நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, January 23, 2011

கூத்தடிகள் எல்லாருக்கும் தான் ஆசை.....

கூத்தடிகள் எல்லாருக்கும் தான் ஆசை.....

ஆகா....கெளம்பிட்டாருய்யா....கெளம்பிட்டாரு.........ன்னு இப்போ ஒருத்தர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் தான் புரட்சிக் கலைஞர் (எழுச்சிக் கலைஞர் ??) விஜயகாந்த். தமிழ் நாட்டு அரசியல படிக்க ஆரம்பிச்சதிலிருந்து எனக்கு புரட்சி, எழுச்சி இதுக்கெல்லாம் அர்த்தம் மறந்து போச்சு. என்ன சொல்றாங்களோ அதை கேட்டுக்க வேண்டியது தான். இவர் எதுக்கு அரசியலுக்கு வந்திருக்கார்னு அவருக்கே தெரியலை.

லஞ்சத்தை ஒலி(ளி, ழி??)ப்பேன், ரேஷன் அரிசியை வீட்டுக்கு கொண்டு வருவேன், அப்படி இப்படின்னு பண்ருட்டி ராமச்சந்திரன் எழுதி கொடுப்பதை அப்படியே 'வல்லரசு' பட டயலாக் மாதிரி போற இடமெல்லாம் கண்கல்(ள்??) சிவக்க பேசிட்டு வர்றார். இவர் கட்டின திருமண மண்டபத்துக்கு ஒரு ஆபத்துன்னு செய்தி வந்ததும், கலைஞர் வீடு தேடி ஒடுனவரை, கலைஞர் போட்டோ எடுத்து பத்திரிக்கைக்கு கொடுத்துட்டாராம். ஆக தன்னோட சொத்தை மக்களுக்கு தானமா கொடுப்பேன்னு சொல்றவர், எதுக்கு (அவர் பாஷைலயே சொன்னா) வீடு தேடி பாக்கறார்? அப்போ தன்னுடைய சொத்துக்கு ஒன்னுன்ன உடனே அதை காக்கக் கூடிய ஒருத்தரை தேடிப் பார்த்துப் பேசி, தன்னுடைய சொத்து மட்டும் காப்பாதிக்கணும்னு நினைக்கிற ஒருத்தர், ஆட்சிக்கு வந்து லஞ்சத்தை ஒலி(ளி ??ழி)க்கப் போறாறாம். அட்ரா சக்கை.

அடுத்து அய்யா ஆரம்பிச்சிருக்கிறது, ரேஷன் அரிசி. வீடுதேடி அரிசி வரும்னு சொல்றார். இதை முதல்வன் பட டயலாக் மாதிரி நம்பலாம். இதை எல்லாம் சரியா செய்வாங்க. ஏன்னா எல்லாரும் கை ஏந்துற நெலமைல இருந்தாதானே, நம்ம வண்டி ஓடும். ஒரு படி அரிசில தானே தி.மு.க கிட்ட தமிழ் நாடே விழுந்தது.

மூணாவது, எல்லா மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் தொடங்குவேன் என்பது. இது எனக்கு பிடிச்ச சமனிலைக் கொள்கை. ஆனா யார் சொல்றாங்க, எப்படி செய்வாங்க என்பதுதான் முக்கியம். இவர் நெத்தி வியர்வை நிலத்தில் சிந்தி சம்பாதிச்ச கோடிக்கணக்கான ரூபாயில கட்டுன, கல்யாண மண்டபம், காலேஜ் இன்ன பிற நிறுவனங்கள் இருப்பது எல்லாம் சென்னை, செங்கல்பட்டுல. மூச்சுக்கு முன்னூறு தரம் நான் மதுரைக்காரன்! மதுரைக்காரன்!ன்னு சொல்றீங்களே, அந்த காலேஜ உசிலம்பட்டீல கட்டுனா என்ன? அங்க கட்டுனா பணக்காரன் வந்து படிக்க மாட்டான், பாரதி ராஜா சூட்டிங் தான் நடக்கும்னு நீங்க சொல்றது கேக்குது. ஆக பி.ம்.டபிள்யூ, போர்டு எல்லாம் இளிச்சவாயங்க. முதல்ல அந்த பகுதிக்கு ஏற்ற தொழிற் சாலை என்னன்னு கண்டுபிடித்து, அதற்க்கு ஏற்ப அடிப்படை வசதிகளை ஏற்கனவே உள்ள விவசாயம் பாதிக்கப்படாம செயல்படுத்துவேன்னு நீங்க சொல்லீருந்தா, பாராட்டலாம். வாய்க்கு வந்த படி எல்லாம் பேசி நடத்த அரசாங்கம் என்ன ரசிகர் மன்றமா?

அடுத்து "அன்னைத் தமிழைக் காப்போம், அன்னிய மொழியைக் கற்ப்போம்"னு நீங்க ஆரம்பிச்சிருக்றது. நீங்க யார் சொல்லி இதை பேசுறீங்கன்னு நல்லாவே தெரியுது. பளிச்சுன்னு வெளிப்படையா இந்தியை கட்டாயப் பாடமாக்குவேன்னு சொல்லி பாக்கிறது? இந்தி படிக்காம, ஆங்கிலப் புலமை பெற்று உலகமெங்கும், தமிழர்கள் கணிப்பொறித்துறையில் வெளுத்துக் கட்டுவதும், இந்தி படித்த பீகார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம்,ஓரிசா,ராஜஷ்தான், இமாச்சலப் பிரதேசம், இன்னும் எத்தனையோ மாநிலங்கள் அடிப்படை வசதிகள் கூட பெறாமல் இருப்பதையும், உங்களுக்கு, திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்த "அவா" வசதியா மறந்திருப்பா.


கனவு காண எல்லோருக்கும் உரிமை உள்ளது போல, அரசியலுக்கு வரவும் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் சொந்தமாக, கொள்கை, ஐந்து வருடத்திற்கான திட்டங்கள்,தொலை நோக்குப் பார்வை, நிர்வாகத் திறன், நிதி நிலை அறிவு, தலைமைப் பண்பு (கோடம் பாக்கம் கட்டப் பஞ்சாயத்து அல்ல) இவைகளை வளர்த்துக் கொண்டு வாருங்கள். எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை ஏமாந்ததின் பலனை இருபது வருடமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 


பிறகு கருணாநிதி, ஜெயலலிதா என கூத்தடிகள் நாட்டை ஆண்டு சுரண்டினது போததா நீங்க வேறவா... ம் ஆகாட்டும் ஆகாட்டும்


No comments: