி, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய முன்னாள் தலைவர் பிரதீப் பைசல், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர்கள் சித்தார்த்த பெகுரா மற்றும் மாத்தூர், கம்பெனிகளின் தொடர்பு அதிகாரியும், வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் தலைவருமான நிரா ராடியாவிடமும் விசாரணை நடந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் கடந்த திங்களன்று மூன்றாவது முறையாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. நேற்று முன்தினம், ராஜாவின் சகோதரர் ஏ.கே.பெருமாளிடம் விசாரணை நடைபெற்றது.

கைது: இதைத் தொடர்ந்து, நேற்று காலை, சி.பி.ஐ., அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட ராஜாவிடம் நான்காவது முறையாக விசாரணை நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து ராஜாவையும், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா மற்றும் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா ஆகியோரையும் கைது செய்தனர்.சில தொலைத்தொடர்பு கம்பெனிகள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்காக, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது மற்றும் டெண்டர் நடவடிக்கைகளை மாற்றி அமைத்தது என, இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது குறித்து சி.பி.ஐ., சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "விசாரணையில் இந்த மூவரும் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் கைது செய்யப்படுகின்றனர். வழக்கமான நடைமுறைகளை மீறி, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். இவர்கள், கிரிமினல் கூட்டுசதி புரிந்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 120பி மற்றும் லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்' இதனை வன்னிய இனத்ததை சார்ந்தவர்கள் தங்களின் மகிழ்சியை ஒருவருக்கு ஒருவர் குறுந்தகவல் மூலம் பறிமாறி மகிழ்சியை கொண்டாடினார்கள்..


எவனாக இருந்தாலும் வன்னியனை சீண்டினா மவனே ஆப்புதாண்டா.....

No comments: