நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, January 23, 2011

நாளைய சமுதாயம் நன்றி சொல்ல....

நாளைய சமுதாயம் நன்றி சொல்ல..

எட்டி பிடிக்க முடியாமல்
உயரும் விலைவாசிகள்
தட்டிகேட்க முடியாமல்
தொடரும் ஊழல் பட்டியல்...

தள்ளாத வயதிலும்
பொல்லாத பதவி ஆசை
தோழியின் நலக்காகவே
கொட நாட்டு ஓய்வுகள்...

பேனரில் மட்டும் மீசை முறுக்கும்
நடிகர்களின் கட்சிகள்
கொள்கையற்ற மந்தைகளாய்
மானகெட்ட அரசியல் வாதிகள்...

குடியை கொடுத்துவிட்டு
மருத்துவ காப்பீட்டு திட்டம்
இனத்தை அழித்துவிட்டு
செம்மொழி மாநாடு...

குத்தாட்டமிட்டு கூத்தடிக்கும்
திரை உலகிற்க்கு பரிவட்டம்
ஜாமினில் உலா வரும் சாமியார்களின்
கால்களில் பக்தர்கள் கூட்டம்...

வறட்சி வெள்ளம் கொலை கொள்ளை
லஞ்சம் ஊழல் வன்முறை கற்பழிப்பு
ஆள் கடத்தல் கள்ள காதல் எதையும்
தடுக்க சக்தியில்லாத கடவுள்கள்...

நண்பர்களே என்று மாறும் இந்த மனித குளம்?
அறிவியல் வளரும் உலகில் அறிவு வளர வேண்டும்...
பொய்யறிவு மறைந்து மெய்யறிவு காண...
குடியை கெடுக்கும் குடியை விரட்ட...

கொள்ளையற்ற அரசியல் வாதிகளுக்கு சமாதி கட்ட...
தமிழகமே தலைகீழாய் மாறி
எங்கும் சமத்துவம் மலர...

மருத்துவர் அய்யா வழி நடப்போம்
மருத்துவர் சின்னய்யாவின்
சொல் படி நடப்போம்....

No comments: